கோகுலத்து கண்ணன் லீலைகளை கோபியருடன் கை கோர்த்து கண்டு ரசிக்கவில்லையே என்று ஏங்கி தவித்தேன் நானும் வந்தது அந்த நாளும் தந்தவன் கண்ணன் நீ ஒரு கண்ணனை நினைத்து புலம்பி தவிக்காதே பெண்ணே உன்னை சுற்றி உள்ள குழந்தைகள் என் மறுஉரு என நினைவில் கொள் நான் வெண்ணை திருடி உண்டேன் அவன் மண்ணை திருடி ருசிக்கிறான் சிரித்து சிரித்து மயக்குபவன் நான் மட்டும் அல்ல அவனும் சிரிக்க சிரிக்க பேசி உன் சிந்தையை மயக்குகிறானே சோர்ந்து இருக்கும் நேரத்தில் மடி அமர்ந்து உன் கரம் தடவி புத்துணர்ச்சி ஊட்டும் அவனும் மாயக் கண்ணனே இல்லாததை நினைத்து ஏங்கி தவிப்பதை விட அருகில் இருப்பதை உணர்ந்து அனுபவிக்க கற்று கொள் என்று உரைத்தான் அந்த கீதை சொன்ன மாதவன்