ஒரு மிருகக்காட்சி சாலையில், இறந்தது இருந்த ஒரே கொரில்லாக் குரங்கு ஒன்று! கூட்டம் குறையுமோ என்ற அச்சத்தினால், கூறினார் ஒரு யோசனையை ஓர் அதிகாரி! மனிதன் ஒருவனை அழைத்து, வேடமிட்டு, இனிதே உலவவிடலாம் கொரில்லாவாக! பட்டினியால் வாடிய படிக்காத ஒரு ஏழை, சட்டென ஒத்துக்கொண்டான் வேடம் இட! நாட்கள் நகர்ந்தன; இவனும் அங்கு வரும் ஆட்கள் மகிழப் பல சாகசங்கள் செய்தான்! ஒரு நாள் மிக உயரமாகக் குதிக்க முயல, ஒரு நொடியில் சென்று விழுந்துவிட்டான், அடுத்து இருந்த சிங்கத்தின் கூண்டினுள்ளே! எழுந்து சிங்கம் தன்னருகே வந்துவிட, மிக நடுங்கிப் போனவன். 'உதவி! உதவி!' என்று நடுங்கும் குரலை எழுப்ப முயல, சிங்கமோ மெதுவாய் அவன் தோளிலே கை வைத்து, மெதுவாய்க் அவன் காதிலே கிசுகிசுத்தது, 'பதறாதே நண்பனே! நானும் உன்போலவே தவறாமல் வேடம் இடும் மானிடனேதான்! :hide: