ஒய்யாரமாய் பறந்த பறவை ஒன்று தலை கவிழ்ந்து தனியே அமர்ந்து கூடு நிறைந்த பறவைகளுடன் கூடி மகிழ்ந்து உண்டு உறங்கி குதூகலமாக கழித்த நாட்களை நினைத்து குமுறி கொண்டிருக்கும் அவல நிலை இது சென்றதை நினைத்தால் வலியே மிஞ்சும் என அறிந்தும் அவதிப் படும் அறிவிலிப் பறவை இது
தனிமை எதற்கு அன்பு பறவைகள் உடனிருக்கு துயர் துடைக்க நீட்டும் கரங்களும் இங்கிருக்கு கவலைகள் மறந்து மீண்டும் மகிழ்வோடு வலம் வாருங்கள் அன்னையே
லக்ஷ்மி மிக்க நன்றி .உங்கள் கரங்கள் பிடித்தே என் காலம் ஓடுகிறது .அன்பு நெஞ்சங்கள் அருகிருக்கும் போது அமைதி அடையும் உள்ளம் மீண்டும் அலை பாய்கிறதே .
Hello @periamma I love Tamil poems but haven't gotten comfortable with writing tamil words in keyboard. That is why the response in English.
@Jey மொழி ஒரு பிரச்னையே அல்ல.பாராட்டு கிடைத்தால் சந்தோஷமே .இங்கு கவிஞர்கள் பலர் மிக சிறந்த கவிதைகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .அவற்றையும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள் .நன்றி