1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் கவிதை முயற்சிகள்

Discussion in 'Regional Poetry' started by saidevo, Aug 11, 2012.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female

    Sir,

    Just wanted to share this. As I was reading your beautiful translation of the famous so called Creation verse from Nasadeeya Suk tam and responding to your post the other day, I was deeply thinking about my grandfather, a great scholar with deep knowledge of our Hindu philosophies and well versed in our Vedanta and Upanishad . He used to constantly read them and take notes and also would recite them for the benefit of us . I grew up in his household of values and love. As I was immersed so deeply in his thoughts and felt connected with him in an astral level here in USA, my grandfather passed away peacefully in his sleep in INDIA.

    Later when my people back home conveyed the sad news to me, I had no doubt that he loved me with all his heart and was saying goodbye to me in the most deserving way. I also believe that he has renounced his physical abode for one last time and his Atman has reached its Supreme Abode of the Almighty .

    There could have never been an opportunity like this for me to feel connected with and blessed by my thatha's departing Soul. Thank you for that post.


    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    You are blessed to have had such grandfather. And such spiritual sAdhana. Thank you for sharing your experience.

    ramaNi
     
    1 person likes this.
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    இன்றைய வல்லமை இதழில்:
    தெயà¯à®µ தரிசனமà¯

    தெய்வ தரிசனம்
    04. பிரமனுக்கேன் ஆலயமில்லை?
    (தரவு கொச்சகக் கலிப்பா)

    [காஞ்சி மகாபெரியவர் உரையிலிருந்து திரட்டிய செய்திகள்]

    நான்முகனாய் நாரணனின் நாபியிலே தோன்றியுமே
    நான்முகமும் எப்போதும் நான்மறையை ஓதியுமே
    வான்முதலாய் வைத்துலகும் மானிடரும் ஆக்கியுமே
    ஏனோநான் முகனுக்கே எங்கணுமே கோவிலிலை! ... 1

    படைப்பின்றேல் காப்பில்லை பண்ணியதை அழிப்பதில்லை
    உடைத்தழிக்கும் பித்தனவன் உன்னதமாய் ஆலயத்தில்
    நடைமுறையைக் காத்தருளும் நாரணனும் ஆலயத்தில்
    படைப்புதரும் பிரமனுக்கோ பண்ணில்லை கோவிலிலை! ... 2

    வீட்டினிலே வழிபாட்டில் விடையவனும் விட்டுணுவும்
    பாட்டினிலே புகழ்ந்தேத்தப் பலதெய்வம் படமாக
    நாட்டினிலே எல்லோரும் நாடுதெய்வ வழிபாட்டில்
    ஏட்டினிலே செய்கையிலே இடமில்லை பிரமனுக்கே! ... 3

    மூன்றுதேவர் பத்தினியும் முறையாக வழிபாட்டில்
    ஊன்றிநிற்க உமையன்னை உள்ளத்தில் திருமகளாம்
    தோன்றுஞானம் தந்திடவே தொழுதிடுவோம் நாமகளை
    ஆன்றவனாம் அந்தணனாம் ஆரணனுக் கேதுமிலை! ... 4

    பிரும்மமெனப் பரம்பொருளே பேர்பெற்றி ருந்தாலும்
    பிரும்மவித்தை பேரெனவே பிரும்மஞானம் ஆனாலும்
    பிரும்மானந் தம்நிலையாய் பிரும்மவித்தை யானாலும்
    பிரமனுக்கோ கோவிலிலை பேர்சொல்லிப் போற்றவிலை! ... 5

    ஆரணத்தின் ஒலியாலே அனைத்துலகும் உருவாக்கும்
    ஆரணனாய்த் தந்தையென அனைத்துயிர்க்கும் வேராகிச்
    சீரணவும் பிரமனுக்கோ சிறப்புவழி பாட்டிலையே!
    காரணத்தைத் விளக்குவரே கருணைமிகு காஞ்சிமுனி. ... 6

    [சீரணவும் = சீர் பொருந்திநிற்கும்]

    பிறவியிதைத் தருகின்ற பிரமனுக்கா வழிபாடு?
    பிறவியிதே ஈனமெனப் பேரின்ப நிலையிருக்க
    பிறவியிதன் போக்கினையே பிரம்மலிபி தலையெழுத
    பிறவியிதைத் தருகின்ற பிரமனெவண் வழிபடவே! ... 7

    நம்பிறவிக் காரணமாய் நான்முகனெங் ஙனமாவான்?
    நம்பிறவி அமைவதெலாம் நம்வினைகள் துய்ப்பதற்கே
    நம்பிறவிப் போக்கொன்றே நம்தலையில் எழுதிவைக்கும்
    அம்பாவான் பிரமனவன் அம்பெய்த வர்நாமே! ... 8

    பாலனத்தைச் செய்பவராய்ப் பரந்தாமன் ஆனாலும்
    சூலத்தாற் கொல்பவராய்ச் சொக்கனவர் ஆனாலும்
    ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
    கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 9

    [பாலனம் = பாதுகாப்பு; ஏலுவரே = தகுதியாவரே; குரவன் = பிரமன்]

    பாலனத்தைச் செய்பவளாய்ப் பாற்கடலாள் ஆனாலும்
    சூலத்தாற் கொல்பவளாய்த் துர்க்கையவள் ஆனாலும்
    ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
    கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 10

    பரம்பொருளால் ஆனாலும் பரம்பொருளய்த் தோன்றாத
    பிரமனைமற் றிருவருடன் பேசுமுறை இல்லையென
    உருவமேதும் ஆலயத்தின் உள்ளறையில் வைக்காமல்
    கருவறைவி மானத்தில் காணவைத்த உருவெனவே! ... 11

    மூவரிலே ஒருவரென முன்னிற்கும் பிரமன்பேர்
    ஆவதெவண் என்பதனை ஆன்றமுனி சொன்னசெய்தி:
    பூவுலகம் அண்டமெலாம் பொருந்திநிற்கும் பரம்பொருளே
    மேவிவரும் லீலையென வேதாவைச் செய்ததுவே. ... 12

    [வேதா = பிரமன்]

    ஆடவர்பெண் சேர்க்கையிலே அவனியெலாம் செய்பிரம்மம்
    தோடணியான் நாமகளைச் சோதரராய்ச் செய்ததுடன்
    நீடுமாலும் அம்பாளும் நிலையினிலே சோதரராய்
    நாடுகின்ற போகநிலை ஞானநிலை தருவதற்கே. ... 13

    [தோடணியான் = காதில் தோடணிந்த சிவன்; நீடுமால் = நிலைத்திருக்கும் திருமால்]

    உலகியலும் ஞானமுமே ஒன்றாகக் கலப்பதெனத்
    தலைப்பட்ட பிரம்மமது தம்பதியாய்ச் சோதரர்க்கு
    விலையொன்றைத் தருவதற்கே வேதாவை இலக்குமியை
    நிலைபேற்றில் சோதரராய் நிற்பதெனச் செய்ததுவே. ... 14

    அரன்-உமையாள் அரி-கமலை அயன்-வாணி எனமூன்றாய்
    உருவான தம்பதியில் முதலிருவர் முழுமுதலாய்
    இருந்திடவே பின்னிருவர் எழுஞானம் ஒன்றுமட்டும்
    அருள்வதற்கே தெய்வமாக ஆலயத்தில் நின்றிலையே. ... 15

    பிரமனவர் குருவாகப் பாற்கடலோன் பின்னின்றே
    பிரம்மவித்தை ஞானமெனும் பேற்றினையே அருளுவதால்
    உருவமென ஆலயத்தின் உள்ளில்லா பிரம்மதேவன்
    குருவாக நாம்போற்றிக் கூடுதரும் பிறப்பறுப்போம். ... 16

    --ரமணி, 29/10/2015, கலி.12/07/5116

    குறிப்பு:
    மேல்விவரம்:
    தெய்வத்தின் குரல், பாகம் 5, பக். 187-230

    *****
     
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    தெய்வ தரிசனம்
    05. கேடுநீக்கும் கேசவன்
    (குறும்பா)

    கேசியெனும் தானவனைக் கொன்றேநீர்
    கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ?
    . குழலழகர் கூந்தலதே
    . அழகெல்லாம் ஏந்துவதே
    நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்!... 1

    [தானவன் = அசுரன்]

    சடைமுடியே ராகவனின் தலையினிலே
    பிடரிமயிர் நரசிம்மம் கலையெனவே
    . சிக்கமெலாம் மும்மூர்த்தி
    . சக்தியென இம்மூர்த்தி
    இடையூறு நீக்கும்தாள் தலையிதுவே!... 2

    [சிக்கம் = உச்சி மயிர்]

    கண்ணனுக்கோ வண்ணமயில் கேசந்தான்
    எண்ணமெலாம் மாயவனின் நேசந்தான்
    . காதலிப்பர் கோபியரே
    . ஆதுரத்தில் பாபியரே
    கண்ணன்மேல் நம்நெஞ்சில் பாசந்தான்!... 3

    [ஆதுரம் = பரபரப்பு, வியாதி]

    ககரமெனில் பிரமனவன் பேராமே
    அகரமதோ விட்டுணுவின் பேராமே
    . ஈசனுரு கொண்டவரும்
    . நேசமுடன் ஒன்றுவரே
    பகவனிவர் பரம்பொருளாம் சீராமே!... 4

    தண்ணுலவும் கேசமெனும் கிரணமிதே
    மண்டலத்தில் உள்ளுறையும் அருணமிதே
    . கொண்டிடிவார் அவதாரம்
    . விண்டிடுவார் பவரோகம்
    கொண்டல்வண் ணன்போற்றத் தருணமிதே!... 5

    கேசவனே கேடுகளை நீக்குபவர்
    கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
    . பண்ணுறுமே பூவுறுமே
    . கண்நிறுத்த நாவறுமே
    கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!... 6

    --ரமணி, 05/11/2015, கலி.19/07/5116

    *****
     
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    தெய்வ தரிசனம்
    06. நாராயணா என்னும் நாமம்
    (குறும்பா)
    தெயà¯à®µ தரிசனமà¯: 06. நாராயணா எனà¯à®©à¯à®®à¯ நாமமà¯

    நாராய ணாவென்னும் பேரினிலே
    வேராக உள்ளிருக்கும் சீரினிலே
    . ஏறிநிற்கும் பொருளெல்லாம்
    . ஊறிநிற்கும் அருளெல்லாம்
    ஆராயப் புகுவோமிப் பாவினிலே. ... 1

    நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
    நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
    . அயனமெனில் இருப்பிடமாம்
    . வியனுலகின் பிறப்பிடமாம்
    உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். ... 2

    நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
    விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
    . காற்றதுவே தீயாகி
    . நீராகி நிலமாகும்
    நரம்விளைத்த பேரதுவே நாராவாம். ... 3

    நாரமதே நாரணனின் உறைபொருளாம்
    காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
    . அஞ்சுபூதம் இயல்தனியே
    . அப்புவெனும் பெயரிலினிலே
    பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். ... 4

    [பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]

    உயிருள்ள உருவுள்ளே நாரணனே
    உயிரற்ற உருவுள்ளே நாரணனே
    . உயிருள்ளதோ இல்லாததோ
    . பெயருள்ளதோ இல்லாததோ
    பெயரற்ற உள்ளமைதி நாரணனே. ... 5

    நீராடும் போதினிலே நாமமென
    நாராய ணன்நாமம் சேமமென
    . எட்டெழுத்து மந்திரமே
    . கட்டுமனம் தந்திடுமே
    வேரோடும் செய்கையெலாம் ஏமமென. ... 6

    [ஏமம் = களிப்பு, இன்பம்]

    நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
    வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
    . கருமமுறும் சோதனையோ
    . கருமமறு சாதனையோ
    சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. ... 7

    ஓம்நமோ நாராய ணாயவென்றே
    போம்வினைப் பாராய ணமாமென்றே
    . எட்டெழுத்து மந்திரமே
    . உட்டுளையாய் வந்துறினே
    நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. ... 8

    [உட்டுளை = உள்+துணை]

    --ரமணி, 12/11/2015, கலி.26/07/5116

    *****
     
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    பிரதோஷத் துதி
    எங்களுக்கேன் அபிஷேகம் ஈசனே?
    (முச்சீர் சமநிலைச் சிந்து)

    வானதியைத் தாங்குதலைச் செஞ்சடை - கொஞ்சம்
    . வாகாகச் சிலிர்த்தாயோ ஈசனே!
    ஊனுருக நீராடும் பொழிவிலே - கொஞ்சம்
    . உன்பங்காய் எங்களுக்கா ஈசனே!

    ஏனிந்தப் பெருவெள்ள லீலையோ - எம்மை
    . ஏங்கவைத்துப் பார்ப்பதுமேன் ஈசனே!
    வானத்தில் சோதிநிலை யாகுமோ - இந்த
    . வான்மீன்கள் மூழ்கினவோ ஈசனே!

    நீயேந்தும் திருவோட்டை நாங்களும் - ஏந்தி
    . நீர்நிலையில் அலைகின்றோம் ஈசனே!
    கார்தந்த கொடையினிலே மற்றவை - யாவும்
    . கரமேந்த வைத்தனையே ஈசனே!

    திருவாடல் போதுமையா இத்துடன் - எங்கள்
    . தெருவாடல் தீர்த்தருள்வாய் ஈசனே!
    நரியாடல் பரியாடல் போதுமே - எங்கள்
    . நலமீண்டும் ஆடவருள் ஈசனே!

    --ரமணி, 23/11/2015, கலி.07/08/5116

    *****
     
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    தெய்வ தரிசனம்
    07. மாதவன் மகிமை
    (குறும்பா)
    தெயà¯à®µ தரிசனமà¯: 07. மாதவன௠மகிமை

    மாதவனின் பேர்சொல்லும் பேறிதே
    மாதவத்தின் பலனென்றே ஆவதே
    . முற்பிறப்பின் தவமென்றே
    . இப்பிறப்பின் நலமென்றே!
    வேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. ... 1

    சராசரியாம் மனிதனுமே அறியவே
    பராசரராம் பட்டரவர் உரையிலே
    . மாதவனின் பேர்விளக்கம்
    . யாதெனவே வேர்விளக்கம்
    பிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. ... 2

    மாவென்னும் அட்சரத்தின் மௌனமே
    தவென்னும் அட்சரத்தின் தியானமே
    . மோனத்தில் உருவற்ற
    . தியானத்தைத் தருவிக்க
    வவென்னும் அட்சரத்தின் யோகமே. ... 3

    [பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]

    மதுவித்தை சாதனையில் ஆதவனே
    மதுவென்றே சங்கரரின் போதனையே
    . உண்ணாத அமுதாகவே
    . கண்ணாலே நமதாகவே
    அதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. ... 4

    [ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]

    ஹரிவம்சம் சொல்லுகின்ற பொருளாமே
    பரமாத்ம ஞானத்தின் அருளாமே
    . பேரறிவின் போதனையாய்
    . வேரெனவே மாதவனாம்
    உரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. ... 5

    அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
    சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
    . வெளியுணர்வில் ஈடுபடும்
    . நளிவுள்ளம் பாடுபடும்
    தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். ... 6

    [நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]

    புறவுணர்வைக் கட்டுதற்கு மௌனமாம்
    அறிவதனில் அமிழ்ந்திருக்க தியானமாம்
    . நூலறிவால் ஏற்பட்ட
    . வாலறிவின் பாற்பட்டு
    பொறியற்று நிலைநிறுத்த யோகமாம். ... 7

    [வாலறிவு = பேரறிவு, உண்மை]

    மாவென்று திருமகளின் பேரதுவே
    மாவென்னும் முதலெழுத்தின் வேரதுவே
    . செல்வமெலாம் திரமாக
    . செல்வதெலாம் அறமாக
    வாவென்றால் வரமருளும் சீராமே. ... 8

    --ரமணி, 19/11/2015, கலி.03/08/5116

    உதவி:
    மாதவன் என்ற சொற்பொருள்
    https://ta.wikipedia.org/wiki/மாதவன்_என்ற_சொற்பொருள்
    purAnic encyclopedia: vETTam maNi

    *****
     
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    வெண்பா வித்தகம்: கட்டளைக் கலித்துறையில் வெண்பா
    அமைத்தவர்: கவிமாமணி இலந்தை இராமசாமி
    https://groups.google.com/forum/#!topic/santhavasantham/-mnQvFbRT7w

    விழிமனக் கவிதை!
    (கட்டளைக் கலித்துறையில் வெண்பா)

    (கட்டளைக் கலித்துறை)
    விழியின் மணியே விழிக்குறும் சொந்தம் விழுவதெலாம்
    இழிதலைக் கொள்மனம் என்று விழிமுன் எழுத்தினிலே
    இழைக்கும் கவிதைகள் இன்று மலரும் இனிமையிலே
    உழைக்கும் உளத்தின் உவப்பு முழுதும் உணர்வினிலே!

    (நேரிசை அளவியல் வெண்பா)
    விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
    இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
    இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
    உழைக்கும் உளத்தின் உவப்பு

    (நேரிசைச் சிந்தியல் வெண்பா)
    விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
    இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
    இழைக்கும் கவிதைகள் இன்று

    (குறள் வெண்பாக்கள்)
    விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
    இழிதலைக் கொள்மனம் என்று

    இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
    உழைக்கும் உளத்தின் உவப்பு

    --ரமணி, 29/11/2015

    *****
     
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    பிரதோஷத் துதி: வெள்ளம் தலைக்கேறும் வீழல் தீர்ப்பீர்!
    (நேரிசை வெண்பா அந்தாதிப் பஞ்சக மாலை)

    வெள்ளம் தலையேற்றி வெள்விடை யேறியென்
    உள்ளத் தமர்வீர் உமைகோனே - வெள்ளம்
    தலைக்கேறி வீட்டிய தாக்கத்தில் என்னுள்
    மலைபோல் அழுத்தும் மயல். ... 1

    மயலின் முயக்கில் மனமெங்கும் முட்கள்
    தயக்கமே என்னைத் தழுவும் - துயரில்
    செயலற்றே கற்பனை செவ்விதம் இல்லா(து)
    அயலாகிப் போமென் அகம். ... 2

    அகமிதே ஆவுடை யாராய்க் கருதி
    உகந்தவோர் லிங்கமாய் உள்ளம் - அகழ்வீர்
    பொழிகங்கை நீரால் புனிதம் அரும்ப
    விழல்தீர்த் தருள்வீர் விழிப்பு. ... 3

    விழித்தே உமைநான் விதவிதமாய்ப் போற்ற
    வழித்துணை யாக வருவீர் - கழிபொழுதில்
    என்சொல்லில் என்செயலில் எந்தை உமையெண்ணும்
    தன்மை தருவீரே சம்பு. ... 4

    சம்புவின் சம்பந்தம் சாதனை யில்சேர்க்க
    சம்புவை அம்பாள் சகிதமாய் - நம்பிநான்
    காரிருள் நீங்கிக் களிக்கும்நாள் என்னுளத்து
    ளாரும் பரசிவவெள் ளம். ... 5

    --ரமணி, 06/02/2016, கலி.23/10/5116
    (சனி மஹா பிரதோஷ நன்னாள்)

    *****
     
  10. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சரக்கொன்றை...
    (மடக்கணி அமைந்த அளவியல் நேரிசை வெண்பா)

    சரக்கொன்றைக் கைப்பற்றிச் சட்டென் றமர்ந்தார்
    சரக்கொன்றைப் பூமரம் கீழே - ஒருவர்
    சரக்குந்து ஓட்டுனர் மற்றவர் செல்வர்
    சரக்குந்து போதை சமம்.

    --ரம்ணி, 13/12/2015

    *****
     
    1 person likes this.

Share This Page