உச்சரிக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் சிலிர்க்கும் உன் பேரை, மந்திரமாய் உச்சாடனம் செய்ய ஆசைதான்... எச்சரிக்கும் உந்துதலாய், எனை எட்டிப் போக வைக்கும் என் மன உணர்வுகளை, வெட்டிப் போட ஆசைதான்.. என்னில் நானே எரிந்து போவதை விட்டு, உன்னில் நானே கரைந்து போக ஆசைதான்... உன்னிலே நான் கரைந்து போனாலும் உன் உயிரோடு நான் உறைந்து போக ஆசைதான் ஒரு நொடியும் உன்னை பிரியாது உன்னோடு நான் கொடியாய் பின்னிக் கொள்ள ஆசைதான்... உன்னை முழுதும் கொள்ள ஆசை உன்னில் எனை நான் கொல்ல ஆசை அச்சோ உன் மேல் கொள்ளை ஆசை ஆதி முதல் அந்தம் வரை சந்தம் கொண்டு நான் பாட அத்தனையும் ஆசைதானே என் ஆச மச்சான்... என் மேல உசிர வெச்சானே.. வெச்சானே என் நெஞ்சோட அவன் நெனப்ப தெச்சானே... தெச்சானே என்னிலே, நீயும் ஒன்னான மச்சானே... மச்சானே...
மச்சான்னு கூப்பிட்டு என் மனச தச்சவளே மந்திரமாய் ஒன் பேரை உச்சாடனம் செய்யும் போது எந்திரமாய் என் உதடு ரெண்டும் தந்திரமாய் உன்னோடு ஒட்டிக் கொள்ளுதே என்னைக் கொல்லுதே !!! எச்சரிப்பு இருந்தும் கூட ஒன் உச்சரிப்பு என்னைக் கத்தரிச்சு உணர்வு மொத்தமமும் உச்சிக்கு போச்சு!!! நா எரிஞ்சே தான் போனாலும் -ஒன் கண்ணு மையா உன்னோட கரைஞ்சே தான் போகணுமே நா கரைஞ்சே தான் போனாலும் -ஒன் உதிரத்தில் பனியா தான் ஓரஞ்சே போகணுமே!! நொடிஎல்லாம் உன்னோடு கொடியா சுத்தி-ஒன் நெஞ்சுக்குள்ள படர்ந்திடுமே இந்த பட்டாம் பூச்சு மனசெல்லாம் மனசெல்லாம் உன்னை அள்ள இந்த பாழும் மனசுக்கு இந்த கொள்ளை ஆசை ஆதியும் அந்தமும் எனக்கு நீதானே அடிக்கரும்பு நுனிஅரும்பு நீ தானே என் செம்பவழ சித்திரமே என் சந்தம் நீ தானே ஒன் மேல என் உசிர நான் வச்சேனே!!!! ஒண்ணா இருப்போமே ஒறவா இருப்போமே உசிரா நாம இருந்து ஒலகத்த ருசிப்போமே!!!! அம்சவேணி யம்மாடி :spin ரொம்ப நாளைக்கு அப்புறம் நாட்டுப் பாடல். சும்மா ராட்டினம் கட்டி சுத்துது. ஜோர்.ஜோர்.ஜோர்.
அவரு தெக்க நீங்க போட்டுட்டீங்க நல்லா கவிதையில் எம்ப்ராய்டரி வேணி. ஆச மச்சான், உனக்கு போட்டுத் தரேன் தோச மச்சான், என் பேச்ச கேக்கலேன்னா பூச மச்சான், கூடவே இரு பேச மச்சான்னு, சொல்லி அவர வேலைக்கு போக விடாம பண்ணிடாதீங்க...