என்றோ ஒரு நாள் நள்ளிரவில் மின்சாரம் தடைபட்ட அப்பொழுதில் மொட்டை மாடியில் மதி நோக்கி நின்றிருப்பான் விழிநீர் தேக்கி. தென்றலின் அவ்வொரு துளிக்கீற்றும், அவன் கீழிமை அணையை உடைத்து விடும். தரை தொடும் துளியின் அச்சூடும், புழுதியின் வெம்மையை கிளப்பி விடும். முதல் சந்திப்பா? அவள் முகமா? தேனாய்க் குழைந்த அவள் குரலா? அவள் பாராட்டிய அக்குறுங்கவியா? கடைசியில் காத்திருந்த புதனா? எதிலவன் மீண்டும் தோய்ந்திருப்பான்? அதை அறிந்தவர் யாரோ? சொல்லுங்கள்! என்றைக்குத் தான் அவன் விடுபடுவான்? அதை அவனிடமே போய் கேளுங்கள்!
Thank you @Thyagarajan, for your interest in this post, written many months ago. And thanks for your appreciation too! -rgs