பெரிதாய் ஆண்களிடம் ஈடுபாடு இல்லாத தருணம், துச்சமாய் அவர்களை தூர நான் நிறுத்தி இருந்த பருவம் கருப்பு எனக்கு பிடித்த நிறம் அதனாலேயே கருப்பாய் ஒருவனின் கரம் பிடிக்க வேண்டும் என நான் காத்திருந்த தருணம் உன்னை காணும் முன்னே உன்னை பற்றிய வர்ணனை என் வயதையொத்த பெண்களிடம் கேட்டேன் அழகிய சிவந்த நிறம் உன்னது காது மடலும் சிவப்பாம் உனக்கு ஆள் மயக்கும் புன்னகைக்கு சொந்தக்காரனாம் நீ ஆனாலும் அதைக் கேட்ட தினம் முதலே எனக்கு உன் மீது வெறுப்பு உன்னை முதலில் கண்ட போதும் வரவில்லை ஈர்ப்பு அதனாலேயே உனக்கு என்னிடம் ஈர்ப்பு என்பதை அறிந்தேன் நான் மற்றொருநாள் நீ சொல்கையில் உன்னுடன் நான் வெளியே செல்கையில் மணம் செய்வது குறித்த பேச்சை வீட்டில் பெரியவர்கள் ஆரம்பிக்க என்னுள் உன்னை விதைக்க நானும் ஆரம்பித்தேன் இருப்பினும் எனது சம்மதம் அறிய எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல நான் பெரும முயற்சி செய்தும் வெறும் காற்றல்லவா வந்தது??? எப்போதும் பேசுவோரின் கண் நோக்கும் எனது முகம் உன் கண்களைக் காண முடியாது மண் நோக்கின நிச்சயித்த நாள் முதலாய் உச்சரித்த உன் பெயர் ஒரு நாளுக்கு ஓராயிரம் முறையாவது இருக்கும் வீட்டிற்கு தெரிந்து சில சமயமும் தெரியாமல் சில சமயமும் தொலை பேசியில் தொலைவிருந்தே எனைத் தொலைத்த நாட்கள் எண்ணிலடங்கா... உன்னை பற்றிய நினைவுகள் உன்னோடு நான் கண்ட கனவுகள் என் நெற்றியில் நீ வைத்த முதல் பொட்டு... இவையெல்லாம் கண்ணிலடங்கா... மணம் முடித்தாய், எனை உன் மனதில் சிறை பிடித்தாய், உனக்கு என் மனதில் சிலை வடித்தேன், ஆராதனை இன்றும் நடக்கிறது உன் விழி பார்த்து எனை நடக்கப் பழக்கினாய், உன் மந்தகாசம் கண்டு எனை மதி மயங்கச் செய்தாய். நீயே என் கதி என சரணடைந்தேன் உன் காதலென்னும் சிறையில், உணதன்புப் பிடியில் உறங்குகையில் உன் மூச்சாய் இருக்கும் எனக்கு வேறென்ன வேண்டும் எனக்கு வெளியே இருந்து என்னை இயக்கும் எனதுயிரே நீயின்றிப் போனால் நிமிடமும் இருக்குமோ எனதுயிரே???
வேணி மா! எப்படி சொல்றதுனே தெரியல! உங்க கவிதைய படுச்சதும் கண்கள் கண்ணீரால் நிரம்பி விட்டன! என்ன ஒரு ஆழமான அன்பு என்று! தங்களை பற்றி கொஞ்சம் தெரிந்ததால் இது தங்கள் கணவரை பற்றியது என்று முதல் ஓரிரு வரிகளில் அறிந்தேன்! உண்மையாவே என்ன ரொம்ப பாதிச்ச ஒரு விஷயம் அந்த நெற்றி குங்குமம் தான்! நானும் விவேக்கும் விரும்ப ஆரம்பிச்சப்பறம் முதல் தடவ கோவில் போனப்ப எங்க தோழர்கள் எனக்கு குங்குமம் வைக்க சொன்னார்கள் அவன் வைத்த அந்த நொடியை என்னால் மறக்கவே முடியாது! வார்த்தை வெளிவர மறுத்து கண்கள் மட்டும் கண்ணீரால் நிரம்பிய தருணம் அது! அதை என்ன அழகாய் கவிதையாய் பாடி விடீர்கள்! உங்கள வாழ்த்த வயசில்ல ஆனா மனசார சொல்றேன் நீங்களும் அவரும் ஆண்டாண்டு வாழ வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன்! நானும் அந்த இனிய தருணத்திற்கு ஏங்கியவாறே! நடக்கும் இல்ல???? பயமா தான் இருக்கு ஆனால் தாங்கள் சொன்னது போல் எனதுயிரை நீங்க மட்டும் எந்நாளும் முடியாது! அருமையான கவிதை வேணி மா! படுசுடே இருக்கணும் போல இருக்கு!
veni... so beautiful.... i could relate many lines to myself...... yes life is changed when a loving person enters it.... he makes our life meaningful and beautiful.... i sometimes ask to myself, what was i doing before marriage... i lived life but now.... i cant even imagine a minute without him.... thats the magic he played on me..... his love is everything.... i am going to bangalore today and he will join me next saturday... but i feel very bad and happy at the same moment... bad to leave him here... happy to join my parents.... its a mixed feeling.... such is his love... which equalls to my love for my parents... within this short span of time can anyone become so close to another... thats the magic of love isn't it....
Dear Veni, This is really nice. You have sketched the essence of your love towards your hubby in beautiful way. Thanks. :thumbsup
கண்ணம்மா பயம் அறியாத பென்னம்மா, என வளைய வந்த, உனை இந்தக் காதல் படுத்திய பாட்டை கண்டு ரசித்தேன்மா. கட்டிளங் காளையாய் திரியும் ஆண்மகன் காதலிக்க, தொடங்கியவுடன் படும் பாட்டை பார்த்திருக்கேன். கன்னியிவள் வேணி தட்டுத் தடுமாறியது புதுமையிலும் புதுமை. உணர்சிகளின் வெளிப்பாடு அருமை - காற்று வந்தது, மன்னோக்கிய கண்கள்..... நினைத்து பார்க்கையில் கண்ணெதிரே தெரிகிறது காட்சி. உணர்சிகளின் பிடியில் உன் வார்த்தைகளின் ஈர்ப்பு எனை மயங்கச் செய்கிறது. காதலுக்கு இத்தனை சக்தியா?
dear veni'' Unnavarai muthal muthal partha pozhuthu muthal intha kanam varai ungal vaazhkkai varalarai ennamai kavithaiyil vadithuvittai. oru azhagiya kaadal oviyam ungal thirumana vaazhkkai. Indru pol endrum vaazha manathaara vaazhthugiren. ganges
Arumai, neeinri naan illai yenbadhai azhaaga sollirukkeenga...Veni.:thumbsup Inge vandhu unga pookkal kavidhaigalai padikka mudiyavillaiye en varuththam undu yenakku..will do it one day...seriya. sriniketan
very very nice venimohan elllarum pakkam pakkamaa vasanam pesi irukkaanga athu enaku varaathu sorry for that but kavithai about your sweet husband was superb
வேணி கொன்னுடீங்க. ரொம்ப ஆழமா ரசிச்சு, அனுபவிச்சு எழுதீர்கீங்க. உங்கள் கணவர் உங்கள் நேசத்தை வாழ்கை முழுவதும் பொக்கிஷமாக்கி அனுபவிக்க என் வாழ்த்துக்கள். Yamini: நடக்கும், நடக்கும்... நான் கூட சொல்கிறேன். -DDC