பணம் சேமிப்பதை விரும்பும் கோடீஸ்வரர், தினம் புதுவிதமாக யோசனைகள் செய்வார்! வணிக விஷயமாக வெளிநாடு போக எண்ணி, பெரிய அளவுக் காரை, தானே ஓட்டிச் சென்று, ஒரு நாள் காலை, நியூயார்க் வங்கி ஒன்றிலே, சிறு கடனாக ஐயாயிரம் டாலர் தேவை என்று, தன் காரை அடமானம் வைத்து, வேண்டினார்! தன் கடன் இரு வாரங்களில் அடையுமென்றார்! கோடீஸ்வரர் இந்தச் சிறு கடன் தொகையைக் கேட்டாரே என்று வியந்த வங்கி அதிகாரி, அக் கடன் தொகையைக் கொடுத்து, அவரது காரை உடனே பத்திரப்படுத்துமாறு ஆணை இட்டார்! சொன்ன சொல் தவறாத அப் பணக்காரர், தான் சொன்னபடி இரு வாரங்கள் வெளிநாடு சென்று வந்த பின், கடனை வட்டியுடன் தந்துவிட்டார்! அந்த வட்டி, வெறும் பதினாறு டாலர்கள்தான்! 'இத்தனை சிறு கடனை ஏன் கேட்டீர்கள்?' என்று அத்தனை நாளும் வியப்பை அடக்கிய அதிகாரி கேட்க, வினவினார், 'வேறு எங்கு இந்தக் காசில் காக்க முடியும் இத்தனை நாள் காரை இவ்வூரில்?' :rotfl