எண்ணங்கள் ________________ "எண்ணங்கள்" என்பவை எவை...? மனதென்ற "மாயச் சங்கிலியின்" மயக்கிடும் "பிணைப்புகளா"...? ,,,,அல்லது.. மனதென்ற "மாய அரக்கனின்" "மந்திர தந்திரங்களா"....? ....அல்லது.. மனதென்ற "ஓடையில்" ஓடிடும் "மனத்தெளிவுகளா"........? ....அல்லது.. மனதென்ற "மாலைத் தென்றலின்" மனம் கவற் "கவிதைகளா"....? ...அல்லது.. மனதென்ற "மலர்சோலையில்" மலர்ந்திடும் "வாசமிகு மலர்களா"...? ...அல்லது.. மனதென்ற "குளிர் நிலவின்" மகிழ்வூட்டும் "ஒளிச் சிதறல்களா"...? "எண்ணங்கள்" என்பவை எவை....? என் மனதின் "கேள்விகள்" இவை.. ......ஆயினும்... என் எண்ணைங்கள் யாவையும் என் மன "நிலைப்பாட்டின் உருவகமே"...... TVK [krishna46]
மனதே எண்ணங்களின் பிறப்பிடம் நாம் ஆக்கிட கூடாது அதை கெடுதலின் புகலிடம் ஆகிடின் நரகமாயிடும் வாழிடம் நல்ல கவிதை கிருஷ்ணா
மனது + எண்ணங்கள் = மனிதன் எண்ணங்கள் முழங்கினால் வெற்றி.முடங்கினால் தோல்வி. எண்ணங்கள் என்பது நமது செயல்களின் பிரதிபலிப்புகள். நம்மை ஆக்கவும் செய்யும்.அழிககவும் செய்யும். பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா