1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எங்கும் எப்போதுமா?

Discussion in 'Stories in Regional Languages' started by rajiram, Dec 6, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    கலியுகத்தின் உபாதைகள் தீர்க்க மிகவும்
    எளிமையான உபாயங்களை உரைத்தவர்

    பூரண ஆயுள் வாழ்ந்த, நடமாடிய தெய்வம்
    பூரண அருள் தந்த மஹா பெரியவர்தான்!

    தினமும் சர்வ வியாபியான இறைவனுக்கு
    தினப்படி வேலைகள் செய்யும் பொழுதிலே

    தவறாது சுலோகங்கள் சொல்லியும், நல்ல
    அயாராத பக்தி காட்டியும், தனது குறைகள்

    தீராது வாட்டுவதாக ஒரு பெண்மணி கூற,
    தீர்க்கதரிசி காஞ்சி மாமுனிவர் கேட்டார்,

    'பூஜை அறையில் சென்று பூஜிக்கிறாயா?'
    'பூமி முழுதும் இருக்கின்ற இறைவனை ஏன்

    எங்கும் எப்போதும் துதிக்கக் கூடாது?' என்று
    மங்காத பக்தி கொண்ட பெண்மணி வினவ,

    'கறிகாய் நறுக்க அரிவாள்மணை, கத்தி என
    சிறு உபகரணங்கள் அருகில் வைக்கிறோம்.

    உணவு தயாரிக்க அடுப்பின் அருகிலும், நாம்
    துணி துவைக்க, குளிக்க தண்ணீர் அருகிலும்,

    செல்கிறோம்; வாகனங்கள் ஓட்ட அவற்றில்
    சென்று ஏறி ஓட்டினாலே ஓடும்; அதேபோல்,

    நம் துன்பங்கள் விலகிட, சுவாமி அறைக்குள்
    நாம் போய், சுலோகங்கள் சொல்ல வேண்டும்!

    பூவைக் கண்டால் சுவாமிக்கே அணிவிக்கவும்,
    பூசும் சந்தனம் கண்டால், அவருக்கே பூசவும்,

    நல்ல புடவை கண்டால் அதை அம்பாளுக்கே
    நன்கு உடுத்தினால் எப்படி இருக்கும் என்றும்

    மனதில் நினைக்கும் பழக்கம் வேண்டும்! நாம்
    மனதில் நினைத்தாலே திருவருள் வந்திடும்!

    கல்லைப் போன்றதே துன்பம்; பெரிய சம்சாரக்
    கடலில் நம்மை மூழ்கச் செய்யும்! இறைவனே

    தெப்பம் போன்றவன்! அந்தக் கல்லைச் சுமக்க,
    தெப்பம் போல உதவி, சம்சாரக் கடல் கடக்கத்

    துணை இருப்பான்!' என்று திருவாய் மலர்ந்து,
    இணை இல்லா அருளுரை தந்தார் மாமுனிவர்!

    :bowdown
     
    Loading...

Share This Page