1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன...

Discussion in 'Posts in Regional Languages' started by Nilaraseegan, Oct 7, 2010.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    1.
    ஓர் உன்னதமான நிகழ்வின்
    முடிவில் அறையெங்கும் மணம்
    நிரப்பியபடி படுத்திருந்தாய்.
    கனவில் தோன்றும் கவிதைவரியின்
    பூரிப்புடன் கண்கள் மூடி
    அமர்ந்திருந்தேன்.
    காலமடியில் இசை
    வழிந்துகொண்டிருந்தது.
    செவி வழி உயிருக்குள்
    ஊடுருவியது உனதன்பின்
    அணுக்கள்.
    மார்பு தாங்கும் வனப்பூக்களுடன்
    அறையெங்கும் பறந்து சிலிர்த்தாய்.
    இசைக்குள்ளிருந்து இதயத்திற்குள்
    நுழைய துவங்கினேன்
    நான்.

    2,

    கடற்கரையொன்றில்தான் நமக்கான
    வாழ்வை தீர்மானித்து பிரிந்தோம்.
    மழைநாளில்தான் யாரோ ஒருவருடன்
    நம்
    திருமணம் நிகழ்ந்தேறியது.
    வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வனத்தின்
    நடுவே நம் இல்லம் அமையப்பெற்றது.
    இப்போது,
    எதற்கென்றே அறியாமல்
    அழுகின்ற குழந்தையாய்
    அழுதுகொண்டிருக்கிறோம்
    அவரவர் வீட்டின் இருட்டறையில்
    மனதெங்கும் வியாபித்திருக்கும்
    நிறைவேறாக் காதலுடன்.

    3.
    தவிர்த்தலையும் ரசனையுடன்
    என்னில் தெளிக்கிறாய்.
    உன் விலகல் ஒரு நட்சத்திரம்
    போல் மிளிர்கிறது.
    வெறுமை நிறைந்த சொற்களை
    உதிர்த்தபடி செல்கிறதுன்
    இதழ்கள்.
    எவ்வித உணர்வுகளுமின்றி
    புன்னகைக்க கற்றுக்கொண்டாய்.
    மழை சத்தமின்றி பெய்து
    ஓய்கிறது.
    கண்ணீர் உடைந்த
    நிலாத்துளிகளாய் உருள்கிறது.
    என்றேனும்
    ஏகாந்தத்தின் செளந்தர்யத்தில்
    நீ
    லயித்திருக்கும் தருணத்தில்
    காற்றில் மிதந்து வரக்கூடும்
    சிறகறுந்த கனவொன்றின்
    குருதி தோய்ந்த இறகுகள் சில.

    -நிலாரசிகன்.
     
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Romba arumayana kavidhai..keep rocking...:thumbsup
     

Share This Page