நேற்று வரை என் அருகில் நீயிருக்க தெரியவில்லை என் மனதிற்கு துயரம் என்னவென்று? இன்றோ நிலம் தொடும் என் கண்ணீர் துளியை தாங்கவும் உன் கரமில்லை ஆறுதல் அளிக்கவும் உன் தோளில்லை அதை நினைத்தே இன்னும் ஏங்கும் என் மனதிற்கு எப்படி கூறுவேன்? இது தவிர்க்க முடியாத பணி என்று.?! உண்மையில் இன்று தான் உணர்ந்தேன் வாழ்வில் இரண்டு முறை என் இதயம் என் சொல் கேட்க மறுத்தது ஒன்று முதல் முதலாய் உன்னை கண்ட போது மற்றொன்று நீ என்னை விட்டு விலகிய பிறகு. கண்ணீர் வடிக்கும் என் விழிகளுக்கு என்ன ஆறுதல் கூறுவேன்? சாய்ந்து அழ உன் நெஞ்சம் இல்லையென்று அலைபாயும் என் கரங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வேன்? ஆரதுழுவ உன் தோள்கள் இல்லை என்று முத்தமிட துடிக்கும் என் ஆதாரங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வேன்? உன் முகம் எனகெட்டாத தூரத்தில் இன்று இருந்தும் வாழ்கிறேன் அதிசய பிறவியாய் உன்னை பிரிந்தும் இவ்வுலகத்தில் நான்!
பிரிவென்று ஓன்று வந்திட்டால் என்ன சொல்லியும் கேளாது துவளும் மனது. பிரிவு என்பது மீண்டும் கூடத் தான் என்று பரிவு கொண்டு பக்குவப் படும் மனதிற்கு தாலாட்டு தமிழ் மட்டுமே. அது கொண்டு தங்கை கொணர்ந்த வரிகளில் துயரம் மிக அதிகம். வரி போட்டு வலி போக்கும் எதார்த்தம். கொஞ்சம் லேசாகும் மாதும், மனதும்...மனது வைத்தால். மீண்டும் சந்தோசம் மலர வாழ்த்துகிறேன்.