1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உணவே மருந்து மருந்தே உணவு

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 13, 2023.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,756
    Likes Received:
    12,578
    Trophy Points:
    615
    Gender:
    Male
    உணவே மருந்து
    மருந்தே உணவு

    வாழ்வியல்முறையை மறந்தார்களா?
    ஞாபகமறதி நோய், கழுத்து எலும்பு வலி, எலும்புத் தேய்மானம், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், பிள்ளை இல்லாமை, கண்ணில் குறைபாடு, இதெல்லாம் வரவே வராது என்றார் நேற்று வந்த டாக்டர் நண்பர்.
    உங்க வெந்திய தோசை, மோர் கூழு, அடை வெண்ணெய், பழையது, நாட்டுச்சக்கரை, பருப்பு உசிலி, குழந்தைகளுக்குப் பருப்பு, நெய்,உப்பு கலந்த சாதம், காலையில் சீக்கிரம் எழுதல், சூர்ய நமஸ்காரம்,திரி கால சந்தியா வந்தனம், காயத்திரி மந்திரம், குனிந்து கோலம் போடுவது,
    வெல்லத்தால் செய்த தின்பண்டங்கள், ஊஞ்சல் ஆடறது, கை விசிறி,பல்லாங்குழி, தலைக்குக் குளித்தல், 11 மணி, 3 மணி, 7 மணி உணவுப் பழக்கம், பஞ்சக்கச்சம், மடிசார், நார்த்தங்காய், பிஞ்சு வடுமாங்காய், மாகாணிக்கிழங்கு, தரையில் உட்கார்ந்து சாப்பிடறது, அரைஞாண் கயறு, பூணூல் எல்லாமே நோய்த் தடுப்பு முறைகள்.
    இன்த முறைகள் மீறி என்னிடம் southindians வந்தால், அவர்களை - நான் அவர்கள் பழைய முறைகளுக்கு மாறி அவர்கள் உணவை உண்ணச் சொல்வேன். வியாதியாவது ஒண்ணாவது. ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணச் சொல்வேன்.
    ஜீரா மொளகு ரசம் சாதம் சாப்பிடச் சொல்வேன். சிறுநீர் பிரச்சனைக்கு மாகாளிக் கிழங்கு.
    வெயில் காலத்தில் பானகம்,நீர் மோர், வயறு பிரச்சனைக்கு கோசுமறி. நெய்யில்லா உண்டிபாழ்ன்னு சொல்வேன் என்றார்.
    சொன்ன டாக்டர் முதலியார்.
    அவர் சின்ன வயசில் பிராமணர் தெருவில் இருந்தாராம்.
    அவருக்குத் தெரியறது! நமக்கு?
     
    Loading...

Share This Page