கொஞ்சம் நீ, கொஞ்சம் நானென நம் குழந்தை இருக்கும் என்றோம்! ஆண்டுகள் போக, வெள்ளி தலை சேர அது வராததில் கலங்கி நின்றோம்! உறவுகள் மெல்லச் சொல்ல, ஊரும் உறவைத் தொடர, ஊறும் செவ்வெறும்பு நாள் போக, ஊனையும் நோகும்படி செய்ய மருத்துவத்தை நம்பி, சேர்த்த பணம் கரைய இறை மகத்துவத்தை எண்ணி, விரதத்தில் உடல் மெலிய, வரவில்லை நம் தளிரும். என்ன குறை வைத்தோம்? எப்பிறவியிலே பிழைத்தோம்? என்று அழுதே நொந்தோம்! சட்டென்று ஒரு நாள் நாம் அம்முடிவை எடுத்தோம்! நாளொன்று பார்த்தே நாம் இம்மகவைக் கொணர்ந்தோம்! இப்பூமுகத்திலோ நீ இல்லை அட நானும்தான் இல்லை! எனினும் இது நமதில்லை என யாரும் சொல்ல இடமில்லை!
அருமை rgs கொணர்தலின் மேன்மையை மென்மேலும் சமூகம் அறிந்து போற்றினால் அனாதைகளாய் குழந்தை இல்லா பெற்றோரும் பெற்றோர் இல்லா குழந்தைகளும் இல்லாது போகும் அனாதையாய்
RGS , Believe it or Not , I got a Divine Intervention through this poem of yours. Will I act on it , I am not sure, at least for now. ஊரும் உறவைத் தொடர, ஊறும் செவ்வெறும்பு நாள் போக --- சரி தானே ? This Online Google Tamil Typing sometimes do this to us, right ?
Thanks for pointing out to the inadvertent mistake that I did not even see, @PavithraS. Will try correcting it. Besides, hope and wish you do noble things as well. -rgs