தாலி அணிவித்து, ஏழடிகள் இணைந்து நடந்து, நம் பந்தத்தை ஊருக்கு உறுதி செய்தோம் இன்று. இனி வாழ்விலும், தாழ்விலும் இணைந்தே இருந்து, இல்லறத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று, நம் உற்றோரும் மற்றோரும் உளமார நினைத்து, அட்சதைகள் தூவி, ஒரு மனதாய் வாழ்த்திடவும், அவர் குரலின் நெகிழ்ச்சியில், அன்பில் நனைந்து, விழியோரம் ஆனந்தக் கண்ணீரும் பெருகிடவும், தலைகுனிந்து இருவரும் அட்சதைகள் ஏற்றோம், பணிவாலே பதிலுக்கு நன்றியினைச் சொன்னோம். அவர் வாக்குப் படியே நாம் நடந்து கொள்வோம். ஒருவரை மற்றவரும் ஏற்றம் பெறச் செய்வோம். ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாக இருப்போம், சிறு குறைகளைத் தள்ளியே நிறைவாக வாழ்வோம். நல்லதைக் கண்டால் உடன் பாராட்டி மகிழ்வோம், நன்மையைக் கருதியே எச்செயலையும் செய்வோம். -ஸ்ரீ
, . ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாக இருப்போம், சிறு குறைகளைத் தள்ளியே நிறைவாக வாழ்வோம். நல்லதைக் கண்டால் உடன் பாராட்டி மகிழ்வோம், நன்மையைக் கருதியே எச்செயலையும் செய்வோம். -ஸ்ரீ[/QUOTE] இந்த நான்கு வரிகளை கடைப்பிடித்தாலே இல்லறம் நல்லறம் ஆகும். ரொம்ப நன்றி ஸ்ரீ !clap
உங்கள் கருத்து மிகவும் சரியே. முதலாவதாகவும் முதல் தரக் கருத்தை உள்ளடக்கியும் வந்த உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி விஜி மேடம். -ஸ்ரீ