பல ஆலயங்களில் இரண்டு விநாயகர்கள் சேர்ந்து இரட்டைப் பிள்ளையாராக அருள்பாலிக்கின்றனர். இரட்டைப் பிள்ளையார் வழிபாடு ஐஸ்வர்யத்தைத் தருவதாகும்.இரட்டைப் பிள்ளையார் வழிபாடு லட்சுமி கடாட்சத்தைத் தரவல்லதாகும். சங்கடஹர சதுர்த்தி விரதத்தை இரட்டைப் பிள்ளையார் சந்நிதியில் தொடங்குவதும், முடிப்பதும் பணத்தட்டுப் பாட்டை நீக்கி முறையான வழிகளில் நிதியைப் பெருக்கும். சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும் விநாயகருக்குரிய நட்சத்திரத்திலு முழுத் தாமரைப் பூக்களால் இரட்டைப் பிள்ளையாருக்கு மாலை அணிவித்து, மோதகம் நைவேத்யத்துடன், மோதகத்தையும், தாமரை மலர்களையும் ஏழைச் சிறுவர், சிறுமியர்க் குத் தானமாக அளித்துவர எத்தகைய பணக்கஷ்டமும் தீரும் .