கண்ணுக்குத் தெரியாத சொத்து நமக்கே நமக்கு என உள்ள சொத்து எல்லோருக்கும் பொதுவான சொத்து தினமும் நம் கையில் உள்ள சொத்து. :hiya இதற்கு பணக்காரன் ஏழை இல்லை இதன் அருமை தெரிந்து பயனுள்ளதாக செலவழிப்பவரே பணக்காரர் வீணாகச் செலவழிப்போர் ஏழையே ! :spin தினமும் கிடைப்பதால் அது தினச் சொத்து :thumbsup அதனாலேயே மலிவான வீணானது அல்ல அது விலைமதிப்பற்றது உயர்வானது நம் பொன்னான நேரம் அது பொன்னான நேரம் அது. :exactly:
Mikka nanri...Geetha! inge vandhu idhanai padiththu ungal ponnaana pinoottam thandhadharkku :hiya: sriniketan
பக்கம் அதிகம் கொண்ட புத்தகமும் கற்றுத்தராத பாடம், கற்ற கலைகள் அத்தனையிருந்தும் கற்றறியாத பாடம், எத்தனை பொன் பொருள் கொடுத்தாலும் அடையமுடியாத பாடம், எத்தனை சொல் கொண்டு விளக்கினாலும் விளங்காத பாடம், காலங்கள் பல கடந்தே போனாலும் மறையாத மறக்காத பாடம், இத்தனை உயர்ந்த பாடத்தை எனக்கு கற்றுக்கொடுக்கும், நான் காணும் மனிதர்கள் தான் என் தினப்படி சொத்து. அவர்களிடம் காணும் நல்லவைதான் செய்யவேண்டியதை உணர்த்தும் பாடம். அவர்களிடம் காணும் தீயவையே செய்யக்கூடாததை உணர்த்தும் பாடம்.
அள்ளி அள்ளி கொடுத்தாலும் அழியாத சொத்து வட்டியோடு மறுபடியும் நமக்கே கிடைக்கும் சொத்து பேதமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் உரிதான சொத்து இறைவன் நமக்கு கொடுத்த நிரந்தரமான சொத்து தீயவரையும் வேரோடு நல்லவராக்கும் சொத்து இறக்கும் தருணத்திலும் குறையாத சொத்து இறந்த பிறகும் நமக்கென நீடிக்கும் சொத்து கொடுக்கும் போதும் இன்பம்...அடையும் போதும் இன்பம் விலை மதிப்பிட முடியாத அன்பே தினச்சொத்து
சொத்து என்பது சேமித்து வைப்பது, அசையும் சொத்து,அசையா சொத்து, ஆசையாய் வாங்கிய சொத்து, பரம்பரை சொத்து,அதிஷ்ட சொத்து, என ஆயிரம் சொத்தை பட்டியல் இட, இங்கு பார்கவி தந்தார் தினசொத்து, தினமும் துளி,துளியாய் இணைந்து பெருதுளியாய் இருக்கும் ,சிலருக்கு இனிக்கும்,கசக்கும்,கடக்கும் பொழுது, எனும் பெரும் சொத்து அது நம் கையில் கணக்கில்,நாமறியாமல் சேரும் சொத்து. இந்த நொடியும்,அடுத்த நொடியும் அவரவர் சொத்து,அடுத்தவர் கவர இயலா சொத்து, இறைவனால் நமக்கென தரப்பட்ட சொத்து, அவன் தந்த சொத்து,அதை அவன் நிறுத்த, நாமும் சத்தமில்லாமல் விட்டு விடும் சொத்து.,
Priya, Manidhargalai polum, avargalin anubavangal polum, avargalin pan mugam unarthum, paadam dhan namakku soththu enru arumaiya sollite... Inimel irundhu gavanikkiren, akkam pakkathil ullavargalai :biggrin2: sriniketan
Nijam dhan Susri... Anbai vida enna soththu irukka mudiyum... aanal..naam dhan adhan arumaiyai unaravillai...:-( sriniketan
Deepa, Soththil ivvalavu varieties aa.... Migam seri neenga sonnadhu...uyir moochu soththu adhu...seriya.. sriniketan