இதுவல்லவோ அறிவு! இந்தியர் ஒருவர்; அமெரிக்கர் ஒருவர்; இருவருக்கும் விந்தையான ஒரு விஷயமே, மிகவும் பிடித்ததாகும்! சந்தித்த உடனே தெரிந்துகொண்டனர், தம் விருப்பமே பந்தயம் கட்டிப் பணத்தைச் சேர்ப்பதில்தான் என்பதை! 'உன் கேள்விக்கு பதில் அளிக்காவிட்டால், தருவேன் நான் உனக்கு ஐநூறு டாலர்கள்; இதைப் போலத்தான், 'என் கேள்விக்கு பதில் அளிக்காவிட்டால், நீ தரணும் எனக்கு ஐந்தே டாலர்கள்', என்று கூறிய அமெரிக்கர், 'மூன்று கேள்விகளே மொத்தம்; நான் ஆரம்பிப்பேன் முதல் கேள்வியை', என்றும் உரைத்தார், பணிவுடன்! தன் அறிவுத் திறனில் மிக நம்பிக்கை கொண்டதால், தான் வெல்லுவது உறுதி என்பதை நம்பி இருந்தார்! பந்தயத்தை ஏற்ற பின்னர், தொடங்கின கேள்விகள்; 'இந்த பூமிக்கும், நிலவுக்கும் என்ன வித்தியாசங்கள்?', என்று முதல் கேள்விக் கணை வந்து விழ, 'அறியேன்', என்று உரைத்த இந்தியர், அளித்தார் ஐந்து டாலர்கள்! 'ஒரு தலை விலங்கு ஒன்று, மலையில் ஏறிச் சென்று, இரு தலை உடையதாகத் திரும்பி வந்தது! அது எது?' என்ற கேள்வியை இந்தியர் கேட்க, மூளையே குழம்பி நின்ற அமெரிக்கர், தன் ஐநூறு டாலர்களை நீட்டியபடி, 'எனக்குத் தெரியாத பதிலை, நீயே கூறு!' என்று கேட்க, 'எனக்கும் தெரியாது!' என்று, கொடுத்தார் டாலர் ஐந்து! :biglaugh
Raji...super ponga..theriyadhunnu solli beta win pannra mudhal aalu namma Indhiyan dhan...:biglaugh: sriniketan
Hello mam, Nice one there..for a change you have kept aside translations and touched upon a simple theme:thumbsup :cheers Saras
Dear Sree, My d h gets me stuff and I write in my style! We are made for each other ... :biglaugh Glad that you like the kavithai. R R :cheers