ஆலமரப் பிள்ளையார் :- வடக்கு நோக்கியிருத்தல் சிறப்புடையது. மருத்துவர்கள் மக நட்சத்திரம் தோறும் ஐந்து வகைச் சித்திரான்னங்கள் (எலுமிச்சை, தயிர், புளி, தேங்காய், போன்றவை) படைத்து தானமளித்திட சிகிச்சைத் துறையில் சிறப்படைவர். நோயாளிகள் இவ்வாறு செய்திட கடுமையான நோய்கட்கும் நிவாரணம் கிட்டும்.