ஆண்டாள் அவள் அவனை ஆண்டாள் வேண்டாள் வேறொன்றும் வேண்டாள் சூடிய மாலையை மணாளனுக்கு சூட்டி விரும்பினாள் அழகு கூட்ட விரும்பினாள் ஏற்று கொண்டான் கண்ணன் ஏற்று கொண்டான்
@kaniths @SpritualSoul @joylokhi @jskls @PavithraS கவிதையை விரும்பிய அனைவருக்கும் மிக்க நன்றி . ஆமா நான் சொன்னா தான் நீங்க இந்த படத்துக்கு கவிதை எழுதுவீங்களா .ஆண்டாளை பத்தி எழுதுங்க பா
@kaniths அன்பு மின்னல் அவர்களே மீண்டும் மீண்டும் தாங்கள் மின்னல் என்று நிருபிக்கிரீர்கள் .மின்னல் வராப்பல சர்ருன்னு வரீங்க சட்டுன்னு காணாம போறீங்க .என்ன வில்லத்தனம்
அன்புள்ள பெரியம்மா- நான் தளத்தில் நுழைந்த நேரம்,தாங்களும் நுழைந்து என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டீர்கள் ! ஆண்டாளுக்கு அழகிய வரிகளை சமர்ப்பித்து விட்டீர்கள், நன்றி ! என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை- சொல்ல மொழியில்லையம்மா, கோதையவள் தமிழழகை ! சூடித்தந்தவள்,பாடிச் சென்றதைப் படிப்பதே பேரானந்தம் ! வாடாமலர்ப் பாமாலைகள் முப்பதும் தருமே பரமானந்தம் !
ஆண்டுகள் ஆயிரம் ஆகினும் ஆண்டாள் பாசுரம் வாழ்ந்திடும் வாழ்ந்திடும் வழிமுறை காட்டிடும் ஆண்டவன் பாதம் சேர்த்திடும் அதிகாலை எழுந்திடுதல்... அனைவருமாய் ஆலயம் தொழல் ... அருங்குணங்கள் கூடிடுதல்... அவன் புகழை பாடிடுதல் ... ஆகா குணம் நீங்கிடுதல்... ஆதவனுடன் விழித்திடுதல்... ஆசை சில அடக்கிடுதல்... ஆணவங்கள் நீங்கிடுதல்.. இனிய மொழி பேசிடுதல்... இன்முகமாய் இருந்திடல் ... இன்னல் தீர பிரார்தித்தல் .. இகபர சுகம் பெற்றிடுதல் ... என இளம் வயதில் இறைவன் வழி திரும்பி... நல் வாழ்வு நங்கையர் வாழ... நம் நாச்சியார் ஆண்டாள்... நல்ல திருப்பாவை நவின்றாள் .. ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
மூன்று வருடங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வாசம் .ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் மார்கழி மாத எண்ணைகாப்பு உற்சவம் ,வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அரையர் நடனம் அனைத்தும் தெவிட்ட தெவிட்ட பார்த்து ரசிக்கும் பாக்கியம் அந்த கண்ணன் அருளால் கிடைத்தது . மறக்க முடியாத அனுபவம்