அழியாத கோலங்கள் மீண்டும் வந்திடுமோ வசந்த காலம் மனதில் மிளிரும் அழியாத கோலம் ஆண்டுகள் பலவும் உருண் டோடியும் இன்றும் கவர்ந்திடும் இளமை ஜாலம் அறியா வயதில் எதிர்வீட்டு நட்புடன் அலுக்காது விளையாடி அடித்த லூட்டி எரிகுழம்பு தயிர்சோறு கதைகள் சொல்லி ஊட்டி விட்டவென் அன்பான பாட்டி நாலணா டிக்கட்டில் நட்புடன் சேர்ந்து நான்கண்டு மகிழ்ந்த எம்ஜியார் படங்கள் காலாற நடந்து காந்திபுரம் பொட்டானிக்கல் கார்டன் என்றுநான் சுற்றிய இடங்கள் காதல் தெரியாத குழந்தை நாட்கள் கேசவன் மோகனின் இனிய நட்பு கீதாலயா திரையில் கண்ட படங்கள் கல்வெட்டில் பொறித்த காலக் கவிதை பருவம் வந்ததும் குடிபுகுந்த சென்னை பெண்களின் அழகால் வீழ்த்திய தென்னை புரியாத உணர்வோடு கழிந்த பொழுதுகள் பார்த்த பெண்களில் படித்த கவிதைகள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு காற்றெனப் பறந்தது காலச் சக்கரம் நூலிழை இளமை அத்தியாயம் முடிந்து நாற்பதின் முடிவில் நிறுத்திச் சென்றது நினைத்துப் பார்த்தால் முடிந்த நாட்கள் நனவாக் கனவா என்றுநான் அறியேன் எனக்கென ஒருவரம் இறைவன் தந்தால் அந்த நாட்களை மீண்டும் கேட்பேன் வீயார்
நினைத்துப் பார்த்தால் முடிந்த நாட்கள் நனவாக் கனவா என்றுநான் அறியேன் எனக்கென ஒருவரம் இறைவன் தந்தால் அந்த நாட்களை மீண்டும் கேட்பேன் - beautiful. I am sure many of us will have this wish.