இப்போ கேள்வி, அப்பா என்ன செய்தார்? அளவான கண்டிப்பும்,அதீதமான நகைச்சுவையும், அருளான பார்வையும்,வயிறாற சாப்பிடவேண்டும் என்பதற்காக வேலை செய்தவர் தான்! காலத்தின் கோலம் கட்டுபடுத்தியபோது தன் ராஜஸ வாழ்க்கையை சுருக்கி( நத்தை கூட்டுக்குள் அடைவது போல்)சுருக்கம்,சுருக்கம்,சுருக்கம்,...அப்பப்பா...எத்தனை வாமனனாக தான் ஆகி ,குழந்தைகளை வளர்க்க எத்தனைக் கட்டுப்பாடு!எத்தனை வாழ்க்கை சறுக்கல்கள், எத்தனை சுடுசொல் தன் தந்தை கூறியுள்ளார் அப்பாவின் வளர்ப்பு முறை பற்றி ஒரு கண்ணோட்டம் கிரிக்கெட் அணி அமைத்து விளையாட சொன்னது,குழந்தையை தோளில் சுமந்தே பள்ளிக்கு போன நாட்கள் எத்தனை. 11வயதில்,அறுபத்து மூவர்,பார்க்க அனுப்பிட்டுவிட்டு,திரும்பி வரும் வரை புலம்பி தீர்த்து விட்டார் பல் தேய்க்கவும், உடை உடுக்கவும் ,ஒரு படத்தை மாட்டி,நீ 1stஆ... , அவன் 1stஆ பார்க்கலாம் kutty balu is a lazy boy late for school, play & everything so, he is late bath,,...is it . என மகனோடு கொஞ்சியதுண்டு. கோலியாட விரும்புவாய் என வண்ண வண்ண கோலிகள் அதிகம் வாங்கி தந்ததும் உண்டு.நீ தோற்று போய், எண்ணிக்கை குறைந்தால்...அழுவாய் என எண்ணி மீண்டும் கோலிகளை உனக்கு தெரியாமல் அடுக்கி வைப்பார். பள்ளியில் செல்லமகனை கொண்டு போய் விட,எத்தனை நண்பர்கள்,தரையில் பாதம் பட்டால் குறைஞ்சுடுமா...என கிண்டல் செய்யும் நண்பர்களை ,என் மகன் எப்படி இருக்க வேண்டியவன்... என மூச்சுக்கு 300 தரம் சொல்லி புலம்புவார். பள்ளியில், அவன் அடிக்கும் லூட்டிக்கு அளவில்லை...அவனை punish செய்யும் ஆசிரியரிடம் பெரிய சண்டை தான் .என் பிள்ளை படிக்கவில்லை யென்றால்...தோப்புக்கரணம் போட சொல்லு வது..எப்படி.படிக்கவைத்து கேட்க வேண்டுமே தவிர ...எப்படி தண்டிப்பது. கோழி இறகுகளின் அழகை நீ ரசிப்பதை கண்டு...கடன் வாங்கியாவது மிருகங்கள் zoo விற்கு அழைத்து செல்வார். பொருட்காட்சி என்றால், செலவு செய்ய அஞ்சமாட்டார்.. வீட்டில்,ரேசனுக்காக வாங்க வைச்சிருந்த பணம் நான் செலவு செய்துட்டேன்....விலையுயர்ந்த அரிசியை A/C இல்.வாங்கி போட்டு dose-ம் வாங்கியதுண்டு. பள்ளியில் தன்மகன் 1st ஆகவர விதவிதமான awards, icecream, lollipop வாங்கி தருவது pommai கையில் வரைவது, வண்ண வண்ண பலூன், விதவிதமாய் பம்பரம் என விளையாட்டுகள் ...குழந்தை பருவத்தை கொட்டமிடசெய்தவர்தான். இத்தனை சுதந்திரமாய், என்ன வேண்டும் ஆனாலும் வாங்கி தந்த அப்பாவை பார்த்து, வயதாகி விட்டதனால்.. இப்போது, என்ன செய்தார்...என்று அம்மாவிடம் கேட்கிறான்...
Saikrupa, Very much moved by the post. Excellently sharing the views of a loveable father. But, the present generation is taking everything for granted and not giving respect to anybody. Excellent post.