கண்ணணை நேசித்தவளின் முகமோ நினைவில் இல்லை மணமும் நினைவில் இல்லை குரலும் காதில் ஓலிப்பதில்லை பாசமோ அறிந்ததில்லை மஞ்சள் தேவதையானவளின் விருப்பங்கள் அறிந்த வயதில் புன்னகை நின்றது கண்களில் பண்பும் பதிந்தது உயிரில் அறிவுரையோ நின்றது மனதில் எறும்பைப் போல் வாழ கற்றுக்கொள் உழைப்பில் மட்டுமல்ல மழைக்காலத்திற்கும் சேர்த்து சேமித்து வைக்க என்றவள் அறியவில்லை அன்று அன்பிற்கு ஏங்குவாள் மகள் என்று! அறிந்திருந்தால் அன்பிற்கு ஏங்காது அடிமைபடாது வாழக் கற்றுக்கொள் என்றிருப்பாள் தன் மகள் அவள் செல்வங்களுக்கு அறிவுறுத்துவது போல்!
அம்மா உங்கள் உள்ளத்தில் உங்கள் குருதியில் என்றென்றும் இருக்கிறார்கள் . என்றும் நல் வழியில் உங்களை நடத்தி செல்வார்கள் .
nice one ls andru anbirkillai panjam ariyaathu ponaal aval indru panjam varum yena ariyaamalae athanai neengal vendru valarkka valarththathum avalae
@jskls அம்மாவின் பாசம் அதில் தவழும் அவள் ஈன்ற செல்வம் அவள் ஈன்ற செல்வி அருமையாக பகன்றீர். அம்மா தின வாழ்த்துடன் வாழ்க வளர்க்க என்றும்.
அறிவினை அறிவுருத்தும் அம்மாக்களை தாய் யஷோதவுடன் ஒப்பிட்டு எழுத்து ஓவியம் படைத்த தங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். மிக்கநன்றி. என் தாயின் இஷ்ட தெய்வம் கண்ணன். கவிதைகள் வாசித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி