அன்று கை கோர்த்து நாம் நடந்த வழி இன்று தனியாக நடக்கையில் என் விழி கலங்குவதையும் தவிர்க்க முடியாது. உன் நினைவும் என்னில் ஓயாது. சந்திப்பதற்கு முன் நாம் யார் யாரோ! இணைந்த பின் வெவ்வேறோ? இன்று பிரிந்திட்டாலும் நான் நீயே! இதை என்றும் அறிவாயே! காலனுக்கு என் மேல் கோபம். அதனால் உன்னைப் பறித்தானே! காலம் வெகுவாய்க் கழிந்தாலும் எனில் உன்னைப் பிரிக்க முடியாதே! உரு என ஒன்று இருந்தாலே, அது மறையும் ஒரு நாள் நிச்சயமே! உள்ளத்தில் உன்னை வைத்தேனே! அழிவில்லை உனக்கு. சத்தியமே! -ஸ்ரீ