1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அந்த ஒரு இரவில்!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Dec 27, 2012.

  1. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Hi Rajni, I jus loved your narration of hostel. You took me back to my hostel days.
    Pasanga dhan nite vidiya vidiya troy papanga nenachen. Neengaluma :0
    Angels and demons padicha effect ah indha story ? Nice.. waiting 4 the update !
     
    1 person likes this.
  2. padmashreedeepu

    padmashreedeepu Silver IL'ite

    Messages:
    121
    Likes Received:
    108
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Super... waiting for tomorrow's episode
     
    1 person likes this.
  3. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hi Jaga, thanks much for your feedback!
    Ofcourse.. naangalum paapomla.. paathu paathu thenju ponadhula Troyum onnu :)
     
  4. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அந்த ஒரு இரவில்! - 2

    உள்ளே சென்று படுத்து சற்று நேரத்தில் அந்த சத்தம் கேட்டது. தூரத்தில் ஒரு அலறல் சத்தம்!

    திடுக்கிட்டு கண் விழித்தால், நிஜமா இல்லை பிரமையா என்ற குழப்பம். கனவு போலும் தெரியவில்லையே என்று எண்ணும் போதே அந்த அலறல் மீண்டும் கேட்டது. ஒரு பெண்ணின் அலறல்! சட்டென்று நான் எழுந்து அமர்ந்த வினாடி அறை விளக்கு போடப்பட்டது. இன்பா தான்! அமர்ந்திருந்த என்னை பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டு பின் தெளிந்தாள். “ஏதோ சத்தம்..” என்றாள். முகத்தில் பயம், குழப்பம், தூக்கம் எல்லாம் கலந்திருந்த்து.

    இருவரும் ஜெஸ்ஸியை எழுப்ப திரும்பினோம். ஜெஸ்ஸி,என்னோடும் இன்பாவோடும் அறையை பகிர்பவள். இறுதி ஆண்டு மாணவிகளை அறைக்கு மூவறாக பிரித்திருந்தனர். இப்போது தான் ஜெஸ்ஸி விழித்திருப்பதை கவனித்தோம். கண்கள் திறந்திருக்க அசையாமல் படுத்திருந்தாள். முகத்தில் 100% பயம் மட்டுமே இருந்தது.

    “ஜெஸ்ஸி... சத்தம் கேட்டுசில்ல? “ என்றேன். “ஆமா..”என்றாள். குரலில் லேசான நடுக்கம்.

    பின், சட்டென்று “ஒரு வேள கனவா இருக்குமோ?” என்றாள் நம்பிக்கையோடு.

    இன்பா ‘அப்படியா’ என்பது போல் என்னை பார்க்க, “லூசு.. மூணு பேருக்கும் ஒன்னாவா கனவு வரும்?” என்றேன் ஜெஸ்ஸியை பார்த்து. “அதானே..” என்றாள் இன்பா.

    அடுத்த நொடி மூன்றாவது முறையாக அந்த அலறல் கேட்டது. இப்போது மிக அருகில்! என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை, எனினும் எதோ சொல்கிறாள். ஏதோ ஒரு வார்த்தை,பயத்தில் உயிரை பிடித்துக்கொண்டு கத்துவது போல் இருந்தது. பொறுத்தது போதும் என்று கதவை நோக்கி விரைந்தேன். அதனினும் வேகமாக இன்பாவும் ஜெஸ்ஸியும் என்னை அடைந்து, இருபுறமும் பற்றி தடுத்தனர்.

    “என்ன பண்ண போற?” – இன்பா

    “யாரோ பொண்ணு ரீ.. “

    “பொண்ணு தான்னு யார் சொன்னா உனக்கு?” – ஜெஸ்ஸி

    “பின்ன?! பேயா.. லூசா நீ?!” பின், இன்பாவை பார்த்து, “தெறக்கலாம் இன்பா.. யாராவது ஸ்டுடென்டா இருந்தா?” என்றேன் கண்டிப்பாக.

    ஓரு முடிவுக்கு வந்தவளாய் இன்பா கதவை திறக்க,இருவரும் வெளியே வந்தோம். ஜெஸ்ஸி கதவருகில் நின்றாள். அதே நேரத்தில் இன்னும் இரண்டொரு அறைகள் திறக்க ஆங்காங்கே சிலர் காரிடரில் தெரிந்தனர்.

    “யாரு கத்தினா திவ்யா?” தள்ளி நின்ற திவ்யாவிடம் சற்று உரக்க கேட்டேன்.

    “தெரியல.. என்னனும் புரியல” என்றாள் கவலையாக.

    விடுதியின் முன் பகுதி கட்டிடம், ஹெஃஸகன் வடிவில்,நடுவில் திறந்த மைதானமும், அதை சுற்றி ஆறு பக்கங்களிலும் பாதி சுவரும் க்ரில்லும் அடைத்த காரிடருமாய் இருக்கும். நுழைவாயிலுக்கு நேர் எதிர் திசையில் மெஸ், மற்ற நான்கு புறங்களிலும் வாயிலையும் மெஸ்ஸையும் இணைத்துக்கொண்டு மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவிகளின் அறைகள். மெஸ்ஸில் இருந்து இருபுறமும் பின் பக்கம் பிரிந்து சென்ற இறக்கை போன்ற கட்டிடத்தின் அறைகள் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு அளிக்கப்பட்டிருந்தது.

    எங்கள் காரிடருக்கு நேர் எதிர் திசையில் இருந்து, “தீஃப் கர்ல்ஸ்.. ஜுனி கவிதா பாதிருக்கா..” என்றாள் இந்து. “இந்த ரனகளத்துலயும் இவ பீட்டர் கொரய மாடெங்குதே..” என்றேன் இன்பாவிடம். “அவள் தான் அப்ஸ்டெர்ஸ்ல இருந்து கதிடே ஒடி வந்திருக்கா..”என்றாள் இந்து தொடர்ந்து.

    விஷயம் வேகமாக பரவ இப்பொது காரிடரில் கூட்டம் அதிகரித்தது. “திருடனா..” என்றும், இப்பொது அறைக்கு சென்று தாளிட்டுக்கொள்வதா.. இல்லை வெளியே செல்வதா என அனைவரும் காரிடரில் குழம்ப, “அப்பாடி.. திருடனா.. “ என்றாள் எனக்கும் இன்பாவிற்கும் பின்னால் நின்ற ஜெஸ்ஸி. இன்பா தலையில் அடித்துக்கொண்டாள்.

    அதற்குள் க்ளெர்க் மேடம் (நாயகன் கமல் போல இவர் தான் இங்கு எல்லாம்! ) அனைவரையும் வெளியே செல்ல உத்தரவிட்டார். இந்து அங்கும் இங்கும் ஒடி “கெட் ஔட் ஒஃஃப் தி ஹாஸ்டெல்”என்று கத்தி கொண்டிருந்தாள். நானும் இன்பாவும் அவளுக்கு உதவியாக மெஸ்ஸுக்கு ஒடி, பின்புற கட்டிடத்திற்கு செய்தியை பரப்பி விட்டு திரும்பினோம். ஜெஸ்ஸி அறையை பூட்டிக்கொண்டு எங்களுக்காக காத்திருக்க, அவளோடு சேர்ந்து வெளியே நடந்தோம்.

    ஏதோ தோன்ற பின்புறம் திரும்பிப்பார்த்தேன். அரைமணி நேரத்திற்கு முன் நான் அமர்ந்திருந்த குட்டிச்சுவர் என்னை பார்த்து சிரித்தது. என் பார்வையை தொடர்ந்த இன்பா “எப்போ வந்து படுத்த..“ என்றாள் நடந்து கொண்டே.

    “அரமணி நேரம் இருக்கும்” என்றேன்.

    “இடியட்.. அவன் இந்த பக்கம் வந்திருந்தா வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்” என்றாள் கோபமாக.

    “கத்துனா என்ன பண்றதுனு குத்திருப்பான்.. கத்தி வச்சிருந்திருப்பான்ற? “ என்று சிரிக்க முயன்றேன்..

    “பின்ன கடலமுட்டாயா வச்சிருப்பான்?” என்றாள் கடுப்பாக.

    இதற்குள் நான்கு அறைகளை கடந்து என் வகுப்புத்தோழிகளின் அறையை அடைந்திருந்தோம். வனி, சாரு, சுஜி, லாவி –இவர்கள் அறை தான் அது. (இதில் மட்டும் என்ன நான்கு பேர் என்று தானே யோசிக்கிறீர்கள்? நான்கென்ன இதில் பல நேரங்களில் ஆறு பேர் கூட இருப்பார்கள். அதிகமாக ஆட்டம் போடும் கோஷ்டிகளில் முக்கியமானவர்கள். இவர்களோடு நானும் இன்பாவும் அடிக்கடி சேர்ந்துக்கொள்ள கலைக்கட்டும்.
    பேசிக்கொண்டே நடந்த நான் முதலில் அதை கவனிக்கவில்லை. ஜெஸ்ஸி தான் முதலில் அந்த அறை முன் தயங்கி நிற்க, பின் நானும் இன்பாவும் அதை கவனித்தோம்.

    (தொடரும்)
     
    Sweetynila, Caide, Deepu04 and 5 others like this.
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அந்த ஒரு இரவில் - 3​


    வனிதாவின் அறை வெளியே பூட்டப்படவில்லை மாறாக உள்ளே தாளிட்டிருந்தது. ஜெஸ்ஸி முகத்தில் மீண்டும் பயம் குடியேற, இன்பா அந்த கதவை தயக்கத்துடன் தட்டினாள். உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை, ஆனால் விளக்கு எரிவது தெரிந்தது.

    நான் சென்று பலமாக கதைவை தட்டினேன் “வனி... சாரு..”. உள்ளே லேசான சலனம். இப்போது இந்தப்பக்க அறைகளில் அனைவரும் வெளியேறி இருக்க நாங்கள் மூவர் மட்டும் காரிடரில் நின்றிருந்தோம். இன்பா என் கையை பிடித்துக்கொண்டாள். பயத்தை விழுங்கிக்கொண்டு “தெறக்குறிங்களா இல்லையா இப்போ!..” என்று கோபமாக கதவை தட்டினேன்.

    இப்போது தான் மற்றொரு விஷயம் உரைத்தது. பலமாக காற்று வீசினாலே ஆடும் அந்த அறை கதவு இப்பொது சிக்கென்று பிடித்திருந்தது. தட்டுவதை நிறுத்திவிட்டு விரல்களால் தள்ளிப்பார்த்தேன். “அந்தப்பக்கம் யாரோஓஓ..” இன்பா என் காதருகில் கிசுகிசுத்தாள். சென்று வாட்ச்மேனை அழைத்து வரலாமா என்று யோசிக்கும் வினாடி “ ஜென்ஸ்.. ஜெனி தானே..” என்றது மெலிதாக சாருவின் குரல்.

    “ஆமா சாரு.. நான் தான்.. என்னாச்சு? மொதல கதவ தெற..”

    அந்த கதவு திறக்க நாங்கள் கண்டக்காட்சி – மருந்திற்கும் தூக்கமில்லாத ஆறு முகங்கள்! (மீனுவையும் மதுவையும் சேர்த்து). எல்லா நெற்றிகளிலும் புதிதாக திருநீர்! ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றோம்.

    “போலாம் வாங்க” என்று ஜெஸ்ஸி முன்னே விரைந்தாள்.

    “திருடன்னு ஹாஸ்டலே அல்லோலக்கல்லோலப்படுது.. உள்ள என்னடி பண்றிங்க..” என்றேன் எரிச்சலோடு.

    “வேறென்ன பூஜைதான் நெத்திகள பாத்தா தெரில..” என்று நக்கலாக கூறி இன்பா என்னை இழுத்துக்கொண்டு முன்னே நடக்க, “யாரும் கலாய்க்க தேவயில்ல” என்றாள் வனி எங்கள் பின் நடந்து கொண்டே.

    ஒரு வழியாக வெளியே சென்றடைந்து மாணவியர் கடலில் கலந்தோம். பயம் தெளிந்து அனைவருக்கும் சுவாரஸ்யம் மட்டும் மிச்சமிருந்தது. பதட்டம் குறைய உடன் நின்ற ஆறு பேரையும் நிதானமாக பார்த்தேன். பின் இன்பாவை பார்த்தேன். என் பார்வையின் பொருள் புரிய அவள் குபீரென்று சிரித்தாள்.

    “ஹல்லோ... யாரும் சிரிக்க தேவயில்ல்...” என்றாள் வனி வடிவேலு பாணியில்.

    “சிரிக்காதரீ இன்பா.. நீங்க உங்க பூஜைய பத்தி சொல்லுங்கபா.. நைட் ப்ரேயரா?”

    “நக்கலா.. திடீர்னு பேய்மாதிரி அலறுனா பயமா இருக்காதா.. அதான் ஒரு சேஃப்டிக்கு..” – சாரு

    “அடிப்பாவிகளா.. அதுக்காக இப்டியா.. விப்பூதி வச்சுக்கிட்டு உள்ளயே இருந்தா திருடன் விட்றுவானா?”

    “திருடன்னு கதவ தெறந்ததுக்கப்புரம் தானே தெரியுது.. நாங்க எனவோ ஏதோனு..” என்று சாரு முடிப்பதற்குள்,
    “அதிருக்கட்டும், கதவ என்னடி பண்ணிங்க? அசைக்கவே முடியல..”என்றாள் இன்பா.

    “இந்த ரெண்டு குண்டூஸும் இந்தப்பக்கம் முட்டுக்குடுக்கும் போது நீ அந்தப்பக்கத்துல இருந்து அசச்சுடுவியா..” வனியையும் சுஜியையும் சுட்டிக்காட்டி லாவி கலாய்க்க,
    “எருமமாடே.. ஐடியா குடுத்ததே நீ தான்.. இப்போ கட்சி மாறியா”என்று அடித்தாள் வனி.

    “முட்டுக்குடித்திங்களா?!” என்றோம் கோரஸாக. அடக்கமாட்டாமல் சிரித்த சிரிப்பில் கண்ணீரே வந்தது எனக்கும் இன்பாவிற்கும்.

    “ஹல்லோ சிரிக்கறது ஈஸி.. நாங்க பட்டது எங்களுக்கு தான் தெரியும்.. எவ்ளோ நேரம் நானும் சுஜியுமே முட்டுக்குடுக்குறது.. இந்த மொட்டய (சாரு) நிக்க சொன்னா பாடீலாம் வெறப்பா இருக்கு பேஸ்மென்ட் ஆடுது.. வேஸ்ட் ஃபெல்லோ..” வனி தன் பராக்கிரமத்தைப் பற்றி பெருமை அடித்தாள்.

    இன்னும் சில வகுப்பு தோழிகள் சேர்ந்து கொள்ள, அவர்களை மாறி மாறி கலாட்டா செய்து சிரித்துக்கொண்டிருந்தோம். அப்போது அஞ்சலி என்னிடம் ஓடிவந்தாள், "சௌமில்லாம் எங்க ஜென்ஸ்?” என்று கேட்டுக்கொண்டே.

    (தொடரும்)
     
    Sweetynila, Caide, Deepu04 and 3 others like this.
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi rajeni..
    interesting ma...

    epdiyo 3 mani ku neenga room ku poiteenga..
    illai na neenga dhan thirudan ah 1st parthirupeengla irukum...

    night alaral satham na sema bayama dhan irukum..
    unga friends 6 peru vibuthi nethi ku vechutu, door ah thirakka mudiyama rendu per pidichuttu ninrundhadhu superrr...

    sowmi innom varlaya?
     
    2 people like this.
  7. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அந்த ஒரு இரவில் – 4​

    திருடன் என்றவுடன் ஒருவழியாக அந்த ஆறு மகா தைரியசாலிகளுடன் வெளியே வந்தால் இன்னொரு அறை வாசிகள் மிஸ்ஸிங். சௌமி, உமா, சீதா, சுமி இவர்களைத்தான் இப்போது தேடவேண்டும். இவர்கள் நால்வரை பற்றி சொல்ல வேண்டுமானால், முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை ஒரே அறையில் ஒன்றாக குப்பைக்கொட்டும் இணைப்பிரியாத் தோழிகள். புத்தகங்கள் வாங்கவென்று இவர்கள் அறைக்கு செல்ல (பாட புத்தகம் என தயவுசெய்து என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள்.. ஆம், நாவல்கள் வாங்கவே சென்றேன்) அதே புத்தகங்களாலேயே நெருங்கிவிட்டோம்.

    பொன்னியின் செல்வன் படித்த புதிதில் பல நாட்கள் இரவு உணவை மறந்து அருள்மொழித் தேவர் பற்றியும் சோழர்குல பெருமைப்பற்றியும் பேச்சு நடக்கும். சாண்டில்யன் துவங்கி சுஜாதா வரை, ப்ரைட் அண்ட் ப்ரீஜுடைஸ் முதல் கைட் ரன்னர் வரை அலசல். ஒருமுறை ‘நியூமரிக்கல் மெத்தட்ஸ்’ பரிட்சைக்கு முந்தைய நாள் இரவு பீஷ்மரின் தந்தை ஷாந்தனு முதலாய் ஹஸ்தினாபுர வம்சத்தின் வழித்தோன்றல்களை ஆராய்ந்தோம்! புத்தகங்களை படிப்பது சுகமென்றால் படித்தைப் பற்றிப பேசி அசைபோட்டு ரசிப்பது தனி சுகம்!! அனுபவிப்போர்க்கு மட்டுமே அதன் சுவை புரியும்!

    இவர்களுமா பயந்துக்கொண்டு உள்ளே இருக்கிறார்கள்? அஞ்சலியுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை வெளியில் தேடியும் அவர்கள் இல்லை.

    “உள்ளே போய் பாக்கலாம்”

    “விளையாட்றியா? க்ளெர்க் உள்ள விடாது”

    “அது கிட்டயே சொல்லுவோம் வா அஞ்சலி”

    வாட்ச்மென் பின்புறம் சென்றிருப்பதாகயும் அவர்கள் வந்தவுடன் பார்க்க சொல்வதாகவும் சொன்னார் இடத்தைவிட்டு அசையாமல்! இது வேலைக்கே ஆகாது என “ஒரு நிமிஷம்க்கா.. ப்ளீஸ்” என்று அவர் பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடினேன், அஞ்சலியும் என் பின்னே வந்துவிட்டாள்.

    ஓரளவிற்கு நான் எதிர்பார்த்தது போலவே அறை உட்புறம் தாளிட்டிருந்தது. மறுபடியும் மொதல இருந்தா?! என்றிருந்தது எனக்கு. கதவை தட்டினாள் அஞ்சலி, சலனமேயில்லை.

    “உசுரோட தான் இருக்கோம்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்க போயிட்றோம்!”

    என்ன நினைத்தாளோ, “எதுக்கும் வாட்ச்மேனை கூடிட்டு வரேன்” என ஆஞ்சலி ஒடினாள். “ஒன்னும் இருக்காது” என்று நான் காற்றுக்குத்தான் சொல்ல வேண்டியிருந்தது.

    என்ன தான் தைரியம் இருந்தாலும் தனியாக அந்த நேரத்தில் காரிடரில் நிற்க கொஞ்சம்.. கொஞ்சமே பயமாக இருந்தது. “இந்த பொழப்புக்கு நீ திருடங்கிட்டயே மாட்டிருக்கலாம்” என்று சத்தமாக சொல்லிக்கொண்டேன்.
    “சீதா.. உமா..” சும்மா நிற்பதற்கு தட்டுவோம் என்று தட்டினேன். முழுதாக இரெண்டு நிமிடம் தட்டிய பின், உள்ளிருந்து “வரேன்..” என குரல் கேட்டது! அந்தக்குரலில் பயமோ தயக்கமோ இருக்கும் என நினைத்திருந்தால் நான் ஏமாந்துதான் போனேன். அதில் சலிப்பும் எரிச்சலுமே இருந்தது.

    கதவு திறக்க, அந்த பேருதவியை செய்த சீதா என்னை திரும்பியும் பாராமல் சென்று படுத்துக்கொண்டாள்! மீதி மூவறும் கண்ணையும் திறக்கவில்லை!!

    “என்னப்பாத்தா எப்படிப்பா இருக்கு இவங்களுக்கெல்லாம்” என அழவேண்டும் போல் இருந்தது.

    “எந்திரிங்கடீ எருமைகளா..”

    “ஒரு மாடல் ப்ராக்டிக்கல்ஸுக்கு நீ இப்டி காலங்காத்தால படிச்சே ஆகனுமா?”

    தலையைத்தூக்கி எரிச்சலுடன் உமா கேட்டக் கேள்வியில் அதிர்ந்துபோனேன்! பரீட்சைக்கு கம்பைன் ஸ்டடி பண்ண வந்தேன் என்றா என்னை இத்தனை நேரம் வெளியே நிற்க வைத்தார்கள்?!

    “வந்து படுத்துகோடா செல்லம்” என்று கண்ணைத்திறக்காமல் அவள் பக்கத்தில் இடம்விட்டாள் சுமி. திருடனே வந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பாளோ?!

    “அடச்சீ திருடண்டீ ஹாஸ்டல்ல”

    “நம்ம ஹாஸ்டல்லயா?” -சௌமி

    “இல்ல பாய்ஸ் ஹாஸ்டல்ல.. உன்னோட ஆளுக்கு பயமா இருக்காம் போறியா? அய்யோ வெளில வாங்க மொதல”

    அவர்களுக்கு முன்னே நான் வெளியே செல்ல, வாசலில் இன்பா உள்ளே விடுமாறு க்ளெர்கிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள்! என்னை கொன்றுவிடுவது போல் பார்த்தாள்.
    எனக்கு பின்னால் பார்வையை செலுத்தி, “என்னடீ பண்ணீட்டிருந்திங்க” சௌமியை கேட்டாள்.
    “உலகத்தையே மறந்து தூங்கிட்டு இருந்தது இதுங்க.. நீ தூங்குனவங்கள விட்டுட்டு எழுப்புனவ மேல கோவப்படு.. களிகாலமப்பா இது..”

    “தூங்குனிங்களா?!! எப்டிடீ அந்த அலறல் கூட கேக்கலையா?! அசிங்கமாயில்ல?”

    “ரியலீ?! வேர் தே ஸ்லீப்பிங்க்? ஐ குட்டின்ட் பிலிவ் இட்” (ஜீ.எஸ். இந்துவே தான்)

    “உடனே பீட்டர் விடுட்டு வந்துடுவியே.. சரி, திருடன் எப்டிடீ இங்க வந்தான்?”

    “அடுத்த தடவ வரும்போது கேட்டு சொல்றேன்”

    “ப்ரில்லியன்ட் ஆன்ஸர்.. கலாய்ச்சுட்டாலாமா.. அதுசரி, திருடன் திருடனு அரமணி நேரமா சொல்ற.. எதடீ திருடுனான்.. மாச கடைசி வேற.. அவனுக்கு பஸ் சார்ஜ் கூட கெடைக்காதே! ஜுவல்ஸ் எதாவது?”

    அதையெல்லாம் அறிந்துகொள்ள எனக்கு எங்கே நேரமிருந்தது. ரூம் ரூமாய் தட்டவே பொழுது சரியாய் போயிற்றே. கேள்வியாய் இந்துவை பார்த்தேன்.

    “மொபைல் ஃபோன்ஸ்!!”

    “வாட்?!”

    “யெஸ்.. ஹீ டுக் ஆல் மொபைல்ஸ் ஃப்ரம் த ரூம்ஸ் விச் வேர் நாட் லாக்டு”

    “அடப்பாவி பயலே! 80% ஹாஸ்டலோட உயிரையே எடுத்துட்டு போயிட்டான்னு சொல்லு!! மக்கா சோறில்லாம கூட இருப்பாளுக செல் இல்லாம முடியாதே!!”

    இந்து சீரியஸாக தொடர்ந்தாள், “அது மட்டும்னா பரவால்ல..”

    (தொடரும்)
     
    Sweetynila, Caide, Deepu04 and 3 others like this.
  8. MahiSree

    MahiSree Gold IL'ite

    Messages:
    562
    Likes Received:
    283
    Trophy Points:
    138
    Gender:
    Female
    haa haa..Rajeni hostel lifea patthi romba jollya sollittu vareenga...
    (rendu episode serthu podungo madam. romba naal suspensa thanga mudiyala)
     
    1 person likes this.
  9. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi rajeni..
    nice update..

    thirudan vandhadhey theriyama sowmi room la thoongirkanga.. deep sleep pa..
    phone ah thookittana thirudan??
     
    1 person likes this.
  10. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks MahiSree :)
    Sure.. suspense ah nalaiyoda mudichidren.
     

Share This Page