அடையாள அட்டை பிறந்தவுடன் மாமனார் செலவில் பிறப்பு சான்றிதழ் ( இரண்டு காப்பி) அதுவும் வெளிநாடு என்றால் உடன் வேண்டும் கடவுச்சீட்டு பள்ளியில் சேர்த்தால் சட்டை பையில் தேசியக்கொடி போல் அடையாள அட்டை அதற்கும் சேர்த்து பணத்தை உறிஞ்சி விடுவார் அட்டை போல் குடும்பத்திற்கு ஆதாரம் குடும்பத்தலைவன் இல்லை -குடும்ப அட்டை தான் வாலிப வயசில் வனிதையரை கவர வண்டியில் வலம் வர ஓட்டுனர் உரிமம் கல்லூரியிலும் நம்மை விட்டு அகலாத கர்ணனின் கவசம் ஓட்டு போடா வாக்காளர் அட்டை அதில் உள்ள விவரங்களில் பல ஓட்டை வறுமை கோட்டின் கீழ் இருந்தாலும் சில இடங்களில் தேவை pan card இதை தவிர சிலர் வைத்திருப்பார் அஞ்சலக அடையாள அட்டை வேலைக்கு சென்றால் விஞ்ஞான முறையில் மின்னணு உணரும் மந்திர பணியாளர் அட்டை இதைத்தவிர இன்னும் வரப்போகுது உன் ஜாதகம் முழுதும் உள்ள unique நம்பர் நான் இறந்தால் நாளே நாளில் வீடு தேடி வரும் இறப்பு சான்றிதழ் இரண்டு காப்பி வங்கி கணக்கு ,குடும்ப பென்ஷன் அனுபவிக்க வேண்டுமே வாரிசு சான்று நாளை ஒருவேளை மேலுலகம் சென்றால் நமனும் கேட்பான் அட்ரஸ் proof , id proof சலிப்புடன் சற்றே கண் அயர்ந்தேன் யாரோ உலுக்கினார் ,கண் விழித்தேன் காண்பது கனவா ,நனவா ? காலன் அங்கே நின்றிருந்தான். எங்கே உன் அடையாளம் காட்டு என்று கர்ஜித்தான் எல்லா அட்டையின் xerox copy எப்போதும் என் கை வசம் ,எனவே நான் அசரவில்லை இவையெல்லாம் நீ உயிருடன் இருக்கும் வரை பூவுலகில் மட்டும் தான் செல்லும். மண்ணுலகில் நீ உன் அடையாள அட்டைகள் மாத்திரம் உன் அடையாளமாக விட்டு வந்தாய். உன் அடையாளம் என்று என்றும் போற்றும் எதை நீ விட்டு வந்தாய்? நல்லா கேக்கிறாரு கேள்வி - விழித்தேன் அப்பாடா ! கண்டது கனவு – கூவினாள் மனைவி எழுந்திருங்கள் இன்று என்ன தேதி ? ஆஹா -காலை 11 மணி -எப்படி மறந்தேன் பால் கார்டு வாங்க வேண்டும் நாளை காபி தான் இன்றைய டாபிக்
Sir, சரியா சொன்னீங்க ..மேலுகத்தில் இந்த அடையாள அட்டைகள் எல்லாம்...வேஸ்ட் தான்.. நம் அடையாள கார்டை நாம் தான் டிசைன் பண்ணனும் போல.. கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்..நான் விட்ட தடயங்கள் ஏதாவது இருக்குமா என்று.. Sriniketan
The one who comes to take us away has every action of our life recorded from the time of our birth until our time of departure. Why would he need any ID? If he makes a call that means he has already identified you and there is no need for ID. Viswa