same peelings!!! his dream project it seems!! My instant reaction was Sundar C ku oru dream aaa????!!
Bahubali took South Indian cinema to pan Indian level and he is going to take it to the world level it seems
இங்கிலீஷ் விங்லீஸ் படத்தைப் போல ஸ்ரீதேவி நடித்துள்ள படம் மாம். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படம் அம்மாவுக்கும், மகளுக்கும் இடையிலான உறவை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதில் அக்சய் கண்ணா, நவாகதீன், சித்தகி, அபிமன்யூ சிங், சாஜல் அலி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி உதயவார் இயக்கியுள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீதேவியின் மகளாக சாஜல் அலி நடித்துள்ளார். ஆனால் ஒரிஜினல் மகளான ஜானவியை நடிக்க வைக்க சிலர் விரும்பினாலும் ஸ்ரீதேவி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். ஜானவி நடிக்காவிட்டாலும் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக அதாவது கணவராக நடிக்க அத்தன் சித்தகியை தேர்வு செய்தாராம். பாகிஸ்தானை சேர்ந்த அத்தனன் சித்தகி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். எ மைடி ஹார்ட் என்ற படத்தில் ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்துள்ளார். இவரின் பெரிய ரசிகை ஜானவி. இதையடுத்து ஸ்ரீதேவியுடன் நடிக்க அத்தன் சித்தகியை ஒப்பந்தம் செய்துக் கொடுத்தாராம் அவரது மகள் ஜானவி.
என்ன கண்றாவியோ போங்கோ..! கலி முத்திடுச்சு..! அந்த ரிப்பன் ஹீரோயினுக்கு ஒரு விபரீத ஆசை வந்துடுச்சாம். அதாவது ஆண்களில் குச்சி நடிகர் தான் கம்பீரமானவராம். மீசையும் தாடியுமாக அந்த நடிகரைப் பார்த்தாலே ஆசை வருகிறதாம். ஒரே ஒரு நாளாவது அவரோடு வாழ்ந்து விட வேண்டுமாம். இப்படி ஒரு ஒப்பன் டாக் கொடுத்ததாக கோலிவுட்டில் தீயாக செய்தி பரவுகிறது. உண்மையா பொய்யா என்று கூட தெரியவில்லை. ஏற்கனவே பாடகி லீக் விஷயத்தில் சிக்கி குச்சி நடிகர் ரொம்பவே மனம் நொந்து போய் இருந்தார். தான் உண்டு தனது வேலை உண்டு என படு பிஸியாக இருக்கிறார் நடிகர். இப்போ ரிப்பன் நடிகை இப்படி சொன்னதும் கோடம்பாக்கமே கொதிப்பில் கிடக்கிறது. இளம் நடிகர்கள் இன்னும் ஆவேசத்தில் இருக்கிறார்கள். மச்சம்யா குச்சிக்கு என்று புலம்புகிறார்கள் என்கிறது கோடம்பாக்கம் குருவி.
ஒல்லியின் பிடியில் இருப்பவராம் அந்த அழகிய ஒல்லி நாயகி. ஒல்லி நாயகி இப்போதெல்லாம் படங்களில் அதிகம் நடிப்பதில்லை. ஒல்லி பார்ட்டி செய்யும் குறும்பு விளையாட்டில் அடிக்கடி நாயகி கர்ப்பம் ஆகி விடுகிறாராம். இதனால் சோர்வு, மயக்கம், வாந்தி என்று அல்லல் பட்ட நாயகி, ஒல்லியைப் பிடித்து ‘செம’ கவனிப்பு கவனித்து விட்டார். கதறி ஓடினராம் காதலர். இப்போது மீண்டும் லண்டன் பயணம் சென்றுள்ளார். கர்பத்தைக் கலைப்பதற்கு..! இனி என் பக்கத்துல வா மவனே ‘கட்’ பண்ணிடுறேன் என்று செல்லமாக மிரட்டிவிட்டுதான் போய் உள்ளார். வீக் என்ட் பார்ட்டியில் ஒல்லி உளறிவிட்டார். இதை இன்னொரு ஒல்லி வெளியே கசிய விட்டுள்ளது.