மெட்டி அணிவது ஏன்? பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம் பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்......முன்னோர்களின் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பு தான் !
அழகுக்கு மட்டுமின்றி சைதன்யத்தை அடையவும் அணிகலன்கள் உதவி புரிந்தன. வெள்ளி ஆபரணங்கள் புவி ஈர்ப்பு சக்தியை ஒட்டியும், தங்க நகைகள் ஈதரி லுள்ள சக்தியை ஒட்டியும் வேலை செய்வதால்,வெள்ளி நகைகள் இடுப்புக்குக் கீழேயும் , தங்க நகைகள் உடலின் மேல் பாகத்திலும் அணியப்பட்டன . அந்த காலத்தில் பெண்கள் 36 வித ஆபரணங்கள் அணிந்தனர்.. சிந்தூர் முதல் வளையல் வரை, தோடு, மூக்குத்தி, ஒட்டியாணம், necklace , மோதிரங்கள், மாங்கல்யம், கருகமணி போன்ற எல்லாவற்றுக்கும் ஒரு அறிவியல் காரணம் உண்டு. மெட்டி, மூக்குத்தி போன்றவை கருப்பை மாத விடாய் போன்ற கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. குங்குமம் குண்டலினி சக்தியை ஆக்ஞா சக்கரத்தில் நிலை நிறுத்தி மனம் அலை பாய்வதைத் தடுக்கிறது. கொலுசு சக்தியை வீணடிக்காமல் சரீரத்துக்கு முழுதுமாகப் பயன்பட உதவுகிறது. இதேமாதிரிவங்கி, தலை ஆபரண ஒவ்வொன்றும் ஒரு விஞ்ஞான பூர்வ உண்மையை உணர்த்துகிறது. இப்போது தங்கம் விற்கும் விலையில் திருட்டு நிலவரத்தில் தங்கம் என்று பேப்பரில் கூட எழுத முடியாது. வேத காலத்தில் தாலி கட்டும் வழக்கமும் இல்லை. மூக்குத்தி அணியும் வழக்கமும் இல்லை. அவர்கள் எதோ ஒரு நகையை மங்களகரமானது என்று கூறி திருமணத்துக்கு முன்னாலேயே பெண்ணின் கழுத்தில் அணிவித்தனர் என்று தெரிகிறது. தாலி , மூக்குத்தி இரண்டுமே அன்னியர், ( முகம்மதியர் படையெடுப்பினபோது பெண்களைக் காப்பாற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கம் . தான். ராமாயண காலத்தில் சீதா கல்யாணத்தின்போது பாணிகரஹண ம் ,சப்தபதி பற்றிய விவரங்கள் மட்டுமே ராமாயணத்தில் காணப் படுகின்றன. மாங்கல்ய தாரணத்துக்கு மந்திர பூர்வமான அங்கீகாரம் கிடையாது. சமூக சம்மதம் மட்டுமே உண்டு. மூக்குத்திக்கான reference முதன் முதலாக சுமார் 600-700 வருடம் முன்னால் எழுதப்பட்ட லலிதா சஹாஸ்ரநா மத்தில்தான் முதன் முதலாகக் காணப் படுகிறது ( நாசாபரண பாசுரா -பிரகாசிக்கும் மூக்குத்தியை உடையவள் ) என்று பொருள். விஞ்ஞானத்துக்குப் பொருந்தினாலும், சமூக விரோதிகளைத் தூண்டும் விதத்தில் இருப்பதால் எந்த தங்க ஆபரணமும், தங்கம் மாதிரி உள்ள ஆபரணமும் கூட அணியும் நிலையில் இன்றைய சூழ்நிலை இல்லை. மகாத்மாவின் எண்ணம் கனவாகவே தான் இருக்கும் போல் தோன்றுகிறது. ஜெயசாலா 42
மிக்க நன்றி, என்னுடைய நிறைய திரிகளை படித்து பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி.......... . . . நான் நாளை வந்து எல்லாவற்றுக்கும் பதில் போடுகிறேன்.தாமதத்துக்கு மன்னிக்கணும்....கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை , அது தான் தாமதத்துக்கு காரணம் .... . . நான் நிறைய பயணக் கட்டுரைகள், , சிறுகதைகள் மற்றும் தாத்தா பாட்டி சொன்ன கதைகள் எழுதி இருக்கேன், அவைகளையும் படித்து பின்னூட்டம் இட்டால் எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கும் குமார்