அறியாமை இருளகற்ற ஞானப் பால் கொடுக்கும் உமையவள் என அவளிருந்தாள்!! நீயோ - அவள் உயிர் குடிக்கும் காலனாய் அவளைச் சுற்றியிருக்கிறாய்!! அவள் உன் மீது கொண்ட அக்கறை - தாய் தான் சேய் மீது கொண்டது.... உனக்கோ அது வேம்பென கசக்க எத்தனையோ பேரை தன் நிழலில் அரவணைத்து - அவர்தம் வாழ்வில் உயர தூண்டுகோலாய் நின்றவரை - இன்று தன் சேய்களின் பிஞ்சுப் பாதங்களை மறந்து இறைவனவன் பாதங்களில் தஞ்சம் புறச் செய்துவிட்டாயே - பிஞ்சினில் நஞ்சு சுமந்த மாணவனே!!!
Re: கல்விக் கண் திறந்த உமையவள் - உமா மகேஸ்வரி அன்புள்ள முகில் .... அருமையான சொற்களால்....... ஆழமாய் ஊடுருவும் வினாவை தொடுத்து........ உங்கள் ஆற்றாமையையும்......அஞ்சலியையும் ஒருங்கே படைத்துவிட்டீர்கள்..... மனதை தொட்ட படைப்பு..... விழிநீர் கசியவைத்த படைப்பு.... விடை தெரியா வினாக்களை விதைத்த படைப்பு......:bowdown:thumbsup
Re: கல்விக் கண் திறந்த உமையவள் - உமா மகேஸ்வரி I was very much affected when I came to know about this incident.At that moment, I wrote this poem.I was also working as a teacher and my mom is a teacher....I was shocked to see the Vengeance the kids develop in their heart. May her Soul Rest In Peace.....
Re: கல்விக் கண் திறந்த உமையவள் - உமா மகேஸ்வரி ஆசிரியர்கள் என்பவர்கள் என்றுமே மாணாக்கரின் நலனில் அக்கறை கொண்டவர்கள்.அந்த உண்மையை பலரும் உணருவதில்லை.மேலும், இன்றைய சினிமா மற்றும் தொலைகாட்சிகளில் வன்முறை என்பது ஒரு சாதாரண விஷயமாக சித்தரிக்கப் படுகின்றன. இவையும், மாணவர்களின் இத்தகைய மனப்போக்கிற்கு காரணமாய் அமைகின்றன. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி சகோதரி.
Re: கல்விக் கண் திறந்த உமையவள் - உமா மகேஸ்வரி மனதினை தொட்ட வரிகள்..உள்ளப்பூர்வமாய் அவர்களுக்காய் வடியும் கண்ணீர். ஆழமான படைப்பு.
Re: கல்விக் கண் திறந்த உமையவள் - உமா மகேஸ்வரி தங்களது வருகைக்கும், தங்களது மேன்மையான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி