சிரிக்கும் போது... சிறகுகள் தேடி சேர்ந்து பறக்க ஜோடிகள் தேடி அழும் போது அறைக்கதவு மூடி அணைக்க தலையணை தேடி உண்ணும போது உரைப்புக்கு கொஞ்சம் ஊறுகாய் தேடி தனித்து இருக்கையில் துணைக்கு வர கனவுகள் தேடி கூட்டத்தின் நடுவிலே குமைந்து போய் தனிமை தேடி வாழ்வதற்கு வழிகள் தேடி வாழ்வு வந்தபின் வசதிகள் தேடி வாழவாழ .... வேதனை சேர வேண்டி வேண்டி நிம்மதி தேடி தேடி தேடி தொலையுதடா வாழ்க்கை தேடல் என்பதே - நாம் தேர்ந்தெடுத்த வாழ்க்கை !!!
தேடல் தொடர்கிறது புஷ்பலதா.......அருமையான வரிகள்.....என்னக்கு ஜே ஜே வில் வரும் பாட்டு தான் நினைவில் தோன்றுகிறது.....