நேற்றிரவு நான் இனிய கனவொன்று கண்டேன், அதிலே ஓர் ஒளியாக இறை தோன்றக் கண்டேன், உன் அன்புக்குப் பரிசாக ஓர் அரிய வரம் தந்தேன், கேள் உடனே என்று ஒரு குரல் ஒலிக்கக் கேட்டேன். பொன் பொருளோ, பதவியோ, நீடித்த சுகமோ, நீண்ட ஆயுளோ, காண்போர் மயங்கும் உருவோ, எவரையுமே கவர்ந்திழுக்கும் கன்னலான மொழியோ, பெயர் சொல்ல, உடன் ஊர் மெச்சத்தக்க புகழோ, இவை ஏதும் வேண்டாமென உடனே முடிவெடுத்தேன், என்றும் நிலையாக எண்ணத்தில் அவனிருக்க வேண்டும், என்றெல்லாம் கேட்கத்தக்க செறிவுடையேன் அல்லேன், வேறென்ன கேட்பது? உடன் முடிவெடுக்க வேண்டும். மின்னலென ஒரு எண்ணம் உதயமாகக் கண்டேன், உடன் நிமிர்ந்து, நானும் என் வரத்தினைக் கேட்டேன், தினந்தோறும் ஒரு வரம் அவன் தர வேண்டுமென்று. ஒளி மறைய, நான் எழுந்தேன் ஏமாற்றம் கொண்டு. -ஸ்ரீ
sri....unga varam super thaan ...anal komjam athigamo...:hide: nalla velai kadavul pilaithaar...illaiyendraal...:spin(dont mstake me pa...) very good poem sri...
hi Sri, konjam lighta bongu party solli lights off achu nenaikren. poo korthu malai seivathu parthirukindren. varthaikal korthu seidha nalla kavidhai ithu.
நல்ல அருமையான ஒளி,அநியாயமாய் கோட்டை விட்டீரீ! இப்படித்தான் வாழ்க்கையும்,வாய்ப்பு வரும் போது புத்தி பேதலிக்கும். சரியாக பயன்படுத்தும் வாய்ப்பு வரமாகும்,இல்லையேல் வரம் கூட மற்றொரு வாய்ப்பாக மாறிவிடும். நல்ல கவிதை,கருத்து செறிவு,சிந்தனையை தூண்டியது,நன்றி ஸ்ரீ.
Thanks for your feedback Latha. பேராசை கூட இல்லீங்க அது. ஒரே ஒரு வரம் - தினம் ஒரு வரம். அவ்வளவு தானே? இதுக்கே சாமி எஸ் ஆகிட்டாரே! -ஸ்ரீ