Ennada karmam ithellam .. Feels like we are in parallel universe . நேற்றைய எபிசோட் தொடக்கத்தின் காட்சியில் லாஸ்லியா கன்ஃபஷன் ரூமில் இருக்கிறாள்..!!! லாஸ்லியா அந்த கன்ஃபசன் ரூமில் என்ன பேசினால்... ஏது பேசினால்.. பிக்பாஸுக்கும் அவளுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் என்னவென்பதே கவினுக்கு தெரியாது..!!☺☺ அவள் கன்ஃபசன் ரூம் உள்ளே சென்றது சேரன் "அப்பா" உட்பட அங்கிருக்கும் யாவருக்கும் தெரியும் தான்!!☺☺ சற்று முன்பு தான் ஆடியன்ஸ் முன்னிலையில் அவள் அவமதிக்கப்பட்டிருக்கிறாள்.. மனமுடைந்து மன அழுத்தம் கொண்டிருக்கிறாள் என்பதும் அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும்!!☺☺ ஆனால் கவினைத் தவிர அங்கிருந்த ஒருவருக்கு கூட அத்தகையான.. அப்படியான சிக்கலான மனப் போராட்ட சூழலில் லாஸ்லியா கன்ஃபஷன் ரூம் சென்றதை பற்றி சேரன் "அப்பா" உட்பட யாருமே கண்டு கொள்ளவோ... அட ஒரு பொய்யாக.. நாடகமாக... ஆடியன்ஸ் பார்ப்பார்களே என்பதற்காக.. வெறும் பேச்சுக்காக கூட கவலைப்பட வில்லை..!!☺☺ கவின் மட்டும் கன்ஃபஷன் ரூம் அருகே வீற்றிருக்கும் சோஃபாவில் அமர்ந்தபடி லாஸ்லியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்..!!☺☺ அங்கே அவள் அழுதிருப்பாள்.. லியா அவள் தான் தன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பிக்பாஸிடம் கேட்டிருப்பாள்.. என அவன் மனம் சொல்கிறது!!❤❤ பார்வையாளர்கள் நாம் பார்க்கிறோம்..!! அங்கே அச்சு அசலாக லியா அதைத் தான் செய்கிறாள்..!!☺☺ பிக்பாஸ் லியாவை சமாதானம் செய்தனுப்ப... தன் கண்ணீர் மறைத்து கன்பசன் ரூம் விட்டு வெளியே வருகிறாள்..!!☺☺ என்ன பேசுன... என்ன கேட்ட... என்ன சொன்னாரு பிக்பாஸ்???? என எந்த பிரத்யேக கேள்விகளும் கவின்.. லியாவிடம் கேட்கவில்லை..!!☺☺❤❤ என்ன??? Cab புக் பண்ணிட்டாங்களா?? நீ வீட்டுக்கு போக கேப் புக் பண்ணீட்டாங்களா?? என கேட்கிறான்!!☺☺❤❤ லியா சிரிப்பை அடக்கி.. உதடு கடிக்க... நா வீட்டுக்கு போகனும்னு கேக்கவே இல்லீயே என செல்லப் பொய்யொன்று சொல்லி.. கவின் அருகே.. சோஃபாவில் ஒரு குழந்தை போல் ஏறி மண்டியிட்டு அமர்ந்தபடி பேசுகிறாள்...❤❤ எதுவா இருந்தாலும் இங்கே இருந்து சமாளிங்கனு சொன்னார் என சொல்கிறாள்..!!☺☺❤ கவின் இதற்கு.... அட கவினை விடுங்கள்.. நீங்களோ நானோ யாராக இருந்தாலும்.. அந்த நொடியில்.... ம்ம்.. சரி.... "சமாளிச்சுடுவியா"??? என ஒருமையில் குறிப்பிட்டு.. மொத்த பாரத்தையும் அவள் மீது ஏற்றி வைத்தபடி தானே கேட்டிருப்போம்..??? ஆனால் கவின்... எதுவானாலும் இருந்து சமாளிக்கச் சொன்னார் என லியா சொல்லி முடித்த அடுத்த நொடியே... "சமாளிப்போம்மா....????" ❤❤❤ என்றே தான் கேட்கிறான்..!! அவளும் ஒரு சின்னச் சிரிப்போடு சம்மதிக்கிறாள்..!!❤❤❤ மக்களே என்னளவில் சொல்கிறேன்...❤❤ இந்த உரையாடல் இது அத்தனை அழகாக ரொமான்டிக் காதல் பொங்கி வழியும் காட்சி..!!❤❤ இவர்கள் இதை ஏற்கனவே கலந்தாலோசித்து அதன் பிறகு கன்பசன் ரூம் சென்றிருக்க வில்லை..!! கவினிடம் ஏதும் சொல்லாமல் தான் அவள் கன்பசன் ரூம் சென்றிருக்கிறாள்!!☺☺ அதனால் தான் வெளியே வந்து கூட நான் வீட்டுக்கு போறேன்னு சொல்லவே இல்லீயே என சிரிக்கிறாள்..!!❤❤❤ சேரனும் லியாவும் என இவ்விருவரில் ஒருவர் வெளியேறும் சூழல்!!☺☺ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க... லாஸ்லியா நீ இனி இந்த வீட்ல இருக்கத் தேவையில்லை... நீ வெளிய போயிருடி என ஹவுஸ்மேட்ஸ் சொல்லாமல் சத்தமாகச் சொன்னதற்குச் சமம்!!☺☺ சேரன் "அப்பா"வே கூட கடைசி நிமிடம் வரை.. தான் இருந்து... லாஸ்லியா வெளியேறினால் பரவால்ல என்றே தான் நினைத்தார்..!!☺☺ புத்திக்கூறுபாடுள்ள மூளை வளர்ச்சி அடைந்த தெளிவான மனநிலை உடைய யாவருக்கும் தெரியும் சேரன் வெளியேற விரும்ப வில்லை என்பதும்.. அவர் லாஸ்லியாவுக்காகப் பேசியதெல்லாம் சபை நாகரீகப் பொய் என்பதும்..!!☺☺ லாஸ்லியாவே கூட.. தானே தான் எவிக்ட்டாகி வெளியேறப் போகிறேன் என உறுதியாக நம்புகிறாள்!! சேரன் "அப்பா" உட்பட அனைவரும் அப்படி தான் அதை தான் விரும்பவும் செய்கிறார்கள்..!!☺☺ லாஸ்லியா தன்னை அவளே நம்பாமல்... நம்பிக்கை இழந்து... தோற்று வெளியேறத் தயாராகிய போதும்... உடனிருந்த அனைவரும் கூடி அவளை வெளியேற்றத் துடித்த போதும்... கிட்டத்தட்ட கண் முன்னே தெரிந்த அத்தனை நம்பிக்கையும் பொய்த்து... இல்லை இனி சகலமும் சரிந்தது.. முடிந்தது... வீழ்ந்தோம் எனும் போதும்.... லாஸ்லியா நீ திரும்பி வருவ.. நீ போக மாட்ட எனக்கு தெரியும்... நீ திரும்பி வருவ!!!! என முழு நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டே இருக்கிறான் கவின்..!!!!!❤❤❤ லியாவே கூட அதை நம்ப மறுத்து... கவின் என் பொருட்களை கொண்டு வந்து குடு... நான் கிளம்புறேன் என்கிறாள்..!! மியூச்சுவல் ஃபண்ட் உண்டியலை இது உனக்கு தான் வச்சுக்கோ என்று அவனிடம் தருகிறாள்..!!! தன் வெற்றி மெடல் உடைக்கக் கூட தயாராகி விட்டாள் தான்...!!!! நா சொல்றத கேளு.. இந்த எவிக்சன் ப்ராசஸ் இன்னும் முடியல.. நீ திரும்பி வருவ... இந்த உண்டியல் இங்க தான் இருக்கும்... திரும்பி வந்து நீயே எடுத்துக்கோ என்கிறான்...!!!!!! ஆக்டிவிட்டி ரூம் செல்லும் முன்பு எல்லோரையும் கட்டியணைத்து பிரியா விடை கொடுக்க... ஹவுஸ்மேட்ஸ்களும் எப்படியும் இவள் தான் எவிக்ட்டாகப் போவதெனத் தீர்மானித்து சாண்டி தர்ஷன் ஷெரீன் எல்லாம் லியாவுக்கு பாச முத்த மழை பொழிந்து வழியனுப்ப... கவின் நீ திரும்பி வருவ... என்று கட்டியணைக்க மறுக்கிறான்!!!!!! க்ரூப் செல்ஃபி எடுக்கும் போதும் கூட வேண்டா வெறுப்பாகத் தான் நிற்கிறான்!!! நீ திரும்பி வருவ என சொல்லி அவள் போயிட்டு வரேன் என கையசைத்ததைக் கூட அவன் ஏற்கவுமில்லை..!!! உள்ளே யார் எவிக்டட் என்பதை காண்பிக்காமல் ப்ளாஸ்மா டிவி பாதியில் அணைக்கப்பட... Fingers crossed எனும்படியாக விரல் கோர்த்துப் பிசைந்தபடி... பதைபதைப்புடன் லாஸ்லியா திரும்பி வந்தேயாக வேண்டும் என காத்திருக்கிறான்!!!! மக்களே.. நான் சொல்லப் போவது உங்களுக்கு மிகைப்படுத்தலாகத் தோணலாம்..!!ஆனால் திருமணமான ஆண்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன்..!!☺☺ பிரசவ அறையின் வாசலில்... தன் மனைவியின் வருகைக்காக... அவள் எக்குரையுமின்றி உயிருடன் மீண்டு வந்தேயாக வேண்டும் என காத்திருக்கும் ஒரு கணவனின் பதற்றத்தை அந்த காட்சியில் நீங்கள் கவினின் கண்களில் தரிசித்திருக்கக் கூடும்..!!!❤❤❤ கவினின் நம்பிக்கை ஜெயித்து.. லாஸ்லியா மீண்டும் அவனிடம் வந்து சேர்கிறாள்..!!!!!!❤❤❤❤ மற்ற ஹவுஸ்மேட்ஸ் எழுந்து நின்று வெல்கம் பேக் என லாஸ்லியாவை வரவேற்க.. கவின் எச்சலனமுமின்றி அமர்ந்திருக்கிறான்!!! லாஸ்லியாவின் வருகையை பார்த்தபடி இருக்கிறான்!!!❤❤ ஆமாம்.... அது அப்படித்தான் இருக்கும் அந்த மனநிலை...!!!! ஒரு பெரும் மனப்போராட்டம் அதை வென்று ஜெயித்ததும் நம் மனித மனம் அது.. அதீத மகிழ்ச்சி சந்தோஷத்தில் ஸ்தம்பித்து போகும்..!!❤❤ கவின் அப்படி அசைவற்று அமர்ந்திருந்தது தான் அழகு..!!❤❤ கவினின் உணர்ச்சிகள் உணர்வுகள்... லியா மீது அவன் கொண்டிருக்கும் ப்ரியமது முற்றிலும் உண்மையானது..!!❤❤ எனக்குத் தெரிந்து இது நடிப்பென்று நீங்கள் சொன்னால்... ஒரு மனிதனால்.. ஏன் ஒரு தலைசிறந்த நடிகனால் கூட இத்தனை நேர்த்தியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்கவே இயலாது..!!❤❤❤ இதையும் கூட நடிப்பென்று நீங்கள் நினைத்தால்.. பாவம் உங்களுக்கு உணர்வுகளின்.. அன்பின்... ப்ரியத்தின் உட்கூறுகள் இன்னும் சரிவரப் புரியவில்லை.. பிடிபடவில்லை.. விளங்கவுமில்லை என்பதே பரிதாப பரிசுத்த பேருண்மை..!!☺☺ சனிக்கிழமை எபிசோடில் சோகத்தில் கவின்லியா தனித்து விடப்பட்ட அதே சோஃபாவில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடின் போது சந்தோஷ மகிழ்ச்சியில் வேறாருமற்றுத் தனியே இருவரும் சேர்ந்திருந்தது.. அது அத்தனை அழகான மன நிறைவான காட்சி..!!❤❤❤கடவுள் இருக்கான்டா குமாரு என்றெனது உள்ளம் அடைந்த ஆனந்தம் அது சொல்லில் எழுத்தில் எழுதி விட முடியாத பேரானந்தம் பெரும் மகிழ்ச்சி..!!❤❤❤ கவின்லியா ஒருவொருக்கொருவர் அன்பைப் பொழிவதையும்... உறுதுணையாக ஆதரவாக இருப்பதையும் குற்றம் சாட்டுபவர்கள்... சொல்லுங்களேன்....!!! கவினுக்கும் லியாவுக்கும் வேறு யாரும் உதவவோ ஆதரவாகவோ அந்த வீட்டில் இல்லை எனும் போது... இவர்கள் சேர்ந்திருப்பதில் என்ன தவறு????☺☺☺☺ நீங்கள் என்னிடம் மலையாள பிக்பாஸ் ஜோடியொன்றின் காதலைப் பற்றி புகழ்ந்து பேச முற்படுகிறீர்கள்!!☺☺☺ மன்னிக்கவும்!!☺☺நான் அந்த சீசனையும் அந்த ஜோடியையும் பார்த்து.. அதன் பிறகே தான் கவின்லியாவையும் இவர்களது அன்பைப் ப்ரியத்தைக் காதலைக் கொண்டாடுகிறேன்!!☺☺ காதல் என்பது கட்டியணைத்து இதழ் முத்தமிடுவதும்.. சேர்ந்து உறங்குவதும் மட்டுமல்ல..!!!❤❤ இணையர் இருவருக்கும் இடையே இருக்கும் அந்த ஆத்மார்த்தப் புரிதலும்.. பிணைப்பும்.. பேரன்பும் தானே காதல்..!!❤❤❤ கவின் ஹேட்டர்ஸ் அதிக முறை என்னிடம் அதிபுத்திசாலித்தனமாக முன்வைக்கும் கேள்வி... உனக்கு திருமணமாகி.. உனக்கொரு மகள் இருந்தால்.. அவளை இந்த கவின் போல ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுப்பாயா??என்பதே..!!☺☺ பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை முதல் நாளில் இருந்து பார்த்தவனாக.... தொண்ணூறு நாட்கள் கடந்து... கவினை பார்த்து வியந்த இந்த நிலையில் இருந்து சொல்கிறேன்... ஒரு பெண்ணை... தான் விரும்பும் காதலியை.. இத்தனை அக்கறையும் அன்புமாக கவனித்துப் பேணிப் பாதுகாக்கும்... கவின் போன்ற ஒரு ஆண்மகனுக்கு.. மாப்பிள்ளை.. மருமகனுக்கு... என் மகளை மனம் நிறைந்த மகிழ்வோடும்..பெருமையோடும் சர்வ நிச்சயமாக நான் கட்டிக் கொடுப்பேன் தான்!
Los kku vekkam, maanam, sudu, soranai erundhudhu na will she eat chilli for K? So this proves that she has no respect for her father in this world. Forget about others. Chilli ah venna kavin kannila thadavalam. (I'm so cruel you see) avlo Gaanda errukken na avan mele. @rmpriya full translation venda ,at least give a gist of that Tamil post.
avanga love story ya feel panni etho oru loosu ezhuthi irrukku , avlo caring ah irrukkara Kk ku , ponna kooda kalayaanam panni koduppaaram .
And why is this being done in Private ? They should do it in front of all housemates. Appo Los sirichudhu na K ku surrrr nu kovam yerum.