பிறந்ததும் எனை பார்த்து அழுதாய் நான் ரசித்தேன் உன் சிணுங்கலை மாதங்கள் கடந்ததும் என் முகம் பார்த்து சிரித்தாய் நான் அழுதேன் உன் மழலை பேச்சு கேட்டு தவழ்ந்தாய் நடந்தாய் ஓடினாய் வளர்ந்தாய் பேசினாய் பூரித்தேன் உன் வளர்ச்சியை கண்டு பொங்கி பொங்கி சிரித்தேன் உன் அறிவு திறமை கண்டு போம்மா உனக்கு ஒன்றும் தெரியாது என நீ சொன்ன போதும் நான் சிறுமை கொள்ளவில்லை மகளே பெருமை கொண்டேன் உன் சொல் திறமை கண்டு எத்தனை வயதானாலும் நீ எனக்கு மழலையே உன் பேச்சு எனக்கு மழலை பேச்சே
Semma varigal, unmaiyum kuda.... Ungal kavithaiyai padithathum niyabagam vantha kural குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.
பெரியம்மா, முன்னம் கருவில் சுமந்ததும் ஓர்நாள்! பின்னும் கவிக் கருவிட்டது இந்நாள்! என்றோ சேயெனப் பிறந்திருந்தாலும் அவள் இன்றும் உமக்குக் குழவியே ஆகும்! மழலையில் மிழற்றிய மொழிகளைக் கேட்டீர்! அழகிய கூற்றென்று ஆனந்தம் கொண்டீர்! பிழையுங்கள் அறிவென்று சொல்லிய போதும் இழிவெனத் தாம் என்றும் கருதியதில்லை! வாயுள்ள பிள்ளைப் பிழைக்கும் என்பார்கள்! தாயுள்ள பிள்ளைத் தழைக்குமென்பேன் நான்! ஆயுளுள்ள வரையில் அவர்க்கே வாழ்வீரென சேயுள்ளம் உணர்ந்தால் சுகிப்பீர் அன்றோ ?