நான் தமிழாலே சொல்மாலை உனக்காக நெய்தேன் நீ இசையோடு அதைப்பாடிக் கவியாகச் செய்தாய்! (2) நீ அல்லாது யார் மீது கவிபாட வந்தேன்? உன் அழகுக்குப் புகழ்சேர்க்கத் தமிழோடு வந்தேன். நான் தமிழாலே சொல்மாலை உனக்காக நெய்தேன் நீ இசையோடு அதைப்பாடிக் கவியாகச் செய்தாய்! உன் அங்கங்கள் தனைப்பாட உவமைகள் தேடி நான் அலையாத இடமில்லை அறிவாயோ அதை நீ?(2) உன் இளமைக்குச் சரியான உவமைகள் இல்லை உனைப் பாடாத கவிஞர்க்கு பெருமைகள் இல்லை (2) நீ அல்லாது யார் மீது கவிபாட வந்தேன்? உன் அழகுக்குப் புகழ்சேர்க்கத் தமிழோடு வந்தேன். நான் தமிழாலே சொல்மாலை உனக்காக நெய்தேன் நீ இசையோடு அதைப்பாடிக் கவியாகச் செய்தாய்! ஒரு கவியில்தான் எதுகைகள் மோனைகள் உண்டு எனக் கவிஞர்கள் இதுகாறும் எண்ணத்தில் இருந்தார் (2) உன் கலைகொண்ட தேர்மேனி இன்றிங்கு கண்டு ஒரு கவிதைநீ என்றவரும் மனதாரச் சொன்னார் (2) நீ அல்லாது யார் மீது கவிபாட வந்தேன்? உன் அழகுக்குப் புகழ்சேர்க்கத் தமிழோடு வந்தேன். நான் தமிழாலே சொல்மாலை உனக்காக நெய்தேன் நீ இசையோடு அதைப்பாடிக் கவியாகச் செய்தாய்!
ம்ம் அதே தான்.....நீங்கள் வளர்ந்த காலத்தில் வந்த பாடல் என்று நினைக்கிறேன்....அதனால் தானே சரியாக சொன்னீர்கள்?
உங்கள் காலத்து பாடலையும் தான் இப்போது இன்டெர்நெட் உதவியுடன் தெரிந்துகொள்ளலாமே......அப்படி தெரிந்துக் கொண்டது!
உங்கள் வாயாலேயே உண்மையைக் கொண்டு வரத் தான் இந்த திட்டம்....எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது.....சரியா? notdonesmiley