சில நேரம் நான் உன் கண்களுக்கு புலப்படுவேன்... சில நேரம் நான் உன் கண்களுக்கு புலப்படுவதில்லை... நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்... நீ அழுதால் நானும் அழுவேன்... என்றும் உன்னை தொடர்வேன் தோழனாய்... என்றென்றும் விழாமல் விழுவேன் உனக்காக... காரணம் நான் உன் நிழல்...
எனை என்றும் நீங்கா என் நிழலே. நீ புலப்படாத போதும் மறைவதில்லை.. காரணம் நான் இருப்பது இருளில். ஒரு வகையில் எனை வழி நடத்தும் ஆசான் நீ... என் பயணம் வெளிச்சம் நோக்கி எனில், நீ என் பின்னால் திசை மாறினால் அதை எனக்கு காட்ட நீ என் முன்னால்.... வைஷு ரொம்ப அழகான கவிதை மா.
உன் நிழல், உன்னிடம் ஐக்கியம் ஆவது, நீ இளைப்பாற படுக்கும் பொழுது, இரவிலே இளைப்பாறி, நிழலோடு உறவாடி, உத்வேகத்துடன் வரும் பகலில் நீ முன்னேற, உன் நிழல் தொடர்கிறது, அவ்வப்பொழுது மறைகிறது, உன் நிழல் என்பது உன் மனசாட்சியே என்பது என் கருத்து.... அருமையான கவிதை வைஷ்