1. கடற்கரை மணலில் சிப்பிகள் பொறுக்கும் சிறுமியாக தோற்றமளித்து பின், மழை ரசிக்கும் தேவதையின் சாயலைக்கொண்டிருந்து எதிர்பாரா கணத்தில் நெருப்பை உமிழும் டிராகனாக உருப்பெற்றது புல்லுருவியொன்று. முரண்பாடுகளை கவ்விக்கொண்டு தேசமெங்கும் பறந்து தீர்த்தது. ஆத்மார்த்தமான நட்புக்குள் எச்சமிட்டு உன்மத்த நிலையில் உயரப்பறக்கிறது இப்போது. 2. எனது சந்தோஷத்தின் சாவியை திருடித் தொலைத்துவிட்டு ஒன்றும் நடந்துவிடாத பாவனையில் முன் தோன்றுகிறாய். கற்களாலான துர்தேவதைகளின் மடியில் துயில்வது உனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. எதிரிகளின் கூடாரமெங்கும் உன் பெயரை ஒலிக்கச்செய்கிறாய்.. முடிவில், ஒன்று மறந்தாய்.. மழை தின்ற வெயிலுடன் நடக்கிறது உன் யுத்தம். -நிலாரசிகன்.
Hi Niarasigan, Let me take the oppurtunity to give the first fb to this beautiful poem... கோபம் தின்னும் உம் வரிகள் கூட அழகு தாம்... பறவை வேடமிட்ட புல்லுருவியாய் இருந்தாலென்ன, உம் வரிகள் எம்மை சிறகு விரிக்கும் பறவையாய் வானம் வரை கொண்டு செல்கின்றது... இரசனைக்குரியவனின் வரிகள் ரசிக்காமல் போகுமோ? Unga pen(keyboard?) ah konjam kadan kodunga pa... adha paarthaavadhu edavathu kavithai varudhaanu parkalaam... :hide: