பரிணாம வளர்ச்சி கேள்வியில் பிறப்பது ஞானம், இதில் எனக்கு ஒரு கேள்வி பிறந்தது? பரிணாம வளர்ச்சி சொல்லுது; குரங்கிலிருந்து பிறந்தான் மனிதன் என்று. ஊஹூம் நம்புவேனா? இங்கும் அங்கும் விடை, தெரியாமல் தாவினேன், தவ்வினேன், குரங்கினைப் போல். கேள்வியில் பிறந்தது ஞானம்; தாவுகிறேன், தவ்வுகிறேன், :rotfl உணர்ந்தேன், மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்தான். அதை விட ஆச்சர்யம், வரும் காலங்களில், குரங்கு மனிதனில் இருந்து பிறக்க போகிறது; ஞான சூன்யம் இவன், என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது, நான் என் குழந்தைப் பருவ உருவப் படத்தையும் பார்கிறேன், என்னையே நிலை கண்ணாடி முன்னும் இன்று பார்கிறேனே? நீங்களும் சற்றே நிலைக் கண்ணாடி முன் நின்று பாருங்கள்; இன்றைய மண உளைச்சலிலும், உடல் உபாதைகளிலும், குரங்காய்த் தான் உருவத்தில் மாறி விடுவோம் போலிருக்கு. :biglaugh பரிணாம வளர்ச்சி இன்றோ ஆனது பரிதாப தளர்ச்சி
நட்புடன் நண்பருக்கு உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான்.எவொல்யூஷன் எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது சிக்கலான, சர்ச்சைக்குரிய ஒன்று . மானுடவியல், மரபணுவியல் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும் இன்னுமொரு பரிணாம வளர்ச்சியை உலகம் தங்குமா??? பின்குறிப்பு சிக்கென் குன்யா வந்தபோது இந்தக் கவிதையை போடாம போய் விட்டீர்களே.ஏறக்குறைய நா அப்பிடித்தான் இருந்தேன் ..நடந்தேன் அதனை பாராட்டு வந்திருக்கும் அப்போது ..என்னையும் சேர்த்து :biglaugh
நன்றி சரோஜ், தாங்காது தான். ஆனால் ஜெட் ஸ்பீடு வாழ்க்கையில், அது மாதிரி தான் ஆகி விடும் போல். அதற்கு சிக்கன் குன்யா ஒரு உதாரணம்.
Parinaama valarchchikku Puthiya parinaamam koduththai Un karpanaiyin parinaama valarchchikandu Kan imaikka marandhu nirkiren naan!! Anbhudan pad
அன்புள்ள நட்புக்கு, இன்னொன்னா ? உலகம் தாங்காது சாமி. ஆமா எனக்கு ஒரு சந்தேகம். இப்படியெல்லாம் உங்களை யோசிக்கச் சொல்லி யாரு சொல்றா??? "எங்க கண்ணாடி முன்னாடி பொய் நின்னு அரை மணி நேரமாச்சு, இன்னும் என்னதான் பண்றீங்க????? ச்சே இவரோட இதே தொல்லையாப் போச்சு" இது உங்கள் இல்லத்தரசியின் குரல் தானே நண்பரே. :biglaugh:biglaugh யுரேகா!!! உங்களை இப்படி யோசிக்க யார் சொன்னது என்பதை நான் கண்டு பிடித்து விட்டேன் :biglaugh:biglaugh