பசியை தூண்டும் புதினா நமது அன்றாட சமையலில் சுவையும், மணமும் தரும் பொருட்களில் புதினாவிற்கு முக்கிய பங்குண்டு. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. காரச் சுவையும், மணமும் கொண்டது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல புதினாவும் அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது. புதினாவில் உள்ள சத்துக்கள்: புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு நார்ச்சத்தும் இதனுள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் புதினாவில் உள்ளன. இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்: புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது. புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது புதினா கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தினால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லடைப்பு போன்றவை நீங்கும். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களுக்கு மலக்குடலில் உள்ள பூச்சிகள் சரியாகும். புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை ( 8 :1 )அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பற்பொடியை தினசரி உபயோகித்து வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராது. வாய் துர்நாற்றத்தை புதினா போக்குகிறது. புதினா தேநீர்: புதினாவை நிழலில் காயவைத்து, பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், எரிச்சல் கட்டுப்படும். பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி பிரச்சினைக்கு புதினாக் குடிநீர் சிறந்த மருந்தாகும். புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும் மாமிசங்களை பதப்படுத்தும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது.
கல் வைத்து பழுக்கவைத்த மாம்பழங்களை சாப்& கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிட்டால் என்னென்ன ஹெல்த் பிரச்னைகள் வரும்:- இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ‘‘ஒரு மாமரம் பத்துமாச இடைவெளியில், பூப்பூத்து பிஞ்சுவைத்து காய் காய்க்கிறது. ஆனால் அதை நாம் மரத்திலயே பழுக்க விடுவதில்லை. குத்தகைக்கு எடுப்பவர்கள் காயாகவே பறித்து ஒரு இருட்டறைக்குள் வெல்டிங்குக்கு பயன்படுத்தும் கற்களை வைத்து பழுக்க வைக்கிறேன் பேர்வழி என்று வெறுமனே தோலின் நிறத்தை மட்டுமே மஞ்சளாக மாற்றி விற்பனைக்கு விடுகிறார்கள். தானாக கனியாத பழத்தை கல்வைத்து பழுக்க வைத்தால் அது காய் பதத்தையும் இழந்து, பழமாகவும் இல்லாமல் விஷமாகத்தானே மாறும்? இந்தப் பழங்களை முகர்ந்தால் மாம்பழ வாசனை வராது. வெட்டினால் கெட்ட வாடை வீசும். வாயில் வைத்தால் கொஞ்சமும் மாம்பழச் சுவை இருக்காது. இந்த மூன்று சோதனைகளை வைத்துதான் கல்வைத்து கனியவைத்த மாம்பழங்களை கண்டுபிடிக்க வேண்டும். சென்னை அண்ணா சித்த மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் ‘மாம்பழம் ஒருபக்கம் கறுத்து, மற்றொரு பக்கம் பழுத்து இருந்தால் அது கல்வைத்து கனியவைத்த மாம்பழம். மாம்பழம் ஒரே யூனிஃபார்மாக பழுத்து இருக்க வேண்டும். அப்படிப் பழுக்காத ஒரு பகுதி பச்சையாக இருக்க வேண்டும். தோலுடன் முகரும்போதே நல்ல மாம்பழ வாசனை வரவேண்டும். இதுதான் ஒரிஜினலாகப் பழுத்த மாம்பழம். 100 கிராம் மாம்பழத்தில் நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் தவிர கரோட்டின் ‘ஏ’ சத்தும் நிறைந்திருக்கிறது. நல்ல மாம்பழம் சாப்பிட்டால் சருமம் நன்கு நிறம்மாறி பொலிவடையும். மாம்பழம் சாப்பிட்டால் நீடித்த இளமை, கண் பார்வை கூர்மை, புண் வந்த வடுக்கள் மறைவது, ஈரலில் ரத்தக் கசிவு நிற்பது என பல நன்மைகள் கிடைக்கும். சர்க்கரை வியாதி இருப்பவர்களும், வெயிட் குறைய நினைப்பவர்களும் மட்டும் டாக்டரின் அறிவுரைப்படி சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை நோய்- மருந்தாகும் இலவங்கப்பட்ட& சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை உலகின் மிக முக்கிய நறுமணப்பொருளான இலவங்கப்பட்டை மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து தாவரம் ஆகும். யூதர்களின் நூலான டோராவில் இது பற்றி குறிப்பு உள்ளது. எகிப்து மற்றும் இந்தியாவில் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே லவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் எகிப்தில் கி.மு. 500 – ம் ஆண்டு முதல் மருந்தாக உபயோகிப்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டை மற்றும் இலைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் சின்ன மால்டிஹைடு, யூஜினால், டேனின்கள், கௌமாரின்கள் மற்றும் தாவரப்பசைப் பொருட்கள் காணப்படுகின்றன. லவங்கப்பட்டையில் நார்ச்சத்தும் மெக்னீசியம், இரும்பு, மற்றும் கால்சியம் சத்தும் காணப்படுகிறது. கிருமிகளுக்கு எதிரானது பண்டைய இந்தியா மற்றும் ஐரோப்பாவில் குளிராக இருக்கும் நிலைகளில், வெப்பம் தரும் மருந்தாகப் பயன்பட்டது. ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஞ்சியுடன் சேர்ந்து மருந்துப் பொருளாக கொடுக்கப்பட்டது. இத்தாவரத்தில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உடலுக்கு வெப்ப உணர்வை தரும். ஜீரணத்தினை ஊக்குவிக்கும். வலி குறைக்கும். வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் மற்றும் நோய் விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிரானது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இது இரத்த ஓட்டத்தை தூண்ட வல்லது. குறிப்பாக கை விரல்களுக்கும். கால் கட்டை விரல்களுக்கும், இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். ஜீரணக்கோளாறுகள் மற்றும் மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினை போக்க உதவும். அசைவ சமையலில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி போன்ற வைரஸ் நோய்களுக்கு எதிராகவும் செயல்படும். தசைவலிகளை போக்க வல்லது. உடலின் வலு இன்மையினையும், நோயில் இருந்து குணப்பட்டு வரும் நிலையினையும் தெளிவாக்க உதவுகிறது. சர்க்கரை நோயை குணப்படுத்தும் தினமும் அரை டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி உட்கொண்டால் கெட்ட கொழுப்புகள் கரைவதாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து. லுக்கேமியா மற்றும் லிம்ப்போமா புற்றுநோய் செல்களை இது கட்டுப்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பூஞ்சைக் காளான் பாதிப்பினால் ஏற்படும் நோய்களுக்கு இது அருமருந்தாக விளங்குகிறது. மூட்டுவலிக்கு மருந்து தினமும் காலை உணவுக்கு முன்னதாக அரை டீஸ்பூன் லவங்கப்பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து உட்கொண்டால் ஒரு வாரத்தில் மூட்டுவலி பிரச்சினை தீரும். ஒரு மாதத்தில் வலி முற்றிலும் தீர்ந்து சகஜமாக நடமாடலாம். இது கருப்பையினை தூண்டி மாதவிடாய் குருதிப் போக்கினை ஊக்குவிக்கும். இந்தியாவில் குழந்தை பிறந்த பிறகு, கருத்தடையாக உட்கொள்ளப்படுகிறது. பட்டையின் வடிநீர், சாறு மற்றும் பொடி சாராயக்கரைசல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தோல்நோய்களை குணமாக்கும் குன்றுமணி ‘குப்பையில் எறிந்தாலும் குன்றுமணி கறுக்காது ’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் விதைகளில் அபிரின், இன்டோன் ஆல்கலாய்டுகள், டிரைடெர்பினாய்டு சபோனின்கள், ஆந்தசையானின்கள் உள்ளன. வேர்கள் மற்றும் இலைகளிலும் கிளைசரிரைசா, சிறிது அபிரினும் காணப்படுகின்றன. விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெயில் கரிம அமிலங்களான பால்மிடிக், ஸ்டிராக் ஒலியிக்,லினோயிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. தோல்நோய்கள் இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுடனான வீக்கங்கள் மீது பூசப்படுகிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும். நரம்பு கோளறுகளை குணமாக்கும் வேர் வலுவேற்றி, சிறுநீர்போக்கு, வாந்தி தூண்டுவது, வாய்குழறச்செய்வது, பால் உணர்வு தூண்டுவது, நரம்புக் கோளறுகளுக்கு மருந்தாகிறது. கருச்சிதைவு தோற்றுவிப்பது, விதைகளின் பசை மேல்பூச்சாக தோள்பட்டை வலி, தொடை நரம்பு வலி, மற்றும் பக்கவாதத்தில் பயன்படுகிறது. முடி வளர குன்றிமணி “ கையாந்தகரை சாறு நாலுபலம் எடுத்து ரெண்டு பலம் குன்றிமணிப் பருப்பு கலந்தரைத்து ஒரு பலம் எள் எண்ணெய் சேர்ந்து காய்ச்சி சீலை வடிகட்டி தினம் பூசப்பா கிழவனுக்கு குமரன் போல் சடை காணும் “ என்பது சித்தர் பாடல். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். முடி நன்றாக செழித்து வளரும் நச்சுத்தன்மை நவீன ஆய்வுகளில் விதைகளின் உறைச்சத்து விந்துக்களின் உற்பத்தியை குறைப்பதுடன் அவற்றின் கருவளத்தினையும் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அபிரின் மிகக் கடுமையான நச்சாகும். அந்தமான் தீவுகளில் உள்ள பழங்குடியினர் விதைகளை வேகவைத்து உணவாக உட்கொள்வதாகத் தெரிகிறது. வேகவைக்கும் போது நச்சு முறிக்கப்படுகிறது.
விஷ முறிவாகப் பயன்படும் - வசம்பு விஷ முறிவாகப் பயன்படும் நாட்டு மருந்து வசம்பு இந்தியாவிலும் எகிப்திலும் 2500 ஆண்டுகளுக்கு மேலாக வசம்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்பட்டது. செயல்தூண்டுவியாகவும், ஜீரணத்தை சரி செய்து பசியினை தூண்டவும் பயன்படுத்தப்பட்டது. சீனாவில் காணப்படும் Acorus gramineus எனும் தாவரம் வசம்பு போன்றே பயன்படுத்தப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: எளிதில் ஆவியாகும் எண்ணெய் அசரோன், சபோனின்கள், அகோரின் மற்றும் பிசின் பொருள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அசரோன் மற்றும் குளுக்கோசைடான் அகோரின் தாவரத்தின் முக்கிய செயல் ஊக்கப் பொருள்களாகும். வயிற்று வலிக்கு மருந்து வசம்பின் தரையடித்தண்டு மருந்தாகப் பயன்படுகிறது. உலர்த்தப்பட்ட தரையடித்தண்டு மணம் கொண்டது. செயல்தூண்டுவி. வடிநீராக உட்கொண்டால் உடலை வலுவாக்க உதவுகிறது. வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கினை சரி செய்யும். வயிற்று உப்புசம், பசியின்மை, ஆகியவற்றினை குணப்படுத்தும். அதிமதுரத்துடன் சேர்த்து குழந்தைகளின் இருமல், காய்ச்சல், வயிற்றுவலி முதலியவற்றிர்கு மருந்தாக கொடுக்கலாம். கிராமத்தில் கைவைத்தியம் கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு கைவைத்தியமாக வசம்பினை சுட்டு தொப்புளில் தடவி, வயிற்று வலியினைப் போக்குவதை பலகாலமாக கடைபிடித்து வருகின்றனர். அடிவயிற்றில் வாயு இருந்து வலி ஏற்படும் போது வசம்பின் சாம்பல் ஆமணக்கு அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து அடிவயிற்றில் பூசினால் நீங்கும். குறைந்த அளவில் ஜீரணத்தினை தூண்டி நரம்புகளுக்கு வலிமை தருகிறது. வயிற்றின் அமிலத்தன்மையினை நீக்கும். அதிக அளவில் அமிலம் சுரக்க உதவுகிறது. நச்சு முறிவு மருந்து வசம்பு தாவர மருந்துகளின் தனிப்பெரும் தன்மையாக கருதப்படுகிறது. நேர் எதிரான நோய்களுக்கு ஒரே தாவரம் மருந்தாக அமைகிறது. பல நச்சுக்களுக்கு முறிவு மருந்தாக அமைவதால் தொற்றுநோய் பரவலின் போது தரையடித்தண்டு உட்கொள்ளப்படுகிறது. முந்திரிக்கொட்டை ஓட்டின் எண்ணெயுடன் கலந்து முடக்கு வாதத்திற்கு மேல் பூச்சாகிறது. தொண்டை கரகரப்பு, மற்றும் இருமலுக்கு தரையடித்தண்டு வாயில் போட்டு மெல்லப்படுகிறது. உமில்நீர் சுரப்பினை அதிகரித்து சுகம் தரும். அதிக அளவில் உட்கொண்டால் வாந்தி ஏற்படும். வசம்பு நல்லதொரு பூச்சிக்கொல்லி மருந்து. கம்பளித்துணிகளில் பூச்சி வராமல் தடுக்கும்.
நினைவாற்றல் தரும் வல்லாரை! வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே “வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி ஏற்பட்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அமினோ அமிலங்கள், சென்டிலிக் சென்டோயிக், அமிலங்கள், கரோடின், ஹைட்ரோ காட்டிலின், வெல்லிரைன், பிரமினோசைடு, விட்டமின் பி1, பி2 மற்றும் விட்டமின் சி, டேனிக் அமிலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது. வல்லாரையின் மருத்துவ பயன்கள் அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் உடையவை. உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது. மூட்டுவலியைப் போக்குகிறது. சிறுநீர் போக்கினை தூண்டுகிறது. தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு நல்ல மருந்தாகிறது. ரத்தக்குழாய்களை நெகிழ்வடையச்செய்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கும் வல்லாரை இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இத்தாவரத்தினை சக்தி அளிக்கும் டானிக் மற்றும் நினைவாற்றலையும் கவனத்தையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கவும் பயன்படுத்துகின்றனர். காலை வேளையில் வல்லாரையை பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். காலைவேளையில் ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகவும், கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும் இதிலுள்ள ஏஸியாடிக்கோசைடு என்னும் பொருள் புண்கள் ஆறுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது கொல்லஜென் என்னும் புரதம் தோன்றவும், புதிய ரத்தக் குழாய் உருவாதலையும் துரிதப்படுத்துகிறது. புண்கள் ஆறுதலின் பொழுது திசுக்களைச் சரி செய்ய ஆக்ஸிகரண எதிர்ப் பொருள்களின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. இது இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கக் கூடுமெனவும் கருதப்படுகிறது மனநோய்கள் மறைய... அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும். உடல் சோர்வு நீங்கும் பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்று போக்கினை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அடிவயிற்றுக் கோளாறுகள், காய்ச்சல், ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழல் நோய்கள் ஆகியவற்றினைக் குணப்படுத்த உதவுகிறது. இதிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட எண்ணெய் பொருள் முடி வளர்தலை ஊக்குவிக்கிறது. இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும். உடல்புண்களை ஆற்றும் வல்லமைக் கொண்டது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமை கொண்டது. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். சளி குறைய உதவுகிறது. உண்ணும் போது தவிர்க்க வேண்டியவை இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக் கூடாது. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது. இக் கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
இதய நோய்- தடுக்கும் உணவுத் தயாரிப்பு இதய நோய்களைத் தடுக்கும் உணவுத் தயாரிப்பு தேவையான பொருள்கள் ரவா 1 கோப்பை மிளகுத்தூள் 1 தேக்கரண்டி சீரகம் லு தேக்கரண்டி இஞ்சி அங்குலத் துண்டு (சீவியது) பயத்தம்பருப்பு லு கோப்பை உப்பு ருசிக்குத் தகுந்தபடி செய்முறை ரவையை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அதில் 2 கோப்பை தண்ணீர் விட்டு வேக விடவும். தீயில் இருந்து இறக்கி ஒருபுறமாக வைக்கவும். மிளகு, இஞ்சி, சீரகத்தையும் வறுத்தெடுக்கவும். வேக வைத்த ரவை, பயத்தம் பருப்பு (வெந்தது) மற்றும் உப்பு ஆகியவற்றை அத்துடன் போட்டு மேலும் 10 நிமிடம் வேகவிடவும். அது வேகும்போது கிளறிக் கொண்டே இருக்கவும். தீயில் இருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும். சத்து மதிப்பீடு (பெரிய கிண்ணம் ஒன்றுக்கு) சக்தி (energy) 104 கலோரி மாவுப் பொருள் (Carbohydrate) 22.4 கிராம் புரதம் (Protein) 3.12 கிராம் கொழுப்பு (Fat) 0.24 கிராம்