How to do meditation or penance as told by gnanis of all religions..

Discussion in 'Religious places & Spiritual people' started by Littlerose, Feb 6, 2012.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    திருவடி பற்றி திருவள்ளுவர்

    திருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர்
    வள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார் அதனாலே நமது முன்னோர்கள் இதை உலக பொதுமறை என கூறினர். மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடைய வில்லை எனில் நம்மை பிறவி தொடரும் எனவும் தீர்க்கமாக சொல்கிறார் திருவள்ளுவர்.
    [​IMG]
    திருவள்ளுவர்


    மேலோட்டமாக பார்த்தால் திருவள்ளுவர் கடவுளை அடைவதை (அ) எப்படி அடைவது என்பதை பற்றி தீர்க்கமாக சொல்லாதது போல தோன்றினாலும். எதை பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் கடவுள் வாழ்த்து பகுதியில்.


    10 வது குறளில்
    “பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்”



    இந்த குறளில் வள்ளுவ பெருந்தகை அவர்கள் பிறவி பற்றியும் இறைவன் அடி பற்றியும் மேலும் இந்த இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.
    10 வது குறளில் மட்டுமல்ல 2வது குறளிலும்


    “கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்
    நற்றாள் தொழார் யெனின்”



    நாம் என்னதான் கற்றாலும் “நற்றாள்” அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார்.இதே போல மீதி உள்ள இந்த குறள்களை பார்த்தாலும் இதில் ஏன் வள்ளுவர் இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மீகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.


    திருக்குறள் – 3, 4, 7, 8, 9 ஐ பார்ப்போம்

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்”


    “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல”


    “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது”


    “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது”


    “கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை”


    இந்த குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார்க், தாளை இந்த வார்த்தைகளை நன்கு கவனிக்கவும். ஆம், இறைவன் திருவடியை (அ) மெய்பொருளை ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார். நாம் சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்க்காக.


    இந்த அடியை பிடித்தால் போதும் இறைவனை நிச்சயமாக காட்டும் அதாவது பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி விடலாம் என்கிறார்.


    இப்படி கடவுள் வாழ்த்தில் உள்ள 10 க்கு 7 குறளில் பட்டவர்த்தனமாக அடி என்று தெளிவாக சொல்கிறார் திருவள்ளுவர். ஆம், நற்றாள், அடி, தாள், மாணடி, இலானடி, தாளை, தாள்(2) என்று குறிப்பிடுகிறார். இப்படி 7 விதமாக சொன்னாலும் இந்த 7 வார்த்தைகளும் நிச்சயமாக் ஒரே பொருளைத்தான் குறிக்கும். சரியா?


    ஆம், வார்த்தைகள் 7 ஆனால் அர்த்தம் 1


    ஆம், இறைவனை அடையும் வழிகளை 7 விதமான வார்த்தைகளால் சொல்லியிருந்தாலும் வழி 1 தான்.
    அதுதான் இறைவன் திருவடி (அ) மெய்பொருள் (அ) சும்மா இரு என்கிற ஞான வழி!


    இந்த தலைப்பில் இறைவன் திருவடி என்று எதை சொல்கிறார் என்று நாங்கள் இதுவரை சொல்லவில்லை ஆனால் இறைவன் திருவடி க்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் வள்ளுவர் என்று பதிந்திருக்கிறோம். இனி வரும் விளக்கங்களில் வள்ளுவர் திருவடி என்று கண்களைத்தான் சொல்கிறார் என்று சொல்லியிருக்குகிறோம். படித்து புரிந்து கொள்க!


    திருக்குறளில் (Thirukural) கடவுள் வாழ்த்து பகுதியில் 10வது குறளில் என்ன சொல்கிறார்.


    “பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்” – 10


    பிறவி என்னும் பெருங்கடலை தாண்ட வேண்டுமானால் இறைவன் அடியை சேர வேண்டும் என்கிறார்.
    இப்பொழுது இந்த குறளை பார்ப்போம்


    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
    நிலையாமை காணப் படும். – 349



    பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) பிறப்பறுக்க முடியும் என்று சொல்ல படுகிறது. இது எந்த அளவிற்க்கு மிக சரியான கருத்தோ அதே அளவு இந்த குறளில் இருக்கும் இன்னொரு விஷயமும் மிகவும் முக்கியமானது. எதன் மூலமாக பிறப்பறுக்க முடியும் என்று சொல்கிறார்.ஆம், முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்று சொல்வதன் மூலம் எது இறைவன் அடி என்றும் சொல்கிறார். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் – ஆம், கண் வழி மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும் (அ) பிறப்பறுக்க முடியும். இதைத்தான் இறைவன் திருவடி என்றும் சொல்கிறார்.


    ஏன் இங்கு பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் என்று சிந்தித்தால் அதுதான் ஞான பாதை. கண்ணின் மகத்துவத்தை மேலும் அது எப்படி நம் உடம்பில் இருக்கிறது என்பதைத்தான் திருவள்ளுவர் வெளிபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதுதான் பிறப்பறுக்கும் என்று சொல்கிறார். ஏன் கண்ணை பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் மேலும் திருவள்ளுவரும் (Thiruvalluvar), திருமூலரும் (Thirumoolar), அவ்வையாரும் (Avvaiyar) மற்றும் திருவருட் பிரகாச வள்ளலாரும் (Ramalinga Swamigal) பற்றற்ற என்ற இடத்தில் மிக சரியாக ஒத்து போகிறார்கள் என்பதை வேறு பதிவுகளில் மிக விரைவில் பதிவோம் (Click Here to see – Soon We will give the link here). ஏன் எனில் அந்த பற்றற்ற இடத்திலே இறைவன் துலங்குகிறான்!


    அதுவே திருவடி அல்லது மெய்பொருள்


    கீழே இருக்கும் இந்த குறளுக்கான விளக்கம் தெரிந்தால் போதும் அது நிச்சயமாக ஞான பாதைக்குள் நம்மை தள்ளும்


    “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்” – 214



    இந்த குறளும் மறைமுகமாக திருவடி பற்றிதான் சொல்கிறது. மேலும் இப்படி அறிந்து உணர்ந்து இருப்பவர்களே உயிர் வாழ்வார்கள் என்று தெளிவாக சொல்கிறார்.



    அதுமட்டுமில்லாமல் இறைவனை உணர உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் 700 கோடி வழிகள் பற்றி எல்லாம் இந்த குறளில் சொல்லவில்லை. இந்த குறளில் உள்ள வழி உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் பொதுவான ஒரே வழியான ஞான வழியை ப்ற்றி மட்டும்தான் சொல்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம். இந்த “ஒத்தது அறிவான்” என்ற குறளுக்கான விளக்கம் “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்” என்ற குறளுடன் மிக தொடர்புடையது இதுவே ஞான இரகசியம்.



    விளக்கம்:
    “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்” – 214



    ஒத்தது அறிந்தவன் உயிர் வாழ்வான் அறியாதவன் செத்து போவான்.
    ஒத்தது எது? நம் உடம்பில் ஒரு கண்ணைப்போல உள்ள மற்றொரு கண்!?
    ஒத்தது எது? உலக மக்கள் அனைவருக்கும் ஒன்று போல் உள்ள கண்கள்!
    ஏன் ஒன்று போல் உள்ளது? இறைவன் எல்லார் கண்மணி-ஊசிமுனை துவாரத்தின் உள்ளிலும் ஊசிமுனை அளவாக ஒரே அளவாக இருக்கிறான்! இறைவனுக்கு பாகுபாடே இல்லை! எல்லாரும் அவர் பிள்ளைகளே! எல்லாருக்கும் சமமான – ஒரே தன்மையில் தான் இறைவன் – பரமாத்மா – சீவனாக – ஒளியாக கண்களில் மிளிர்கிறான்!


    நமது இரு கண்களும் ஒப்பற்றவை! நம் உடம்பில் ஒரேமாதிரி உள்ள இரண்டு பொருள் கண்கள் மட்டும்தான். நமது உடம்பில் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒன்று போல் இருப்பது கண்கள்தான்! கண்-மணி தான்! நம் வாழ்வே கண்ணில்தான் இருக்கிறது! நமது கண்களில் – மணியில் – மத்தியில் – ஊசிமுனை துவார்த்தின் உள்தான் ஊசிமுனை அளவு ஒளி உள்ளது!


    உலகமக்கள் அனைவருக்கும் ஒரே அளவாக இருப்பதும் கண் மணியே!


    கண்தானம் யார் வேண்டுமானலும் எந்த பாகுபாடுமின்றி யாருக்கும் கொடுக்கலாமல்லவா?


    ஏன்?


    எல்லார் கண்ணும் ஒன்றாக இருப்பதால்தான்!? யாருக்கும் எந்த வித்தியாசமும் கண்ணில் இல்லை! ஆம், 700 கோடி மக்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இந்த கண்கள்தான்.


    இதுவே மாபெரும் இரகசியம்!


    திருக்குறளில் மேலும் சில குறள்களை கொடுக்க முடியும் எனினும் எல்லா ஞானிகளின் பாடல்களையும் சொல்ல வேண்டும் என்ற காரணத்தினால் அடுத்தடுத்த ஞானிகளின் திருவடி (அ) மெய்பொருள் பாடல்களை கொடுக்க போகிறோம்.
    8—————————————————-2​
    இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
    [​IMG]
     
  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    திருவடி பற்றி திருமூலர்

    திருவடி பற்றி திருமூலர்

    திருவடி பற்றி திருமூலர் எவ்வளவு அழுத்தம் திருத்தமாக திருமந்திரத்தில் சொல்கிறார் என்றும் மேலும் எவ்வளவு அழகாக ஞானத்தையும் அதற்க்கான பாதையையும் சொல்கிறார் என்பதே இந்த பதிவு.
    மேலும் எங்கள் சபை அன்பர்கள் பலதடைவைகள் நேரிலோ அல்லது வலைத்தளங்களிலோ சிலருடன் ஆனிமீகம் பற்றி பேசும் போது அவர்கள் நீங்கள் வள்ளலார் சொன்ன சன்மார்கத்தை பின்பற்றுகிறீர்கள் நாங்கள் எங்கள் இடத்தில் சொல்லி தருகின்ற சன்மார்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்வதை எங்கள் அன்பர்கள் பலமுறை கேட்டு இருக்கிறார்கள். இது மிகவும் தவறான கருத்து. ஆம், வள்ளல் பெருமான் எந்த சன்மார்கத்தை பின்பற்றி உச்ச நிலை அடைந்து அதை நமக்கும் சொன்னாரோ அதே சன்மார்கத்தைதான் திருமூலரும் மற்றும் எல்லா சித்தர்களும் சொன்னார்கள் என்பதையும் இந்த “திருவடி பற்றி திருமூலர்” என்ற பதிவில் சொல்கிறோம்.


    திருமந்திரத்தில் முதல் பாடலாக இங்கே வைக்க விரும்புவது 138 வது பாடல்தான்


    பாடல் – 138


    திருவடி யேசிவ மாவது தேரில்
    திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
    திருவடி யேசெல் கதியது செப்பில்
    திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.



    இறைவன் திருவடியே நமது கண்கள்!


    இங்கு திருமூலர் திருவடி என்று எதை சொல்கிறார் என்பதை முதலில் விட்டு விடுவோம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்ன என்பதை ஆணித்தரமாக திருமூலர் அய்யா சொல்கிறார். ஆம் நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார்


    விளக்கம்

    “திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.
    திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.
    திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.
    திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!”
    மேலே இருக்கும் விளக்கத்தில் இப்பொழுது “இறைவன் திருவடி கண்கள்” என்பதை பொறுத்தி படித்து கொள்ளுங்கள்.


    எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி!



    இதுதான் மெய்பொருள்!


    இதைத்தான் இந்த பதிவில் சொல்ல முயற்ச்சிக்கிறோம்.


    முன்னதாக திருவள்ளுவர் திருவடி பற்றி சொன்னதை பதிந்திருக்கிறோம். இனி திருமூலர் மட்டுமல்ல வள்ளலார், திருஞான சம்பந்தர், போகர் என்று எல்லா சித்தர்களின் திருவடி பணிந்து திருவடி பற்றிய பதிவுகளை ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம். திருவள்ளுவர் மட்டுமா திருவடியை வெவ்வெறு விதமாக சொல்லியிருக்கிறார். திருமூலரும்தான்!


    இந்த திருவடியான இணையடிக்கு இணையானது எதுவும் இல்லை இந்த உலகத்தில். இந்த இணையடியிலே எல்லாமே அடங்கிவிடும் என்ற அற்புதமான பாடல்.


    திருமந்திரத்தில் உள்ள முக்கியமான பாடல் இது. மந்திரம், மருந்து, தானம் மற்றும் தூய்மையான நெறி எது என்று உள்ளடக்கிய பாடல். ஆம், இறைவனை அடையும் பாதையில் மந்திரம், தந்திரம், தானம் மற்றும் தூய்நெறி எல்லாமே இந்த இணையடி யாகிய திருவடி தான் என்று சொல்லும் பாடல்.


    “மந்திர மாவதும் மாமருந் ஆவதும்
    தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
    சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும்
    எந்தை பிரான்தன் இணையடி தானே”



    திருவடியே கதி, திருவடியே சிவலோகம் மற்றும் திருவடியே சரணாகதி என்று சென்ற பாடலில் உள்ள பாடலை பார்த்தோம். மேலும் தந்திரம், தானம், சுந்தரம் மற்றும் தூய்நெறி எல்லாம் இதுதான் என்று சொல்கிறார். நாம் வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை இந்த திருவடியை பிடித்தால் மட்டும் போதும் அதை உணர்த்துவதற்க்கு தான் திரும்ப திரும்ப பதிவு.


    மேலும் சித்தர்கள் பாடல் என்றாலே புரிந்து கொள்ள மிக கடினமாக இருக்கும் என்ற மேலோட்டமான கருத்தை மறுக்கும் பாடல். இறைவனை அடையும் பாதையை எந்த வித கடினமும் இல்லாமல் சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள கூடிய அளவில் இருக்கும் பாடல்.


    இந்த பாடலில் திருவடி தான் மருந்து என்று கூட சொல்லவில்லை மாமருந்து என்று சொல்கிறார். இந்த மருந்தே நம்முடைய பிறவி பிணியை தீர்க்கும் மருந்து. நீங்கள திருவருட்பாவை படித்திருந்தால் இந்த இடத்தில் நிச்சயமாக வள்ளலாரும், திருமூலரும் மிகவும் ஒத்து போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். (பாடலில்)


    திருவருட்பா மூன்றாம் திருமுறை – நல்ல மருந்து என்ற தலைப்பில் உள்ள ஒரிரு வரிகள்.


    “சஞ்சலம் தீர்க்கும் மருந்து – எங்கும்
    தானேதா னாகித் தழைக்கும் மருந்து
    அஞ்சலென் றாளும் மருந்து – சச்சி
    தானந்த மாக அமர்ந்த மருந்து!”



    விளக்கம்:

    அடியார்களின் மன சஞ்சலங்களை தீர்க்கும் மருந்து!
    உலகெங்கும் பரந்து நிறைந்து விளங்கும் ஜோதி மருந்து!
    அஞ்சாதே என அடியார்களுக்கு அபயம் நல்கும் மருந்து!

    சத்து – சித்து ஆனந்தமாக விளங்கும் மருந்து! சத்தான ஒளியை தியானிக்க சித்துக்கள் கூடிவரும் பின் பேரானந்த நிலை கூடும்!


    திருமந்திர பாடலில் திருமூலர் திருவடி தான் மாமருந்து என்று சொல்கிறார். திருவருட்பாவில் எங்கள் திருவருட் பிரகாச வள்ளலார் அந்த திருவடியான மருந்து என்ன என்ன செய்யும் எப்படி எல்லாம் இருக்கும் என்று சொல்கிறார்!


    திருமூலர் மந்திரம், மருந்து, தானம், சுந்தரம் மற்றும் தூய்மையான நெறி இது அனைத்துமே திருவடி தான் என்று சொல்கிறார். வள்ளலார் இந்த திருவடியான மருந்தே உலகத்தில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கும் சச்சிதானந்த மருந்து என்று சொல்கிறார்.


    இன்னும் என்ன சொல்ல வேண்டும் இந்த திருவடி பற்றி?


    ஆனாலும் அடுத்த பாடலும் திருவடிதான்!


    திருவடி பற்றி அதாவது மெய்பொருள் பற்றி இங்கு நாங்கள் பதிந்து கொண்டிருப்பது இறைவனை காட்ட கூடிய பாதையில் எவ்வளவு முக்கியமானது மேலும் இதை தெரிந்து கொள்வதற்க்கே மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். மேலும் இது எவ்வளவு முக்கியம் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் வெட்ட வெளிச்சமாக சொல்கிறார்.


    “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று சொல்லியவர் அவ்வையார் தான். அதே வாக்கியத்தை மாறாமல் திருமூலரமும் சொல்கிறார் என்பதை இந்த பாடலில் இருந்து நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதனினும் திருமூலர் ஒரு படி மேலே சென்று அரிதான இந்த மானிட பிறவியை பெற்றும் கூட இந்த திருவடியை (அ) மெய்பொருளை தெரிந்து கொள்ளாதவர்களை சாடுகிறார்.


    அந்த பாடல் – திருமந்திரம் 2090


    “பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
    பெறுதற் கரிய பிரானடி பேணார்
    பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
    பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”



    விளக்கம் – “மந்திர மணி மாலை” என்னும் புத்தகத்தில் இருந்து


    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! பெறுதற்கரிய மானிட பிறவியை பெற்றும், பல்லாயிரம் ஆண்டு தவம் செய்யினும் கிட்டாத இறைவனடியை, தேடியும் காணொணாத கடவுளை இவ்வளவு எளிதாக அடைய வழிகாட்டியும் உணராதவர்களை ஈனப்பிறவிகள் மிருகங்கள் பிராணிகள் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார் திருமூலர். மனித உடல் கொண்ட மிருகங்கள் செய்த பாவம், உண்மை உணராது போய் விடுகின்றனர்.



    இறைவனடி சேரும், பேரின்பம் பெறும் வாய்ப்பை இழந்தவராவர்? நல்ல மனிதன் – உத்தமன் – ஞானி – சித்தன் என்று நல்ல பெயர் எடுக்காமல் மனித மிருகமாகவே மரிக்கின்றனர்! ஏ, மனிதா நீ ஏன் பிறந்தாய்? வாழவா? சாகவா? வாழ்வின் பொருள் அறிய வேண்டாமா? வினை தீர்க்க பாடுபட்டாயானால் வேண்டிய வரம் தந்து ஆட்கொள்வான் இறைவன்!


    அடுத்தடுத்த பதிவுகளில் திருமூலரும் சத்திய ஞான சபையின் ஜோதி தரிசனத்தை சொல்கிறார் என்பதும் மேலும் இந்த ஞான தவத்தை திருமூலர் எந்த அளவு வெட்ட வெளிச்சமாக சொல்கிறார் என்பதையும் சேர்த்து.


    இந்த இணைய தளம் முழுக்க இருக்கும் விடயம் இதுதான். திருவடி (அ) தாள் பற்றி திருமூலர் திருமந்திரத்தில் எவ்வளவு முக்கியமாக சொல்கிறார் எனும் பாடல். இந்த ஒரே தவம் போதும் எல்லாருக்கும் இறைவனை காட்டும் என்று சொல்லும் பாடல். இந்த ஞானதவத்திற்க்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதையும் சொல்லும் அற்புதமான பாடல்.


    மேலும் இந்த பாடலுக்கான எங்கள் குரு நாதரின் விளக்கம்


    திருமந்திர பாடல் – 2113


    மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.



    விளக்கம்:


    மனிதன் மேற்கொள்ள தகுந்த உயர்ந்த முடிந்த முடிபான சிறந்த மெய்த்தவம் ஒன்றுண்டு! மெய்தாள் ஒன்றுண்டு! மெய்ந்நெறி ஒன்றுண்டு!


    இறைவனையே அவன் திருவடியையே சேர வேண்டும் என்ற வண்ணம் தொழுது அழுது தவம் செய்வார்க்கே ஞானம் – மோட்சம் கிட்டும்!


    மெய்த்தவம் - உண்மையான தவம் எது என்றால் மனித உடலே மெய்! இந்த மெய்யிலே இருக்கும், இறைவன் இருக்கும் பொருள் – மெய்பொருள் கண்மணியே! அதனுள் ஒளியே! இதை சற்குரு மூலம் அறிந்து உணர்ந்து செய்வதே மெய்த்தவம்!


    மெய்த்தாள் - மெய்யிலே – உடலிலே உள்ள தாள் திருவடி ஒன்றுண்டு! அதுவே நம் உயிர் நிலை! அதுவே இரண்டாக பிரிந்து இரு கண்ணாக உள்ளது!


    மெய்நெறி - மெய்த்தாள் அறிந்து மெய்த்தவம் செய்ய மனிதன் மெய்நெறி வழி நடக்க வேண்டியது அவசியம்! உடம்பே ஆலயம் அதனுள் பரம்பொருள் ஜீவனாக கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து உடம்பாகிய ஆலயத்தில் உயிர் குடி கொண்ட கோயிலை – கருவறையை – மூலஸ்தானத்தை அடைய மூலவர் அருள்பெற நல்லொழுக்க நற்பண்பினராக வாழ்வது மிக மிக அவசியம்! அதுவே மெய்நெறி இதையெல்லாம் மொத்தம் 25 நூற்களில் எழுதி விட்டேன்! ஆயிரம் அன்பர்களுக்கு மேல் உபதேசம் தீட்சை வழங்கியும் வழி நடத்தியாயிற்று? வாருங்கள் காண விரும்பினால்? வேண்டுங்கள் பெற விரும்பினால்! கன்னி’ய’குமரிக்கு வரம் பெற வாலையருள் பெற வருக! வருக!


    8——————————————————-2​
    இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    திருவடி பற்றி வள்ளலார்

    திருவடி பற்றி திருவருட்பாவில் வள்ளலார் / ராமலிங்க அடிகளார்

    நான் வெளியிடுகிற அனைத்து ஞான இரகசியங்களும் வள்ளல் பெருமான் அருளால்தான் என்னால வெளியிட முடிகிறது என்ற எங்கள் குரு நாதர் சிவா செல்வராஜ் அய்யாவின் வார்த்தையை நினைவு படுத்தி எங்கள் ஞானகுரு வள்ளல் பெருமான் திருவடி பற்றி திருவருட்பாவில் பாடியிருப்பதை கொடுக்கிறோம்.


    [​IMG]


    வள்ளல் பெருமானை பற்றி எங்களுக்கு நன்கு தெரியும் என்று சொல்லும் பலருக்கு வள்ளலார் திருவருட்பா முழுக்க என்ன பாடி அருளியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை அப்படி தெரியாமல் இருப்பவர்களுக்கு இங்கு எங்கள் குரு நாதரின் திருவருட்பா விளக்க உரையிலிருந்து எடுத்து கொடுக்க போகும் பாடல்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.


    திருவடி தவம் என்றால் என்ன என்று தெரியாதவர்களை நாங்கள் நேரிலும் இணையத்திலும் பலரை சந்திக்கிறோம். ஐயோ, இவர்களுக்கு எல்லாம் இதுகூட தெரியவில்லையே என்று எள்ளி நகையாடுவதற்க்காக அல்ல இந்த பதிவு. எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு.



    ஆம், எங்களுக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று எந்த வித பாகுபாடு இல்லை மேலும் இவர்கள் பக்குவமானவர்கள், பக்குவமில்லாதவர்கள் என்று எந்த வித பாகுபாடும் இல்லாமல் சொல்கிறோம் வள்ளல் பெருமானையோ அல்லது சித்தர்களை நம்பி எங்கள் தளத்திற்கு வருபவர்கள் எல்லாரையும் படித்து புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.


    திருவருட்பா மூன்றாம் திருமுறை யில், திருவடி புகழ்ச்சி என்ற பகுதியில் இருக்கும் பாடல்.


    இறைவனின் திருவடியின் பெருமையை – மகிமையை தன்மையை சொல்வதாகும் இத்திருவடி புகழ்ச்சி! முதலில் இறைவனின் திருவடியை பணிய வேண்டும்! சரணடைய வேண்டும்! பின்னரே திருமுடி தரிசனம்!



    இறைவன் திருவடி எது? என தெரிய வேண்டுமா? இறைவனடி பணிந்தால் இறைவன் திருமுடி நம்மை நோக்கி வந்து விடும்! பணிந்தவர்க்கே பரமனருள்! பணிவு – கனிவு – அன்பு – பண்புதான் இறையருள் கூட்டுவிக்கும்! அத்தகைய திருவடி எப்படி பட்டது என பல நூறு வார்த்தைகளால் வர்ணிக்கிறார் வள்ளல் பெருமான்!


    தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம்
    தரும்இணை மலர்ப் பூம்பதம்
    சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய
    சாட்சியாகிய பூம்பதம்
    தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில்
    சமரசமுறும் பூம்பதம்
    தருபரம் சூக்குமம் தூலம் இவைநிலவிய
    தமக்குள் உயிராம் பூம்பதம்



    தவாத சாந்தப்பதம் – சாந்தமே – அமைதியே உருவான இரு கண்மணியின் உள்ளே திருவடி! துவாத சாந்தப்பதம் – நம் சிர நடுவில் உச்சியில் விளங்கும் ஒளிநிலை! அனுபவத்தில் அறியும் ஸ்தானம்! தரும்இணை மலர்ப் பூம்பதம் – இருகண்மணி உள் நடு , சிர நடு உச்சி ஆக இருபதத்திற்க்கும்நம்மை அழைத்து செல்லும் இணையான இரண்டு தாமரை மலர் போன்ற பதமான இரு கண்மணிகள்.
    சகலர் - மும்மலம் உள்ள சராசரி மனிதர்! பிரளயாகலர் - இரு மலம்உள்ளவர்! விஞ்ஞானகலர் - ஒரு மலம் உள்ளவர்


    சாதனை செய்து வர வர மும்மலங்கள் ஒவ்வொன்றாக போய்விடும். மலமற்ற நிலையே இறைநிலை! இதய சாட்சியாக பூம்பதம் – இதய சாட்சியாக நம் மனசாட்சியாக இறைவனே உள்ளிருந்து நம்மை பார்த்து கொண்டிருக்கிறார். அப்படி சாட்சியாக இறைவன் இருப்பது – பூப்போன்ற திருவடி – கண்மலர்.


    தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில் – குறைவில்லாத நிலையில் அணு நிலையம், தானே உருவையும் துலங்குகின்றது. பூம்பதங்களில்! சமரசமுறும் பூம்பதம் – எல்லா அணுவிற்க்கும் அனுவாகவவும், எல்லாவற்றிலும் தானேயாயும் சமமாக இலங்கும் பூம்பதம். மலர்ப்பாதம் – திருவடி – கண்மணி!


    தருபரம் சூக்குமம் தூலம் – தற்பரம் + சூக்குமம் + தூலம் மூவகை நிலை நம் உடல்! இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்பதம். இம்மூன்று நிலையிலும் உயிராகிய பதம் நம் திருவடி! பரமான – மேலான தெய்வம் பராபரமாக நம் நடுவில் கண்மணி நடுவில் சிர நடுவில் உள்ளில் ஒளியாக துலங்குகிறது!
    இந்த ஒரு தவம் போதும் எல்லாருக்கும் வழி காட்டும் என சொல்லும் வள்ளல் பெருமானின் அற்புதமான பாடல்!


    எத்தனையோ முறை எப்படி எப்படியோ நேரிலும், இணையத்திலும் பலமுறை சொல்லிவிட்டோம் இந்த ஒரு தவம் (திருவடி – பதம்) போதும் எல்லாருக்கும் அருளும் எனவும் மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தவம் எல்லாம் தேவை என்ற அவசியமே கிடையாது. இந்த ஒரே தவம் போதும் என்றும்.
    மற்றபடி பல இடங்களில் சொல்லி தருவதை போல இது முதல் பயிற்ச்சி இதை முடித்தால்தான் அடுத்த பயிற்ச்சி அதற்கு அடுத்தது இதை விட உயர் நிலை பயிற்ச்சி என்று எல்லாம் இந்த ஞான தவத்தில் (திருவடி தவத்தில்) கிடையாது! இதை வள்ளல் பெருமான் பாடலிலேயே புரிந்து கொள்ள முடியும்! யார் யார் எல்லாம் இந்த தவத்தை செய்தார்கள் என்றும் மேலும் செய்யும் இந்த ஒரே திருவடி தவத்திற்கு ஏற்ப நல்ல நிலையை அடைய முடியும் என்றும் சொல்லும் பாடல்.


    வான இந்திரர் ஆதி எண்திசை காவலர்கள்
    மாதவத் திறனாம் பதம்
    மதிஇரவி ஆதிசுரர் அசுரர் அந்தரர் வான
    வாசிகள் வழுத்தும் பதம்
    மணியுரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர்
    சித்தர் மாமுனிவர் ஏத்தும் பதம்
    மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யஷர்கள்
    மதித்து வரம் ஏற்கும் பதம்



    வான இந்திரராதி எண்திசை காவலர்கள் – அஷ்டதிக் பாலர்கள்! இந்திரன் முதலான அஷ்டதிக் பாலர்கள்! மாதவத் திறனாம் பதம் – யாராயிருந்தாலும் மாதவம் செய்து அதற்க்கு தகுந்த படி அருள் பெறலாம்! திருவடி அருளும்! யாருக்கும் அருளும் திருவடி.



    மதியிரவி ஆதிசுரர் அசுரர் – சந்திரன் சூரியன் முதலான தேவர்களும்! அசுரர்களும்! அந்தரர்வான வாசிகள் – அந்தரத்திலே இருப்பவர்கள் அதாவது விண்ணிலும் மண்ணிலும் அல்லாது ஆவியாக அந்தரத்திலே இருப்பவர்! அந்தரர்! வானவாசிகள் விண்ணுலகத்திளிருப்பவர்கள் இப்படி எல்லாரும் வணங்கும் திருவடி ! பரமாத்மா! இறைவன்!


    மணியுரகர், கருடர், கந்தர்வர், விஞ்சையர், சித்தர், மாமுனிவர் என எல்லாரும் போற்றும் பரம்பொருள் இறைவன்! மாநிருதர், பைசாசர், கிம்புருடர், யஷர்கள் என்பாரும் பரமாத்மாவை எண்ணிதவம் செய்து அருள்பெற உதவும் திருவடி!


    இந்த பதம் என்ற திருவடியை கண்தான் என்று எப்படி சொல்கிறோம் என சிலருக்கு சந்தேகம் இருந்தால் இந்த பாடலில் தீர்ந்து விடும்!


    ராமலிங்க அடிகளாருக்கு வள்ளலார் என்ற பெயர் வந்ததன் முழு முதல் காரணம் ஞானத்தை வெட்ட வெளிச்சமாக சொன்னதால்தான் என்றால் அது மிகையாகாது! ஆம், பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக உள்ளதை உள்ளபடி சொன்னதால்தான் திரு அருட் பிரகாச வள்ளலார் என்று பெயர் பெற்றார்!


    ஆம், எல்லாரும் இறைவன் அருள் பெற வேண்டி இறைவன் திருவடி (அ) பதம் (அ) தாள் இதுதான் என வெட்ட வெளிச்சமாக திருவருட்பா முழுவதும் அள்ளி தெளித்தார் எங்கள் அருள் வள்ளல் ஆன வெள்ளாடை துறவி.


    இங்கு நாங்கள் எங்கள் ஞான குருவான வள்ளல் பெருமானை உயர்த்தி துதிபாடவில்லை



    உண்மையைத்தான் சொல்கிறோம் சொல்வதோடு மட்டும் அல்லாமல் வள்ளல் பெருமான் திருவருட்பாவில் பகர்ந்ததை எங்கள் குருவின் ஆசியோடு இங்கு பதிகிறோம்.


    இதுவரை பார்த்த 2 பாடல்களிலும் திருவடி பற்றியும் அந்த திருவடியை யார் யார் எல்லாம் பற்றினார்கள் என்பதை பார்த்தோம். இப்பொழுது பார்க்க போகும் பாடலில் திருவடி (பதம்) இதுதான் என சொல்லும் பாடல்.


    என் அறிவெனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய்
    இருந்த செங்கமலப் பதம்
    என் அன்பெனும் பதம் என் அன்பிற்க்கு வித்தாய்
    இசைந்த கோகனகப் பதம்
    என் தவமெனும் பதம் என் மெய்த்தவப் பயனாய்
    இயைந்த செஞ் சலசப்பதம்
    என் இரு கண்மணியானபதம் என் கண்மணிகளுக்கு
    இனிய நல்விருந்தாம் பதம்

    என் அறிவெனும் பதம் – நமக்கு அறிவு, தூய அறிவு துலங்குவது திருவடியிலிருந்த்துதான்!


    என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமலப் பதம் – அறிவு புற அறிவு, ஆன்ம அறிவு என இரு வகைப்படும்! கண்மணியின் முன், வினைதொகுதியிலிருந்து பெறும் அறிவு துன்பத்தை தரும் புற அறிவு! உள்ளே ஆன்மாவிலிருந்து துலங்கும் அறிவு ஆன்ம அறிவாகும். அங்கனம் புற அறிவுக்கு உள் உள்ள அறிவினுக்கு அறிவாய் விளங்குவது திருவடியே! இறைவனே! உள்ளிருந்து அறிவிப்பவன் பரம்பொருளே! அந்த அழகிய திருவடி சிவந்த தாமரை போன்றது!


    என் அன்பெனும் பதம் – கண்மணி முன்னிருந்து வரும் அன்பு.


    என் அன்பிற்க்கு வித்தாய் இசைந்த கோ கனகப் பதம் - கண்ணிலிருந்து வரும் அன்பு உள் இருக்கும் ஒளி தங்கமயமான தங்க ஜோதியிலிருந்து வரும் கருணையின் வெளிப்பாடே! நாம் காட்டும் அன்பிற்கு வித்தாய் ஆதாரமாய் இருப்பது. கண்மணி உள்ளிருக்கும் – இரு உதயத்தினுள் பொங்கி பிரவாகமாக விளங்கும் தங்க ஜோதியின் இரக்கமே, கருணையே வடிவான திருவடியேயாகும்!


    என் தவமெனும் பதம் - நாம் தவம் செய்ய வேண்டிய திருவடி!

    என் மெய்த்தவப் பயனாய் இயைந்த செஞ் சலசப்பதம் – என்னுடைய மெயில் உடலில் கண்மணியில் ஒளியாக இருக்கும் திருவடியை எண்ணி தவம் செய்ததன் பயனாய் என்னுள் உணரப் பெற்ற திருவடி! அது சிவந்த ஒளி! ஆடும் திருவடி! மேய்த்தவம் செய்வாரே அறிவர் திருவடியை!


    என் [​IMG]இரு கண்மணியானபதம் – நமது இரு கண்மணிகளாக உள்ளதே திருவடி! இறைவன்! பரம்பொருள்! [​IMG] என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – எனது இரு கண்மணிகளின் உள் ஒளியாக துலங்கி உள்சென்று அமுதம் வழங்கும், எனக்கு விருந்தளிப்பதும் இந்த திருவடியே!


    இதற்க்கு மேல் கொடுக்கலாம் என்றால் நிறைய பாடல்களை கொடுக்க முடியும் ஆனால் தற்பொழுது இது போதும் என்று கருதுகிறோம்! வள்ளல் பெருமான் திருவருட்பா முழுக்க முழுக்க பாடியிருப்பது இந்த பதம் என்னும் திருவடி தவத்தை பற்றித்தான். படித்து புரிந்து கொள்க.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!
    8—————————————————————2​
    இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
    [​IMG]
     
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Vallalar – நாம் எப்படி இருக்க வேண்டும்?

    கொஞ்சம் விளக்கி சொல்வது என்றால் நாம் குரங்கு குட்டி மாதிரி இருக்க வேண்டுமா அல்லது பூனை குட்டி மாதிரி இருக்க வேண்டுமா


    நான் ஒரு போதும் குரங்கு குட்டியாக இருக்க ஆசைபட்டதில்லை. ஏன் எனில் நீங்கள் குரங்கையும், குரங்கு குட்டியையும் பார்த்து இருக்கிறிர்களா


    ஆம், குரங்கு மரத்திற்க்கு மரமும், மாடிக்கு மாடி தாவும் போது சிறிது கவனித்து பாருங்கள். அப்படி குரங்கானது தாவும் போது அதன் குட்டியை பாருங்கள்! குட்டிதான் அதன் தாயை கெட்டியாக பிடித்திருக்கும்.


    தாய் குரங்கோ, நம்து குழந்தை (குட்டி குரங்கு) நம்முடன் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் அசாத்தியமாக தவ்வி கொண்டிருக்கும். இதை பார்க்கும் போதே எனக்கு மனம் பதறும்… எங்கே குட்டியானது விழுந்து விடுமோ என்று!


    [​IMG]


    ஆனால், நீங்கள் பூனையையும் பூனை குட்டியையும் பார்த்து இருக்கிறீர்களா… பூனை குட்டியானது அமைதியாக மட்டுமே இருக்கும், பூனையின் தாயே அந்த குட்டிக்கு தேவையானதை செய்யும்.



    ஆம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்ல வேண்டுமானால் தாயே அதை பாதுகாப்பாக வாயால் கவ்வி கொண்டு எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடும்.


    [​IMG]


    ஆம், நாம் பூனை குட்டி போல அமைதியாக இருக்க(சும்மா இருக்க) மட்டுமே முயற்ச்சி செய்தால் போதும் மற்றதெல்லாம் நமது குரு நாதர் வள்ளல் பெருமானே தாய் தன்மையுடன் இந்த சமய்த்தில் நாம் இது செய்ய வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்மை கொண்டு சென்று விட்டு விடுவார். இந்த இடத்தில் நாம் இருக்க கூடாது என்றாலும் அந்த இடத்தில்ருந்து நீக்கி பாதுகாப்பான இடத்திற்க்கு நம்மை மாற்றி விடுவார்.
    [​IMG]


    மேலும் ஒரு முறை குரங்கு குட்டியானது தாயை பிடித்திருக்கும் பிடியை விட்டு விட்டால் அவ்வளவுதான் அந்த குட்டியை மீண்டும் அந்த தாய் சேர்த்து கொள்ளாது.


    ஆனால் பூனை குட்டி வழி மாறி எங்காவது கிடந்தால் கூட அந்த தாய் பூனை மீண்டும் அந்த குட்டியை தேடி வந்து தூக்கி சென்று நல் வழிபடுத்திவிடும்.


    ராமலிங்க சுவாமிகளை பிடிப்போம் — சும்மா இருப்போம் — மரணமிலா வாழ்வு பெறுவோம்.
     
  5. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Vallalar – வள்ளலார் அறியாத இரக்கம்

    உயிர்கொலை தவிர்த்தல் மற்றும் பசியால் வருந்துவபவ்ர்களுக்கு காட்டுவது மட்டுமே இரக்கம் என்ற அளவில் நினைத்து கொண்டிருந்தால் அதை தாண்டிய இரக்கம் ஒன்று இருக்கிறது என்று வள்ளல் பெருமான் நமக்காக பாடிய வரி


    [​IMG]


    இரக்கம் என்ன என்பதை நான் அறிய வில்லையே என வள்ளலார் சொல்லும் பாடல்…


    “இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
    ஞான மேவுதற் கென்செயக் கடவேன்”


    இரக்கம் என்பது ஒர் எட்டு – துணை!
    நமக்கு இரக்கம் – அன்பு – கருணை பிறக்க வேண்டுமானால் நமக்கு எட்டு துணையாக வேண்டும்.


    எட்டு – 8 – அ – கண்மணி ஒளி!


    நம் கண்மணி ஒளியானது நமக்கு துணையானாலே நாம் இரக்கம் உள்ளவர் ஆவோம்!!!
    ஞானம் பெற என்ன செய்ய வேண்டும்? நம் கண்மணி உள் ஒளியை, ஞான சற்குருவின் திருவடி உபதேசம் மூலம் அறிந்து திருவடி தீட்சை பெற்று சும்மா இருந்து தவம் செய்தால் ஞானம் பெறலாம்! நம் அறிவு ஒளி பிரகாசிக்கும்!
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    “மண்ணிற்சில் வானவரை போற்றும் மதத்தோற் பலருண்டு
    நானவரைச் சேராமல் நாட்டு”


    (திருவருட்பா, மூன்றாம் திருமுறை, சிவநேச வெண்பா – பாடல் 99)

    இன்றைய உலகின் சீர்கேட்டை வள்ளல்பெருமான் அன்றே உரைத்திட்டோர்!?



    பூமியில் தோன்றி இறைவனப்போற்றி கூறிய ஒரு சில பெரியவர்களை போற்றி அவர் பெயரால் புதுப்புது மதங்களை உருவாக்கி விட்டனர் அறிவிலிகள்!



    மகான்கள் பெரியவர்கள் உபதேசித்த ஞானத்தை மறந்துவிட்டனர்! மறைத்தும் விட்டனர்! அப்பெரியவர்கள் இறைவனை அடையத்தான் வழிகாட்டினார்!?



    மடையர்கள் அவர்களை கடவுளாக்கி புதுப்புது மதங்களை உண்டாக்கி விட்டனர்! இறைவனை அடையவழி காட்டினால், இறைவனை விட்டுவிட்டு வழிகாட்டிகளை கடவுளாக்கி விட்டனர்! இன்றைய உலகின் ஒரே பிரச்சினை இது தானே! மதவாதம்தானே! எல்லா மகான்களும் இறைவனைத்தானே காண, அடைய வழிகாட்டினார்! ஏன் உணர மாட்டேன் என்கிறீர்கள்!?


    பள்ளிகூடத்தில் பாடம் நடத்திய வாத்தியார் சொன்னவற்றை புரிந்து சிரத்தையெடுத்து படிப்பவன்தான் உருப்புடுவான்! வெற்றி பெறுவான்! பாடம் சொல்லிகொடுத்த வாத்தியாரை புகழ்வதால் ஒரு பயனுமில்லை! இதை புரிந்து கொண்டால் சரிதான் உருப்படலாம்!


    உங்களை பிடித்திருக்கின்ற பேய்கள் சாதிப்பேய்! மதப்பேய்! இனப்பேய்! மொழிபேய்! இந்த பேய்களை ஒட ஒட விரட்டுங்கள்!!



    உலகிலுள்ள அனைவரும் இறைவன் படைப்பே! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே! உலக மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகளே! நாமனைவருக்கும், இறைவன் ஒருவரே!


    நீ யார் எனில் மனிதன்! உன்குலம் யாதெனில் மனிதகுலம்! உன் சாதியென்றால் ஒளிசாதி! இறைவன் பேரொளியல்லவா? பரமாத்மாதானே! நாம் அதினின்று தோன்றிய சிற்றொளி தானே! சீவாத்மா தானே! அப்படியானால் நமது சாதி ஒளி சாதிதானே!



    உன் மதம் எது என்றால்? என்னிடம் ஆணவமான மதம் உள்ளது அதையும் நாம் விட்டொழிக்க வேண்டும்! மதமே இல்லாத மனிதாபிமானம் உள்ள, ஆன்மநேயம் உள்ள அன்புள்ள மனம் மட்டுமெ உள்ளது எனக்கூற வேண்டும்! வாழ்ந்து காட்ட வேண்டும்! அன்பே கடவுள்! என் மதம் அன்பு மதம்!


    நான் – ஆன்மா – உயிர் – சீவன் என்பதை ஒளியாக கண்ணில் மணியில் துலங்குகிறேன் என்பதை அறிய வேண்டும்! உணர வேண்டும்!


    கருணையே வடிவான இறைவன் நம்மை அன்போடு அரவணைத்துகொள்வார்! இப்பாரில் நானிருக்கும் வரை இறைவா உன் புகழ்பாட வேண்டும்! கேட்கவேண்டும்! அருள்க!
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம்

    தமிழ் கூறும் நல்லுலகம் பெற்ற பெரும் பேறு சாத்திரத்தில் சிறந்த “திருமந்திரம்” இங்கே இருப்பது தான்! காலத்தால் முற்பட்ட மாபெரும் கருத்து கருவூலம்தான் “திருமந்திரம்”


    திருமந்திரம் எல்லாவற்றையும் கூறும் ஞான நூல்! உலக மக்கள் அனைவருக்கும் உரிய, உயரிய தமிழ் வேதம்! எல்லாருக்கும் பொதுவான நூல்!


    குறிபிட்ட பிரிவினருக்கு உரியது அல்ல! மனிதகுலம் மேம்பட வழிகாட்டும் மகத்தான வழிகாட்டி திருமந்திரம்!


    திருமூலர் கைலாயத்திலிருந்து வரும்போது மூலன் என்னும் மாடு மேய்ப்பவன் இறந்து கிடந்ததை கண்ணுற்றார். மூலன் இறந்ததால் அவன் வளர்த்த பசுக்கள் வருந்திகொண்டிருந்தன. வருந்தும் பசுக்களின் துயர்கண்டு இரங்கி, கூடுவிட்டு கூடுபாய்ந்து மூலன் உடலினுள் புகுந்து, பசுகூட்டத்தின் துன்பம் போக்கி, அவைகளை அதனதன் இடம் விட்டு திரும்புகையில், தன் உடல் காணாது திகைத்தார்.


    இறைவன் தன்னை மூலன் உடலிலேயே தங்கியிருக்க அருளியதை உணர்ந்தார். பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த மூலனாக இல்லாமல் ஜீவர்களாகிய பசுக்கள் போக வேண்டிய புரிய வேண்டிய அடைய வேண்டிய விஷயங்களை தெளிவுபடுத்த திருமந்திரம் பாடியருளினார். யோக நிஷ்டையிலிருந்து எழுந்து வருடம் ஒரு பாடல் என 3000 வருடங்களில் 3000 பாடல்கள் பாடியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நமக்கு பல செய்திகள் கிடைக்கின்றன.


    3000 வருடம் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார் என்றும், தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே சிறப்புற்று விளங்கியது என்றும் அறிய பெரும் வியப்பாக உள்ளது! மூலன் உடலில் புகுந்ததால் திருமூலராகி திருமந்திரம் 3000 பாடல்களை நாம் உய்யும் வண்ணம் நமக்கு தந்தருளினார்கள்.


    திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருமந்திரத்தின் பெருமையை மிகவும் வியந்து போற்றுவார். வியந்து போற்றினார் என்றால் என்ன அர்த்தம் வள்ளல் பெருமான் எந்த சன்மார்கத்தை சொன்னாரோ அதே சன்மார்கத்தை தான் திருமூலரும் சொன்னார். என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே என் திருமூலரே தன் வருகை பற்றியும் தமிழ் பெருமையயும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.


    இங்குள்ள ஞான நூற்கள் ஏராளம். அவற்றுள் தலையாதது! ஏன் உலகத்திலேயே தலை சிறந்தது என்று கூட கூறலாம்! சாஸ்திரங்களிலெல்லாம் உயர்ந்தது! மேன்மையானது திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகும். “சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம்”.
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தவம் எப்படி செய்ய வேண்டும்?

    இங்கு பெரும்பாலும் தவம் (Thavam/Meditation) கண் மூடி செய்வது என்றே தெரிந்திருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல. கண் திறந்து செய்வதே ஆகும்.

    கண்ணை மூடி செய்தால் மாயைதான் விளையாடி கொண்டிருக்கும். அதனால் தான் வள்ளலார் விழித்திரு என்று சொன்னார். ஒவ்வொரு கணமும் விழித்திருக்க வேண்டும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதைத்தான் Awareness என்று சொன்னார்கள்.


    மேலும் பொதுவாக நம்மிடம் ஒரு கருத்து வேறூன்றியிருக்கிறது. அதாவது இமைகளை திறந்து இருக்கும் போது புற உலகை பார்த்து கொண்டிருப்பதாகவும் மேலும் கண்ணை மூடி தவம்(Meditation) செய்யும் போது அகத்தில் உள்ளே போய் இறைவனை காண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆம், கண் திறந்து இருக்கும் போது புறக்கண் என்றும் கண்ணை மூடி இருக்கும் போது அகக்கண் என்றும் நாமாகவே நினைத்து கொண்டிருப்பதுதான் அப்பட்டமான அறியாமை!


    ஆம், கண்ணை மூடி கொண்டு இருந்தால் அமைதியாக இருக்கிறது இதுவே நம்மை உள்ளே கொண்டு போய் சேர்த்து விடும் என்று நம்புவதே ஒரு மாயைதான். கண்ணை மூடி இருந்தால் அது இருட்டு, கண் திறந்து இருந்தால்தான் வெளிச்சம் (ஒளி). வேறொரு விதமாக சொல்வதானால் கண்மூடி இருப்பது என்பது அமாவாசை கண் திறந்து இருப்பது என்பது பெளர்னமி. பெளர்னமி அன்று கிரிவலம் சுற்றுவதுதான் சால சிறந்தது என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். இப்படி ஞானமடைய எப்படி தவம் செய்ய வேண்டும் என்பதைத்தான் பக்தியில் சொல்லி வைத்தார்கள்.


    கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று சொல்லியாயிற்று. எப்படி என்பதை திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.


    “விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
    விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
    விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
    விளக்குடை யான்கழல் மேவலும் மாம”

    திருமந்திர பாடல் – 2816


    இவர்கள் ஏற்றி கொண்ட விளக்கு ஒரு ஞான குருவால் தூண்டி விடப்பட்ட விளக்கு தான். சிலர் குரு இல்லாமல் அடைந்து விடலாம் என்று பொதுவில் பேசி வருகிறாகள் ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று. குரு சுட்டி காட்டாத வித்தை பாழ் என்பதை கேள்விபடாதவ்ர்களே இப்படி பேசுபவர்கள். கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்களுக்குதான் குரு தேவையில்லை என்று சொல்லலாமே தவிர மற்றவர்களுக்கு இல்லை. நாம் கண்ணப்ப நாயனாரா இல்லையா என்பதை அவரவர் மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.


    ஒரு சற்குரு நம் மெய்பொருளில் (அ) திருவடியில் சுட்டி காட்டினால்தான் இந்த ஞான தவம் செய்ய முடியும். மேலும் அப்பொழுதுதான் நமது புறக்கண் அகக்கண்ணாக மாறுவதற்க்கான முதல் படி மேலும் தொடர்ந்து சீடன் தவம் செய்ய செய்யவே அது அகக்கண்ணாக மாறும். இதுதான் அகக்ண்ணே தவிர மற்றது அல்ல. ஆம், கண்ணை மூடி கொண்டு இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது எல்லாம் அகக்கண் இல்லை. கண்ணை மூடிட்டான் என்று சொன்னாலே தமிழில் அது செத்தவனைத்தான் குறிக்கும் என்பதை சிந்தித்து தெளிக!விழித்திரு என்பது இதுவே!





    கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக இங்கு சொல்லவில்லை. ஏன் திறக்க வேண்டும்? எப்படி திறக்க வேண்டும்? மேலும் நமது மெய்பொருளில் (அ) திருவடியில் ஒளிந்திருக்கும் ஞான இரகசியங்கள் எல்லாம் எங்கள் தளத்தில் வெட்ட வெளிச்சமாக போட்டிருக்கிறோம். மேலும் வெளிச்சம் ஆக்குவோம்.


    நமது திருவடியான மெய்பொருளின் தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் சூட்சுமங்கள் அனைத்தும் தெரிய வேண்டும். தெரிந்தால்தான் கண்ணை திறந்து எப்படி சும்மா இருக்க முடியும் என்பது தெரியும்! ஞான தவம் என்பது ஒன்றும் அல்ல! சும்மா இருப்பதுதான். ஆம், எல்லா ஞானிகளும் சும்மா இருந்தே சுகம் பெற்றார்கள். சும்மா இருப்பது எப்படி என்றால் முதலில் திருவடி (மெய்பொருள்) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
     
  9. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தவம் பற்றி கேள்விகள் - 1
    .
    தவம் செயவது எப்படி என்ற பதிவை படித்து கொண்டு எங்களுக்கு வந்த கேள்விக்கான பதிலாக இந்த பதிவை வைக்கிறோம்.
    .​
    கண்ணை மூடினால் எப்படி மாயை விளையாடும் என்கிறிர்கள். கண்ணை திறந்தால் உண்மை எப்படி விளங்கும் என்கிறிர்கள்?
    .​
    எப்பொழுது கண்ணை மூடுகிறீர்களோ அப்பொழுது இருந்தே கற்பனை தொடங்கி விடும். இதை எப்படி இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் கண்ணை மூடி கொண்டு நம் வீட்டில் இறந்து போன மூதாதையர்களை கூட நம் மனக்காட்சியில் கொண்டு வர முடியும் அதே போல் வள்ளலார் உருவத்தையும் கொண்டு வர முடியும் இதனால் இறந்து போனவர்களும் இறவா நிலை பெற்ற ஞானிகளும் ஒன்றாகி விடுவார்களா? ஆனால் இதையே விழித்திருந்து தவம் செய்யும் போது ஒருகாலும் இறந்து போனவர்கள் வர இயலாது! இப்படி தவம் செய்யும் போது சாகா வரம் பெற்ற ஞானிகள் மட்டுமே காட்சியில் வர முடியும். இதுதான் உண்மை!
    .​
    இதேதான் வள்ளல் பெருமான் சொன்ன திரைகளுக்கும் பொருந்தும் கண்ணை மூடி கொண்டு இந்த நிறத்தில் எனக்கு திரை தெரிகிறது என்று நீங்களே கூட கற்பனை செய்து கொண்டு வந்து விட முடியும். ஆனால் விழித்திருந்து செய்யும் போது ஒருகாலும் உங்கள் முன்னால் கற்பனையாக அது தோன்றாது. அப்படி தோன்றினால் அது கற்பனை அல்ல உண்மை காட்சி. அதாவது ஞான தவத்தில் வரும் அனுபவங்கள்.
    .​
    விழித்திரு! எக்கணமும்!

    .​
    இப்படி விழித்திருந்து தவம் செய்வது என்பது இங்கு கட்டுரை அளவிலே கொடுக்க பட்டிருக்கிறது. தக்க குருவை நாடி உங்கள் மெய்பொருளில் உணர்வை பெற்று கொண்டால் மட்டுமே இந்த தவத்தின் பலன் தெரியும் என்பதையும் இந்த இடத்தில் சொல்ல கடமை பட்டுள்ளோம்.
    .​
    .​
    .​
    கண்ணை திறந்து செய்தால் கவனசிதறல் ஏற்படுகிறது (அ) Concentration செய்ய முடிய வில்லை அதனால்தான் கண்ணை மூடி செய்ய செய்கிறோம் என்று சொல்வது பற்றி?
    .​
    இதற்க்கு முதல் காரணம் சித்தர்களும், ஞானிகளும் சொன்ன மெய்பொருள் பற்றி தெறியாமல் இருப்பதே காரணம். ஆம், திருவடி பற்றி தெறிந்திருந்தால்தானே கண் திறக்க வேண்டும் என்று தெறிந்திருக்கும்.
    .​
    இரண்டாவது மெய்பொருள் பற்றி தெறிந்தும் சிலர் தக்க குருவை நாடி மெய்பொருளில் உணர்வை பெறாமல் இருப்பதுதான் காரணம்!
    .​
    மனம் இல்லாமல் அழிப்பதுதான் தவத்தின் வேலை என்றாலும் எப்படிதான் மனம் அலை பாய்ந்தாலும் உங்கள் மெய்பொருளின் உணர்விலே நில்லுங்கள். அந்த உண்ர்விலே நிற்க நிற்க நம் கர்மாக்கள் தீயில் போட்டு கொளுத்தபடும். மனமும் அடங்கும்! இதுதான் மனம் அடங்க சிறந்த வழி! இதைத்தான் ஞானிகள் செய்தார்கள். மூட்டை மூட்டையாக சேர்த்து வைத்திருக்கும் கர்மாவை பொசுக்க பொசுக்கவே மனம் சிறிது சிறிதாக அடங்கும். மனம் அடங்க அடங்கவே கர்மாவும் சீக்கிரம் இல்லாமல் ஆக்கப்படும். அதுதான் இந்த தவம்.
    .​
    இதை விட்டு விட்டு எனக்கு கவனம் சிதறுகிறது என்று நீங்கள் கவலை பட்டு வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. அப்படி செய்தால் உங்கள் வினைதான் மீண்டும் கூடி போகும்! ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். உங்கள் மெய்பொருளில் உள்ள உண்ர்வுடன் புணர்ந்து சும்மா இருங்கள். எல்லா ஞானிகளும் இப்படித்தான் சும்மா இருந்தார்கள்!
    .​
    இதைத்தான் வள்ளல் பெருமான் சொன்னார்
    .​
    “ஒருமையுடன் உனது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்”
    .​
    நாம் ஒருமையுடன் மலரடியை நினைக்க வேண்டும்.. இப்படி நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து சும்மா இருந்தால் போதும். எல்லாம் செயல் கூடும்!
    .​
    சும்மா இருப்போம் சுகமாய் வாழ்வோம்!
     
  10. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    மறு பிறவி
    இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம் மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?


    இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து இனியும் பிறப்பது அல்ல!?
    இந்த பிறவி இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குதான் நம் ஞானிகள் வழி கூறுகிறார்கள்.


    அது என்ன? எப்படி? நாம் ஞான குரு ஒருவரை பெற்று உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே மறுபிறவியாம்! அதாவது உடலால் பிறந்த நாம் உணர்வால் நம் சூட்சம உடலை பிறப்பிக்க ஒரு குருவை பெற்றே ஆகவேண்டும்!


    யார் நம்மை, சூட்சம சரீரத்தை பிறப்பிக்க செய்கிறாரோ அவரே குரு! நம் வாழ்வின் பெரும் பேறே இதில்தான் இருக்கிறது! ஞானமடைய இதுவே வழி!


    நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும தேகம் உள்ளது! முதலில் அதை உணரவேண்டும்! குருவானவர் தீட்சையின் மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்க செய்கிறார்!


    ஸ்தூல தேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறு பிறவி! பிறந்த இப்பிறவியிலே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்! இதை யார் உணர்கிறார்களோ அவரே ஞானம் பெறுகிறார்!


    வேதங்களில் சொல்லபடுவது “துவிஜன்” இரு பிறப்பாளன் என்பதே!


    மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!


    “மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்” மறுபடியும் பிறந்தால் தான் பரலோக ராஜ்யம்!? எப்படி?
    .
    எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ? அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!


    அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழிகூறும் உபநயனம்!
    வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்!
    துவிஜன் – மறுபடியும் பிறப்பவன்!


    பிரம்மமாகிய ஒளியை – கடவுளை அடைய – உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!


    குரு மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.


    “மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை” என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!
    பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்!
     

Share This Page