Dear All இன்றைய காலத்தில் அழகுக்காக மக்களை கவர்ந்திருக்கும் பல விதமான சோப்புகள், பவுடர்கள் வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் முகம், கை, கால்களில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிப்படையும்.. மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் போதிய அளவு சத்துகள் இல்லாததாலும் தேவையான அளவு தண்ணீர் பருகாததாலும் மிகசிறிய வயதில் முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. பல வித சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலே இயற்கை குளியல் பொடிகளை தயார் செய்து பயன்படுத்தினால் பாதுகாப்பும் அழகும் நம் வசமே இருக்கும். சோம்பு-100கிராம் கஸ்தூரி மஞ்சள்-100கிராம் வெட்டி வேர்-200கிராம் அகில் கட்டை-200கிராம் சந்தனத்தூள்-300கிராம் கார்போக அரிசி-200கிராம் தும்மராஷ்டம்-200கிராம் விலாமிச்சை-200கிராம் கோரைக்கிழங்கு-200கிராம் கோஷ்டம்-200கிராம் ஏலரிசி-200கிராம் பாசிபயறு-500கிராம் இவை அனைத்தையும் தனி தனியாக காயவைத்து அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்து தினமும் குளிக்கும் போது உங்களுக்கு தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து பால் அல்லது தண்ணீர் சேர்த்து குழைத்து உடல் முழுவதும் பூசி 15 நிமிடத்திற்கு பின் குளித்தால் உடல் தூற்நாற்றம் நீங்கி உடல் நறுமணம் வீசும். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் தேமல், படர்தாமரை,சொறி, சிரங்கு, கரும்புள்ளி, முதலியவை மறையும். இதை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். Basuradhu