ஷீரடி திருவடி சரணம் ! நீ அரசனாய் அமர்த்தலாய் அமர்ந்து இருக்கும் அந்த அழகான அரிமா ஆசனம் எங்களின் அகந்தை அழித்து தர்ம பரிபாலனம் செய்கிறது நீ ஆண்டியாய் அசத்தலாய் அவதரித்து இருக்கும் அந்த ஷீரடி புண்ணியத் தலம் எங்களின் பாவம் தொலைத்து கர்ம பரிபாலனம் புரிகிறது கர்மத்தைக் கழித்து தர்மத்தை எங்கும் நிலை நாட்டி அரசு புரிந்து கொண்டிருக்கும் எங்கள் ஸாயிக்கு அந்த ஷீரடி திருவடிக்கு சரணம் சரணம் சரணம் உந்தன் ஆசிகள் என்றும் எமக்குத் தரணும் தரணும் தரணும்!