மஹாபாரதக் கதைகளில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்தக் கதை. துரியோதனனுக்கும் தருமனுக்கும் ஆச்சார்யார் துரோணர் ஒரு போட்டி வைத்தார் . ஒரு தங்கக் காசை ஒவ்வொருவரிடமும் கொடுத்து, ஏதேனும் பொருள் வாங்கி, அவர்களுக்குத் தந்துள்ள பெரிய அறையை நிரப்புமாறு கேட்டுக்கொண்டார். துரியோதனன் தன் பணத்தில் நிறைய வைக்கோலை வாங்கி அந்த அறையை நிறைத்துவிட்டானாம் தருமனோ, ஒரு அழகிய விளக்கை வாங்கி, அதில் எண்ணையும் திரியும் இட்டு, அந்த தீப ஒளியால் அறை முழுதும் வெளிச்சம் பரவச் செய்தானாம். மனிதர்களில் இந்த இரு வகைகளும் உண்டு. மணிக் கணக்கிலே பேசி, அறுவை செய்து, ஒரு விஷய ஞானமும் இல்லாது நேரத்தை வீணடிப்பார்கள் சிலர். அதே போல, பல பக்கங்களை எழுதித் தள்ளினாலும், ஒரு நல்ல விஷயமும் சொல்லத் தெரியாது, கதை பண்ணுவார்கள் சிலர். இவர்களைத்தான் 'வைக்கோல் மனிதர்கள்' என்று குறிப்பிட்டேன்! ஞான ஒளியே தராது பேசுவதும், எழுதுவதும், பிறர் நேரத்தை வீணடிப்பதும் இவர்களது தலையாய நோக்கம். இந்த வகை மனிதர்களிடமிருந்து ஒதுங்கி இருக்கப் பழகுவோம்! :hide:
When there is knowledge, the ignorance disappears. That is what Mahabharath story is telling us. Viswa
Hai RR, well placed the lines. One word should hit everybody where it has its own way to correct the human