'அடியாத மாடு படியாது' என்பது போன்ற சில அழியாத பழமொழிகளை வைத்துக்கொண்டு, தவறு செய்யும் குழந்தைகளை அடித்து, சிலர் தவறு இழைப்பது மிகச் சகஜம் நமது நாட்டில்! மென்பொருள் பணிக்காக நார்வே நாடு சென்ற, மென்பொருள் பொறியாளர், வன்மையாகத் தம் பிள்ளையைத் தண்டித்துவிட, அதனால் பயந்த பிள்ளை, தண்டனை பற்றி பள்ளியில் கூறிவிட, வந்தது வினை பெற்றோருக்குச் சட்ட வடிவில்; சொன்னது அவர்களுக்குச் சிறைவாசமே என்று! வெறும் கடுஞ்சொற்கள் கூறியதாகப் ,பெற்றோர் கூறும் சொற்களை நீதி மன்றம் ஏற்கவுமில்லை! சிறுவனின் உடலிலே, வடுக்களும், காயங்களும், உறுதியாகத் தெரிவதாகத் தெரிவித்து, அதனால் சிறைவாசம் தீர்ப்பாக வரும் என்றும் அறிவித்து, சிறையில் அடைத்தது சிறுவனின் பெற்றோரை! தந்தை பெற்றார் பதினெட்டு மாதம் தண்டனை; தாயும் பெற்றாள் பதினைந்து மாதம் தண்டனை! மென்பொருள் பணி செய்தால் மட்டும் போதாது! மென்மையான குணமும் பெறுதலே நலமாகும்! :exactly: