யாரிங்கே வந்தது? கதவை யாரிங்கே அசைத்தது? காற்று அடித்திருக்கும் இல்லை கடிதமேதும் வந்திருக்கும் உடைத்து சென்றவள் மீண்டும் ஒட்ட வருவாளா? நேற்று போனவள் மீண்டும் நெருங்கி வருவாளா? என்னைக் காணாத ஒரு நாள் கூட ஒரு யுகம் என்றாள் அவளைக் கண்டே ஒரு யுகமானது இன்று என் கண்களிலே 'நான் கரைந்தேன்' என்றாள் இன்று கண்டு பிடிப்பேனோவென்று மறைந்தே நின்றாள் என் சிரிப்பிலே 'நான் சிறையானேன்' என்றாள் என்னைக் காதல் சிறையிலே அடைத்து அவள் மட்டும் ஏன் விடுதலையானாள்? தமிழே மறந்து போனது அவள் பற்றி பேசும் வார்த்தைகளன்றி வேறு தமிழே மறந்து போனது மொழி மறந்தேன் ; உறங்கும் விழி மறந்தேன் சிறு சத்தம் கேட்டால் கூட கதவை திரும்பிப் பார்கிறேன் யாரிங்கே வந்தது? கதவை யாரிங்கே அசைத்தது? காற்று அடித்திருக்கும் இல்லை கடிதமேதும் வந்திருக்கும்
மெல்ல திறந்தது கதவு என்றால், சந்தேகமே இல்லை..இது காற்று விடு தூது தான். Nicely potrayed the feelings crv..Sir! sriniketan