மௌனம் பலரும் போற்றுவது சிலருக்கு ஆயுதம் எனக்கோ புரியாத புதிர் ஊமையாய் இருந்திட்டால் விழியில் உரைத்திடுவேன் என் விழிமொழியை நீ உணர்வாய் என்றால் எண்ணத் துணிவின்றி இருந்திட்டால் என் அச்சம் உணர்த்திவிடும் எண்ண மறந்தவற்றை உள்ளம் வலிக்காது உரையாட தானே விருப்பம் உன் மௌனத்தை கலைத்து நீ நேசிக்கும் மௌனத்தை உனக்கு பரிசளிக்கவே விரும்புகிறேன் காலத்தின் துணையோடு .... நிரந்தர அமைதியில் !
@jskls தவறு தவறு .நிரந்தர அமைதி தரும் பரிசை விட ஒரு நாள் அமைதி மிக சிறந்த பரிசு .கண் விழித்திருக்கும் போது மெளனமாக இருப்பது மிகப் பெரிய பரிசு .எதிராளிக்கு அல்ல உங்களுக்கு .ஒரு நாள் மௌன விரதம் இருந்தால் மனதில் தோன்றும் பூரிப்புக்கு அளவே இல்லை .ஆனந்த ஊற்று பெருக்கெடுத்து ஓடும் .காட்டாற்று வெள்ளம் போல் இல்லாமல் சலசலவென ஓடும் நீரோடை கூரிய கற்களையும் மென்மையாக்கி விடும் திறன் கொண்டது .
@periamma நான் மௌனத்தை முயற்சி செய்வது பெரும் பாடு ... முயன்று பார்க்கிறேன் சிலரின் மௌனம் மிகவும் வேதனை அளிக்கும்.