மழை ஒரு வரமாய் ********************* மழையை காணோம் ஏதோ ஒரு சோகம் தீடீரரென்று உருமுகிறது மேகம் கலைக்கிறது காற்று மெல்லிசையுடன் சில்லென்று சிறு சிறு துளிகள் நிலத்தில் பட பட மண் வாசனை மணம் கமழ ஆராவாரத்துடன் ஆரம்பித்தது மழை என் மனமோ இசைக்க ஆசையிட மழை மழை வருது துள்ளி துள்ளி வருது வளத்தை அள்ளி அள்ளி தருது மாரி பொழிய சொல்லுது மாறி மாரி பொழியுது என் மனமோ உவகையில் துள்ளுது இடியும் இசையாய் முழங்குது மின்னல் படம் எடுக்குது மழை அதனில் நடிக்குது குளிர் காற்று கானம் படிக்குது நீர் எங்கும் நிறையுது பசுமை எங்கும் குமியிது இம்மழை அளவோடு இசைக்குது அது என்றுமே இனியது கோடையில் நல்வாடை இறைவன் கொடுத்த கொடை பெருமழை என்னும் வரமாய் Written by Chitrajaraika