பழயன கழிந்து புதியன புகுதலே தை பொங்கலின தாத்பர்யம் புது மண் குழைத்து புது அடுப்பு உருவாக்கி புது பனை ஒலை வெட்டி அடுப்பெரிக்க விறகாக்கி புது நெல் அவித்து புத்தரிசியாக்கி புது பானை அடுப்பில் வைத்து அன்று கறந்த பசும்பாலுடன் தேங்காய் உடைத்த நீர் எடுத்து பானையில் ஊற்றி அரிசி களைந்து அதனையும் பானையின் விளிம்பு வரை ஊற்றி பால் தேங்காய் தண்ணீர் அரிசி நீர் ஆகிய முப்பெரும் பாலும் கலந்த பானையை சூடாக்கி பால் பொங்கி வழியும் போது குலவை இட்டு கை நிறைய அரிசி எடுத்து பானையை மூன்று முறை சுற்றி அரிசியை பானையில் இட்டு பொங்கல் இட வேண்டும் பால் பொங்கிச்சா வயிறு வீங்கிச்சா என்பதே எங்கள் ஊர் பொங்கல் வாழ்த்து அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பால் போல் மனமும் நீர் போல் தெளிவும் வார்த்தையில் இனிமையும் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன் ருக்மணி
அம்மா.....இந்த வருடமும் பொங்கல் விழாவிற்கு ஊரில் இல்லையே என மிகுந்த ஏக்கம் ... உங்கள் வரிகளில் கொஞ்சம் நிம்மதி ..உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா....நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
அம்மா உங்கள் தேன் மதுரத் தமிழோடு தந்த தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கு நன்றி!!!!!!!!!!!!!!! எல்லோரும் எப்பொழுதும் எல்லாமும் பெற்று இனிதே வாழ என் இதயங்கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
எல்லோரும் எல்லா நலனும் பெற்று இன்புற்று வாழ என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!! உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!
எளிய வார்த்தைகள் கொண்டு ஏற்றமான வாழ்த்தினைச் சொன்ன பெரியம்மாவுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். -ஸ்ரீ
Periyamma Arumaiyana varthaigalilll Pongal vazhuthu. Ungalukku yengal pongal vazthukkal. I want to celebrate pongal in way described by you??? But our pongal is always cooker pongal. MY HEARTY PONGAL WISHES TO ALL andal
அம்மா என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் செய்யும் போது நடக்கும் நிகழ்வுகளை விவரித்த உங்கள் கவிதை வரிகள் அருமை