இந்திய மண்ணில் வேர் இல்லை என்று நினைக்காதே மகளே இங்கு விதைத்த விதை மிக வீரியமானது சமுத்திரத்துக்கு கீழ் பரவி அதனையும் கடந்து வேறொரு மண்ணில் விருட்சமாகி மணம் பரப்பும் மலர்களும் சுவை நிறைந்த கனிகளும் தாங்கி நின்று புகழ் சேர்க்கும் நீவிர் நீடுழி வாழ்க ஆணிவேரின் கிளை வேர்களாக பலரும் உண்டு உனை சுற்றி அன்பு லக்ஷ்மி என் ஆசீர்வாதங்கள்
என்னை நெகிழ செய்தது தங்கள் ஆத்மார்த்தமான அன்பு கவிதை ! ஒரு துளி கண்ணீர் பெற்றோரின் நினைவில் அதிகாலையில். விழி நிறைத்தது தங்கள் அன்பு வாழ்த்துக்களும் ஆசியும் இப்பொழுது உங்கள் வடிவில் வார்த்தையில் பெற்றவர்களின் ஆசி எனை தேடி வந்தது மிக சிறந்த பரிசு. நன்றி என்று ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது
மிகவும் அருமை பெரியம்மா ! உங்கள் கவிதைப் பரிசு நம் லக்ஷ்மியின் இதயம் நிறைக்கும் பரிசு ! நான் எண்ணினேன், நீங்கள் செய்து விட்டீர்கள் ! மிக்க மகிழ்ச்சி ! பிரியமுள்ள லக்ஷ்மி , என்றும் மனதில் ஆனந்தமும்,அமைதியும் நிரம்பி நீங்கள் நீடுழி வாழ வேண்டுமென ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் ! என்றும் அன்புடன், பவித்ரா