1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசமுள்ள வான்சுடரே - 8!!

Discussion in 'Stories in Regional Languages' started by priia192, Feb 10, 2012.

  1. priia192

    priia192 Bronze IL'ite

    Messages:
    16
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அர்ஜுன் புது வீடு பார்த்து குடிபோக உதவி செய்த போதெல்லாம் வர்ஷினி என்ற பெயர் மஞ்சரி'யின் காதில் விழுந்து கொண்டே இருந்தது. வர்ஷினி அவன் பாட்டி வீட்டுக்கு பக்கத்தில் குடிஇருந்த பெண். இப்பொழுது நியூஜெர்சி'இல் இருக்கிறாள். பாட்டி வரும் தகவல் தெரிந்ததினால் அவளை சந்திங்க இங்கு வர போகிறாள். சிறுவயதிலிருந்தே அர்ஜுனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் அர்ஜுன் சரியாக பேசாததினால் அவள் அவனிடம் அதிகமாக பேசியதில்லை
    .
    பாட்டி வரும் நாளுக்கு ஒரு நாள் முன்பே வர்ஷினி அர்ஜுனை பார்க்க வந்துவிட்டாள். அவளை அழைத்து போக அர்ஜுனும் மஞ்சரியும் ஏர்போர்ட் வந்து இருந்தனர். நீண்ட நாள் கழித்து அர்ஜுனை பார்த்த வர்ஷினி அசந்து விட்டாள். அர்ஜுன் இப்படி அழகான வாலிபனாக இருப்பான் என்று கற்பனை செய்து கூட பார்க்காத வர்ஷினி அவன் அழகில் மயங்க ஆரம்பித்தாள்.


    தூரத்திலிருந்து வரும் போதே வர்ஷினியை மஞ்சரியிடம் காட்டிவிட்டான் அர்ஜுன். அவளது முக பாவங்களை பார்த்து கொண்டே இருந்த மஞ்சரிக்கு அர்ஜுனை அவள் பார்த்த பார்வை சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் நெருங்கி வந்த பின் அர்ஜுன் வர்ஷினியை அறிமுக படுத்திய போதும் அவள் அளவாகவே பேசினாள். அதற்கெல்லாம் ஈடு கொடுத்து வர்ஷினி வாய் ஓயாமல் பேசி கொண்டே வந்தாள். மஞ்சரியின் ஒதுக்கத்தை பார்த்த அர்ஜுன் அதற்கான காரணம் தெரியாமல் குழம்பி போனான். அதனால் அவனும் வர்ஷிணியின் கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு நிறுத்தி கொண்டான்.


    அவர்கள் தங்கி இருக்கும் அபார்ட்மென்ட் வந்தவுடன் அர்ஜுன் அவர்கள் இருவரிடமும் விடைபெற்று கொண்டு சென்றான். மஞ்சரியுடன் சென்ற வர்ஷினி அவளை அர்ஜுனை பற்றிய தகவல்களை கேட்டு குடைந்து விட்டாள். அவள் கேட்க கேட்க மஞ்சரிக்கு அவள் மேல் கோபம் அதிகமாக ஆகி கொண்டே போனது. அவளை எதுவும் சொல்லமுடியாமல் அவள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
    அடுத்தநாள் காலை பாட்டி வந்துவிடுவார்கள் அவர்களை அழைத்து வர கிளம்ப வேண்டும் என்பதால் சீக்கிரம் தூங்க போக வேண்டும் என்று மஞ்சரி சொல்லியவுடன் தான் வர்ஷினி தூங்க ஆரம்பித்தாள்.


    அடுத்த நாள் காலை மஞ்சரி சீக்கிரமாக எழுந்து தயாராகி விட்டு அர்ஜுனுக்கு போன் செய்தாள். அவனோ வர்ஷிணியும் ரெடி ஆகிவிடாளா என்று கேட்டான். அதற்கு மஞ்சரி பல்லை கடித்து கொண்டு அவள் தூங்கி கொண்டு இருக்கிறாள் என்று சொன்னாள். அவளுக்கு வர்ஷினி அவர்களோடு வருவது பிடிக்கவில்லை. ஏனென்று சிந்தித்து பார்த்த மஞ்சரி இத்தனை நாள் அவர்கள் இருவர் மட்டுமே எல்லா பக்கமும் சென்று கொண்டு இருந்ததால் புதிதாக ஒருவர் வருவது தனக்கு பிடிக்கவில்லை என்று தன்னை சமாதான படுத்தி கொண்டாள்.


    வர்ஷினி முதல் நாளே பாட்டியை அழைத்துபோக தானும் வருவேன் என்று சொல்லி இருந்ததினால் அர்ஜுன் அவளையும் அழைத்து கொண்டு போகலாம் என்று மஞ்சரியிடம் சொன்னான்.


    மஞ்சரி அதற்கு, "தூங்கிட்டு இருக்குறவங்களை என்னால எழுப்ப முடியாது" என்றாள்.


    என்னடா இவள் தீடிரென்று மாறி விட்டாள் என்று அதிசயித்த அர்ஜுன் அவளை வர்ஷினியை எழுப்பி ரெடி ஆக சொல்ல சொல்லிவிட்டு போன்'ஐ வைத்து விட்டான். மஞ்சரியும் வேறு வழி இல்லாமல் வர்ஷினியை எழுப்பி அவள் தயாராகி வரும் வரை அவளுக்காக காத்து இருந்தாள்.


    ஒருவழியாக மூவரும் கிளம்பி விமான நிலையத்தை அடைந்தார்கள். பாட்டியை பார்த்ததும் அர்ஜுன் முதலில் சென்று அவர்களை அப்படியே அணைத்து கொண்டான். பேரனை அணைத்து கொண்ட பாட்டி அவன் கூட இருந்த பெண்களை பார்த்து புன்னகை பூத்தார். மஞ்சரியை கண்டு கொண்ட பாட்டி அவளை கூர்ந்து பார்த்து அவளது அழகில் பேரன் மயங்கியது ஆச்சரியம் இல்லை என நினைத்தார். ஏனென்றால் மஞ்சரி அதிகமான ஒப்பனை இல்லாமலேயே அழகாக தெரிவாள். அவளது பணிவான குணமும் யாரையும் அவளிடம் ஈர்த்து விடும்.


    பாட்டியை அழைத்து கொண்டு தனது புதிய வீடிற்கு போன அர்ஜுன் பாட்டியை அவர்களது அறைக்கு அழைத்து கொண்டு போய் அவர்களை ஒய்வு எடுக்க வைத்தான். வர்ஷினி பாட்டியிடம் பேச பிரிய பட்டாள் ஆனால் அர்ஜுன் பாட்டி ஒய்வு எடுத்த பிறகு பேசிகொள் என்றுவிட்டதால் மஞ்சரியும் வர்ஷிணியும் மதியம் வருவதாக சொல்லி சென்றார்கள்.

    பாட்டி ஒரு மணி நேரம் தூங்கி விட்டு பேரன் இருக்கும் அறைக்கு வந்தார். வந்தவரிடம் மஞ்சரி வர்ஷினி வந்ததிலிருந்து நடந்து கொண்ட முறை பற்றி தனது சந்தேகத்தை எழுப்பினான். அதற்கு பாட்டி மஞ்சரிக்கு உன்மேல் உள்ள காதலின் வெளிப்பாடு தான் இது என்றார். அவள் மனதில் காதல் இருப்பதால் தான் வர்ஷினி இவனோடு உரையாடுவதால் அவளுக்கு கோபம் வருகிறது என்று சொன்னார்.


    இதை கேட்டதும் அர்ஜுனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. இதுவரை மஞ்சரியிடம் ஒரு அறிகுறி கூட இல்லாமல் தனது காதலை அவள் எப்படி எடுத்து கொள்வாளோ என்று குழம்பி கொண்டு இருந்தவனுக்கு சாதகமாக ஒன்று நடந்ததில் அவன் ரொம்பவே மகிழ்ந்து போனான். மஞ்சரியின் கோபத்தை அதிக படுத்தி அவளை ஈர்க்க வேண்டும் என்று முடிவு செய்த அர்ஜுன் வர்ஷிநியிடன் இனி தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

    ஆனால் பாவம் தன் திட்டத்தால் மஞ்சரி அவனை வெறுத்து ஒதுக்குவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
     
    4 people like this.
    Loading...

  2. priia192

    priia192 Bronze IL'ite

    Messages:
    16
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    இதுவரை டைப் பண்ணினதை ஒரு சின்ன போஸ்ட்'௮ போட்டு இருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிகோங்க. சீக்கிரம் அடுத்த அப்டேட் குடுக்கறேன்.
     
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    very interesting things are going to happen. eager to read the next.
     
  4. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Priia,

    Indha arjun thannoda love kku thaane villan ah iruppaan pola irukke..ippavadhu manju thannoda love ah realise pannuvaalanu paarkalaam..waiting eagerly for next one!!!!!

    Vasupradha.S
     
  5. bsaranya

    bsaranya Senior IL'ite

    Messages:
    56
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hai priia,kadhalil sodapuvadu eppidi enru arjun ini sodapa pogirar.nice update.
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    summave varsini arjun kooda pesi manju silent aayitta...
    arjun sikaram varsini ah pack panni oorokku anuplam...
    manju va seendi kasta pada poran
     
  7. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi...
    after very long time reading your update....
    arjun vennumne vilayada porana manju feelings kooda...
    will manju tolerate it???
     
  8. soudha

    soudha Junior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    hi priya
    pl iam waiting for next update
     
  9. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    pls post next update
     
  10. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female

Share This Page