சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”. யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.”
சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய். சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
மனைவி: உங்க நண்பருக்கு பார்த்த பொண்ணு நல்லவ இல்லீங்க. நீங்க கொஞ்சம் சொல்ல கூடாதா? கணவன்: நான் எதுக்கு சொல்லணும், அவன் எனக்கு சொன்னானா?
ஆறுதல் சொன்ன பெண் : ஹூம்...உன் மாமியார் கிணற்றில் தவறி விழப்போய் உன் பாடு இனிமேல் ஜாலிதான். எனக்கும் நல்ல நேரம் வந்தால் இப்படி ஏதாவது நடக்கும். மாமியாரை இழந்த பெண் : இதெல்லாம் தானா நடக்கும்னு இருக்கக்கூடாது. நாமதான் ஸ்டெப் எடுக்கணும் !
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க? கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்..ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்!